search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem District News"

    • கொளத்தூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (55). கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
    • பலமாக காற்று வீசியதால் விளக்கில் இருந்த தீப்பொறி ஆட்டுப்பட்டியில் பட்டு மளமள என தீ பிடித்து எரிய தொடங்கியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (55). கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு மாலை வழக்கம் போல சக்திவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் அடைத்துள்ளார்.

    இந்நிலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆட்டுபட்டியில் விளக்கேற்றி விட்டு செல்லம்மாள் வீடு திரும்பி உள்ளார். அப்போது பலமாக காற்று வீசியதால் விளக்கில் இருந்த தீப்பொறி ஆட்டுப்பட்டியில் பட்டு மளமள என தீ பிடித்து எரிய தொடங்கியது.

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் வருவதற்குள் ஆட்டுப்பட்டி முழுவதும் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

    இந்த தீ விபத்தில் மொத்தம் 8 ஆடுகள் தீயில் கருகியது. மேலும் காயம் அடைந்த ஆடுகளுக்கு கால்நடை டாக்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தீ விபத்தில் 8 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஓமலூர் நகரை சுற்றி கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா நதி ஓடுகிறது.
    • கிழக்கு சரபங்கா நதிக்கரையை ஒட்டிஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை சரபங்கா விநாயகர் கோவில் உள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் நகரை சுற்றி கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா நதி ஓடுகிறது. இதில், கிழக்கு சரபங்கா நதிக்கரையை ஒட்டிஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை சரபங்கா விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டிடம் இல்லாமல் வெட்ட வெளியாக திறந்தவெளிகோவிலாக உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக, கோவிலை சுற்றிலும் சுமார் 70 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, கோவிலில் பூஜை செய்து பராமரித்து வந்தவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் காலத்திற்கு பிறகு கோவிலை பராமரிக்க வில்லை, நிலத்தையும் யாரும் கண்டு கொள்ளவில்லை.

    இந்தநிலையில், கோவில் நிலத்தை ஒருசிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நிலம் அளவீடு செய்யும் தாசில்தார் பாலாஜி, ஓமலூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், ஓமலூர் வருவாய்துறை நில அளவர்கள், இந்துசமய அறநிலையத்துறை நில அளவீடு செய்யும் அலுவலர்கள் வந்து, கோவில் நிலத்தை நேரடியாக அளவீடு செய்தனர். கோவில் நிலத்தில் உள்ள வீடுகளையும் அளவீடு செய்தனர். தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலம் மீட்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஊருக்கு பொதுவான இடத்தில் பெரிய புளிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் மலைத்தேன் கூடு கட்டியுள்ளது.
    • அப்பகுதியை சேர்ந்த யாரோ தேன் கூட்டில் கற்களை வீசியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த தேனீக்கள் ஊருக்குள் வேகமாக பறந்து ஓடியது. மேலும், வழியில் வந்தவர்களை எல்லாம் கடித்தது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சக்கரைசெட்டிபட்டி ஊராட்சியில் மந்திவளவு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு பொதுவான இடத்தில் பெரிய புளிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் மலைத்தேன் கூடு கட்டியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் வாழ்ந்து வந்த இந்தநிலையில், அப்பகுதியை சேர்ந்த யாரோ தேன் கூட்டில் கற்களை வீசியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த தேனீக்கள் ஊருக்குள் வேகமாக பறந்து ஓடியது. மேலும், வழியில் வந்தவர்களை எல்லாம் கடித்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த காவேரி, அவரது மனைவி கலா, மகள் சபரிதா, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், மோலையன், மஞ்சுளா, செந்தில், பெரியசாமி, பெருமாள், மவுலி உள்பட 9-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதில், மஞ்சுளா, மோலையன் ஆகியோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஊருக்குள் பரவிய தேனீக்கள் அங்குள்ள நாய்கள், ஆடு, மாடுகள் ஆகியவற்றையும் கடித்ததில், அவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு மூலிகை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால், அதிர்ச்சி யடைந்த கிராம மக்கள், ஊராட்சி தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு வந்து, தீயணைப்பு வீரர்களை அழைத்து சென்று, புளியம் மரத்தில் இருந்த தேன் கூடு, தண்ணீரை பீய்ச்சியடித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். இதையடுத்து கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    • நாராயணன் (வயது 77). இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
    • நுழைவு வாயிலில் வைத்து திடீரென பெட்ரோலை எடுத்து தலையில்ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பல்பாக்கி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 77). இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நுழைவு வாயிலில் வைத்து திடீரென பெட்ரோலை எடுத்து தலையில்ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை தடுத்து தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர்.

    இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற முதியவர் நாராயணன் கூறியதாவது:-

    எனக்கு முனியப்பன் மற்றும் அமிர் தலிங்கம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முனியப்பன் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் எனக்கு சொந்தமான 1.38 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டார். இது குறித்து எனது மகனிடம் கேட்டபோது என்னை திட்டி வெளியேற்றுகிறார். வயதான நான் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வந்தேன். இதனால் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்வதை விட அனாதையாக இருக்கும் எனக்கு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்து விடலாம் என நினைத்து தீக்குளிக்க முயற்சி செய்தேன். மாவட்ட நிர்வாகம் என் மகன் மீது நடவடிக்கை எடுத்து வாழ வழிவகை செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து முதியவரை டவுன் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் பெரிய கடை வீதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட் பழைமை வாய்ந்தது.
    • இதற்கிடையே பூ மார்க்கெட் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றதால் கடந்த ஜுன் மாதம் 12-ந் தேதி சேலம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூ மார்க்கெட்டை திறந்து வைத்தார்.

    சேலம்:

    சேலம் பெரிய கடை வீதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட் பழைமை வாய்ந்தது. இந்த மார்க்கெட்டிற்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் விற்பனைக்காக அதிகளவில் பூக்களை கொண்டு வருவார்கள். அதே போல சேலம் ம ற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.

    புதிய கட்டிடம்

    இந்த பூ மார்க்கெட் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.70 கோடி செலவில குளிர் பதன வசதியுடன் நவீன மயமாக்க முடிவு செய்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் பூ மார்க்கெட் தற்காலிகமாக போஸ் மைதானத்தில் செயல்பட்டது.

    இதற்கிடையே பூ மார்க்கெட் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றதால் கடந்த ஜுன் மாதம் 12-ந் தேதி சேலம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூ மார்க்கெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து மீதம் உள்ள பணிகளும் நிறைவு பெற்று தற்போது தயாராக உள்ளது.

    ஆனால் தற்போது வரை பூ மார்க்கெட் திறக்கப்படாத நிலையில் தற்காலிக பூ மார்க்கெட் பழைய பஸ்நிலைய வணிக வளாக பகுதியில் செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த பகுதியில் ஏற்கனவே உள்ள கடைகளும் செயல்பட்டு வரும் நிலையில் பூக்கடைகளும் அங்கு செயல்படுவதால் கடும் இட நெருக்கடி நிலவுகிறது.

    சிக்கி தவிக்கும் மக்கள்

    குறிப்பாக முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பூக்கள் வாங்க பொது மக்கள் குவிவதால் கடும் ெநரிசல் நிலவுகிறது. மேலும் மழையும் பெய்வதால் சரியான மேற்கூரை இல்லாமல் வியாபாரிகளும் பொது மக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் வியபாரிகள் மற்றும் பொது மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

    எனவே புதிதாக கட்டப்பட்ட வ.உ.சி. பூ மார்க்கெட்டை உடன டியாக திறந்து அந்த புதிய கட்டிடத்திற்கு பூ மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்பது பூக்கடை உரிமையாளர்கள் மற்றும் பூ வாங்க வரும் பொது மக்ககளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.   

    • கலைஞரின் நூற்றாண்டு விழாவை யொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.
    • முத்தமிழ்த்தேர்– அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டு கடந்த 4-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி வைக்கப்பட்டது.

    சேலம்:

    முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை யொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் எழுத்தாளர் கலைஞர் குழு சார்பில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத் தன்மையினை எடுத்துச் செல்லும் வகையில் முத்தமிழ்த்தேர்– அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டு கடந்த 4-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி வைக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் இத்தேர் காட்சிப்ப டுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்திலிருந்து இன்று சேலம் மாவட்டத்திற்கு வருகைதந்த முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர்.

    தொடர்ந்து அலங்கார ஊர்தியில் உள்ள கலைஞரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைஞரின் உருவம் பொறித்த பேனாக்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முன்னதாக முத்தமிழ்த்தேர் உருவாக்கப்பட்ட விதம் குறித்தும், அதன் நோக்கங்கள் குறித்தும் தயாரிக்கப்பட்டிருந்த வீடியோ படக்காட்சி ஒளிபரப்பப் பட்டதை மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் பொறுப்பு சுகந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • கொத்தம்பாடி பகுதியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்தது.
    • 150 பேர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி பகுதியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி பொது செயலாளர் லதா சேகர், அ.ம.மு.க. கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சிலம்பரசன், அ.ம.மு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவரும் ஊராட்சி மன்ற துணை தலைவருமான தமிழ்ச்செல்வன், சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் சின்னசாமி, அ.ம.மு.க. ஆத்தூர் ஒன்றிய மாணவரணி செயலாளர் ராஜேஷ் குமார் மற்றும் நிர்வாகி பிரபாகரன் பா.ம.க. பிரமுகர் செல்வம், தி.மு.க. முன்னாள் கிளைச் செயலாளர் ஜனார்த்தனன் உள்பட 150 பேர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்தார். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    2 கோடியே 4 லட்சம் உறுப்பினர்கள்

    இதுவரை 2 கோடியே 4 லட்சம் பேர் அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பல்வேறு சோதனை காலத்திலும் சிறப்பான ஆட்சித் தந்தவர் புரட்சித்தலைவி அம்மா.

    அ.தி.மு.க. ஆட்சியில் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி தந்துள்ளோம். ஆசியாவி லேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை தலைவாசலில் உருவாக்கித் தந்தோம். இதன்மூலம் ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிகள் உலகளவில் சிறப்பு பெற்றுள்ளது.

    விவசாய மக்களின் கோரிக்கைகளை நிறை வேற்றி தந்தது அ.தி.மு.க. தான். கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அ.தி.மு.க. ஆட்சியில்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மிக மிக குறைவாக இருந்ததால், யாருமே கோரிக்கை வைக்கப்படாத நிலையில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி தந்தோம்.

    இதன்மூலம் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இந்த ஆண்டு ஏழை மாணவர்கள் 18 பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வெங்கடாஜல கவுண்டர் அவென்யூைவ சேர்ந்தவர் வெங்கடேஷ் (37), செங்காந்தாள் வியாபாரம் செய்து வந்தார்.
    • கண்ணு வலி கிழங்கு கொள்முதல் செய்ய 50 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு நண்பர்களுடன் சேலம் இரும்பாலை அருகே வந்தார்.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெங்கடாஜல கவுண்டர் அவென்யூைவ சேர்ந்தவர் வெங்கடேஷ் (37), செங்காந்தாள் வியாபாரம் செய்து வந்தார். கண்ணு வலி கிழங்கு கொள்முதல் செய்ய 50 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு நண்பர்களுடன் சேலம் இரும்பாலை அருகே வந்தார்.

    ரூ. 50 லட்சம் பறிப்பு

    அப்போது 2 கார்களில் வந்த கும்பல் போலீஸ் போல நடித்து வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்களை கடத்தி சென்று பணத்தை பறித்து கொண்டு தப்பினர். வெங்கடேஷ் புகார் படி இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் 6 பேரை கைது செய்தனர்.

    மேலும் இதில் தொடர்பு டையவர்களை கைது செய்ய துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். இதை ெதாடர்ந்து கடந்த 20-ந் தேதி மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராேகஷ் (33), நரேஷ்குமார் (37), சுரேஷ்குமார் (34) ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். காட்பாடி அருகே உள்ள முள்ளிபாளையத்தை சேர்ந்த வேலு (42) என்பவரை நேற்று கைது செய்தனர்.

    ரூ.30 லட்சம் மீட்பு

    இவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு காரும் பறிமுதல் செய்யப்பட்டது . கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் வழக்கில் கைதானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் இதில் யாருக்காவது தொடர்பு உண்டா ? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான வர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் இந்த வழக்கு தொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 

    • அனில்குமார் (27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
    • 8 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் கணக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தகராறு தொடர்பாக இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில் முருகன் (50), சிவன் (26), ரஞ்சித்குமார் (25), அனில்குமார் (27), சிவா (26), அன்பு (30), அரவிந்தன் (25), ராஜமுத்து (55) உட்பட 8 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது.

    கன மழை

    குறிப்பாக எடப்பாடி, ெபத்தநாயக்கன் பாளையத்தில் நேற்றிரவு தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக பெய்தது. இதே போல தலைவாசல், சங்ககிரி, ஆத்தூர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள்மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக பெய்தது . மேலும் நேற்றிரவு பனி மூட்டமும் நிலவியது. இதனால் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    127.9 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 23 மி.மீ. மழை பெய்துள்ளது. பெத்தநாயக்கன் பாளையத்தில் 18, தம்மம்பட்டி 16, தலைவாசல் 14, சங்ககிரி 13.2, ஆத்தூர் 12, சேலம் 6.1, ஏற்காடு 6, வீரகனூர் 5, கரியகோவில் 5, கெங்கவல்லி 4, ஆனைமடுவு 3, ஓமலூர் 2, காடையாம்பட்டி 0.6 மி.மீ என மாவட்டம் முழுவதும் 127.90 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. 

    • தினேஷ் (வயது 27). இவர் ஐ.டி கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார்.
    • வீடு திறந்து கிடப்பதை பார்த்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்த ஜெயராணி முகத்தில் மிளகாய் பொடி தூவினர். இதனால் அவர் எரிச்சலில் சத்தம் போட்டு கொண்டிருந்தார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் மிட்டா புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தினேஷ் (வயது 27). இவர் ஐ.டி கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு வீட்டில் இருந்து தினேஷ் தனது நண்பர் அருண் என்பவருடன் வெளியில் டீ குடிக்க சென்றார். வீட்டில் அவரது சித்தி, பாட்டி, தம்பி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீடு திறந்து கிடப்பதை பார்த்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்த ஜெயராணி முகத்தில் மிளகாய் பொடி தூவினர். இதனால் அவர் எரிச்சலில் சத்தம் போட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு வெளியே ஓடினர்.

    உடனே ஜெயராணி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து அழகாபுரம் போலீசில் புகார் ெகாடுக்கப்பட்டது. அப்போது ஜெயராணி தன் மீது மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடி தூவி பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்று விட்டதாக கூறினார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்துராஜ் (வயது 27). இவரது தோட்டத்தில் தானாக வளர்ந்த 10 அடி உயரமும், 15 செ.மீட்டர் சுற்றளவு கொண்ட சந்தனம் மரம் வளர்ந்து வந்தது.
    • நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டினர்.

    சேலம்:

    சேலம் பெருமாள்மலை அடிவாரம் கழுக்கன்வட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 27). இவரது தோட்டத்தில் தானாக வளர்ந்த 10 அடி உயரமும், 15 செ.மீட்டர் சுற்றளவு கொண்ட சந்தனம் மரம் வளர்ந்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டினர். இதனை பார்த்த முத்துராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சற்று தூரத்தில் வெட்டப்பட்ட சந்தன மரக்கட்டைகள் கிடந்தது. சந்தன மரம் நன்றாக முற்றினால் தான் வாசனை வீசும். ஆனால் வெட்டப்பட்ட மரத்தின் கட்டை முற்றாததால் அதிலிருந்து எந்த வாசனையும் வீசவில்லை. மர்ம நபர்கள் சுமார் 50 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை அங்கேயே வீசி விட்டு சென்று விட்டனர். இதனை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    ×