search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா நவராத்திரி"

    • மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • “தஸ்ராத்” என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.

    மைசூர் சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அரசு சார்பில் இங்கு மிகப் பிரமாண்டமான ஊர்வலம் நடத்தப்படும்.

    ஒரு காலத்தில் மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன் மைசூர் சாமுண்டீசுவரியை ஒன்பது நாட்கள் இரவு நேரத்தில் சென்று வணங்குவது வழக்கம்.

    10வது நாளான விஜயதசமி நாளில் போருக்கு புறப்பட்டு செல்வர்.

    இதன் மூலம் தேவி அருளால் வெற்றி வாகை சூடி மகிழ்வர்.

    இன்றும் மைசூரில் தசரா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    "தஸ்ராத்" என்றால் பத்து இரவுகள் என்று பொருள்.

    இச்சொல்லே திரிந்து "தசரா" என்று வழங்கப்படுகிறது.

     முதல் ஒன்பது நாளும் நவராத்திரியாகவும், பத்தாம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடுகிறார்கள்.

    நவராத்திரியின் போது புத்தாடை உடுத்தி மகிழ்கின்றனர்.

    ×