search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை கொள்ளை"

    • தினேஷ் (வயது 27). இவர் ஐ.டி கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார்.
    • வீடு திறந்து கிடப்பதை பார்த்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்த ஜெயராணி முகத்தில் மிளகாய் பொடி தூவினர். இதனால் அவர் எரிச்சலில் சத்தம் போட்டு கொண்டிருந்தார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் மிட்டா புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தினேஷ் (வயது 27). இவர் ஐ.டி கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு வீட்டில் இருந்து தினேஷ் தனது நண்பர் அருண் என்பவருடன் வெளியில் டீ குடிக்க சென்றார். வீட்டில் அவரது சித்தி, பாட்டி, தம்பி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீடு திறந்து கிடப்பதை பார்த்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்த ஜெயராணி முகத்தில் மிளகாய் பொடி தூவினர். இதனால் அவர் எரிச்சலில் சத்தம் போட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு வெளியே ஓடினர்.

    உடனே ஜெயராணி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து அழகாபுரம் போலீசில் புகார் ெகாடுக்கப்பட்டது. அப்போது ஜெயராணி தன் மீது மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடி தூவி பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்று விட்டதாக கூறினார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 25-ந் தேதி திருப்பதிக்கு சென்றார்.
    • 5½ பவுன் நகையையும், ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது47). விவசாயி. இவரது தனது குடும்பத்துடன் கடந்த 25-ந் தேதி திருப்பதிக்கு சென்றார். இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தாலி செயின், தாலி, தங்க காசு உள்ளிட்ட 5½ பவுன் நகையையும், ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த நிலையில் திருப்பதிக்கு சென்றவர்கள் திரும்பி வராத நிலையில் ஆதிமூலத்தின் வீட்டின் கதவில் பூட்டு

    உடைக்கப்பட்டிருந்த தகவலை அக்கம்பக்கத்தினர் ஆதிமூலத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் தகவலறிந்த அவர் நேற்று ஊருக்கு திரும்பிவந்து சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளயைடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    • நகை, ரூ.45 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளயைடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது47). விவசாயி. இவரது தனது குடும்பத்துடன் கடந்த 25-ந் தேதி திருப்பதிக்கு சென்றார். இதனை பயன் படுத்திய மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தாலி செயின், தாலி, தங்க காசு உள்ளிட்ட 5½ பவுன் நகையையும், ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பதிக்கு சென்றவர்கள் திரும்பி வராத நிலையில் ஆதிமூலத்தின் வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்த தகவலை அக்கம்பக்கத்தினர் ஆதிமூலத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் தகவலறிந்த அவர் நேற்று ஊருக்கு திரும்பிவந்து சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளயைடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    • தங்கநகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
    • கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கவர்கல்பட்டி பி.என்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி ராணி (வயது 71). தினந்தோ றும் இவரது மகன்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவதால், இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று பகல் 2 மணியளவில் இவரது வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ராணியை சேலையால் கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் இருந்து ஆறரை சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

    மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வாழப்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார், பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,

    இரு தினத்திற்கு முன் மூதாட்டி வீட்டிற்கு, வேலைக்கு ஆள் வேண்டுமா எனக் கேட்டு பெண் ஒருவர் வந்து சென்றது தெரிய வந்துள்ளது. இதனால், வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை உளவு பார்த்து மர்ம கும்பல் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானதால், இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×