என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rain record"

    • கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது.

    கன மழை

    குறிப்பாக எடப்பாடி, ெபத்தநாயக்கன் பாளையத்தில் நேற்றிரவு தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக பெய்தது. இதே போல தலைவாசல், சங்ககிரி, ஆத்தூர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள்மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக பெய்தது . மேலும் நேற்றிரவு பனி மூட்டமும் நிலவியது. இதனால் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    127.9 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 23 மி.மீ. மழை பெய்துள்ளது. பெத்தநாயக்கன் பாளையத்தில் 18, தம்மம்பட்டி 16, தலைவாசல் 14, சங்ககிரி 13.2, ஆத்தூர் 12, சேலம் 6.1, ஏற்காடு 6, வீரகனூர் 5, கரியகோவில் 5, கெங்கவல்லி 4, ஆனைமடுவு 3, ஓமலூர் 2, காடையாம்பட்டி 0.6 மி.மீ என மாவட்டம் முழுவதும் 127.90 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. 

    • எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 3 மாவட்டங்களிலும் இன்று காலை வரையிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை, பாளை ஆகிய இடங்களில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லையில் 13 மில்லி மீட்டர் பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்தது .

    118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது 116 அடி நீர் இருப்பு உள்ளது. பிரதான பாபநாசம் அணையில் 135 அடி நீர் இருப்பு இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 148 அடியாக உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஆரம்ப கட்ட நிலையிலேயே விவசாயிகள் நல் நடவு செய்தனர். இதன் காரணமாக அவை கதிர் உண்டாகும் நிலையில் உள்ளது. அவை இன்னும் ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை நேற்று அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. மாலை முதல் இரவு வரையிலும் கயத்தாறு மற்றும் கழுகு மலை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழையும் பெய்தது. அதிகபட்சமாக கடம்பூரில் 44 மில்லி மீட்டரும், கழுகு மலையில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    இதேபோல் திருச்செந்தூர், சாத்தான் குளம் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்தது. கோவில்பட்டியில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை சிவகிரி பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    • அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை காலமாகும்.
    • இதுவரை இல்லாத அளவுக்கு வடகிழக்கு பருவமழை 105 நாட்கள் நீடித்துள்ளது.

    நெல்லை:

    தமிழகத்திற்கு பெருமழை யையும், செழுமையையும் அளிக்கும் வடகிழக்கு பருவமழை நேற்றுடன் விலகியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    கோடைகால மழை, தென்மேற்கு பருவமழை உள்ளிட்ட பருவமழை காலத்தில் தமிழகம் மழை பெற்றாலும், வடகிழக்கு பருவமழைக்கு ஈடாகாது. ஒவ்வொரு ஆண்டும் மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் பெறுகிறது.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31 வரையிலான காலக்கட்டம் வடகிழக்கு பருவமழை காலமாகும்.

    இந்த காலகட்டத்தில் தமிழகம் மட்டுமே அதிக மழை பெறும். இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு 105 நாட்கள் நீடித்துள்ளது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 98 நாட்கள் நீடித்திருந்தது.

    வரலாற்றில் வடகிழக்கு பருவமழை மிக விரைவாக விலகிய ஆண்டு 1994-ம் ஆண்டாகும். அந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மிக விரைவாக டிசம்பர் 14-ந்தேதியே தமிழ்நாட்டில் இருந்து விலகியுள்ளது.

    அதேபோல வரலாற்றில் வடகிழக்கு பருவமழை மிக தாமதமாக விலகிய ஆண்டு 1933 ஆகும். 1933-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய பருவமழை 1934-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி தான் விலகியது.

    கடந்த 1992-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை வரலாற்றிலேயே மிக குறைவாக 51 நாட்கள் மட்டுமே மழை நீடித்துள்ளது. 1992-ம் ஆண்டில் குறைவான நாட்கள் மழை பெய்தாலும் அந்த ஆண்டில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தென்மாவட்டங்கள் உருக்குலைந்தது.

    அந்த ஆண்டில் நவம்பர் மாதம் 14-ந்தேதி நெல்லை மாவட்டம் காக்காச்சியில் ஒரே நாளில் 965 மில்லிமீட்டர் மழை பெய்து தமிழகத்தை அதிரவைத்து விட்டது.

    வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் ஒரே நாளில் 540 மில்லிமீட்டர் மழை பதிவானது.

    அம்பாசமுத்திரம் பகுதியில் 366 மில்லிமீட்டரும், அதே நாளில் தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் 312 மில்லிமீட்டர் மழையும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 365 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

    கடந்த அக்டோபர் முதல் இன்று வரையிலான கால கட்டத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து எஸ்டேட்டில் 3 ஆயிரத்து 436 மில்லிமீட்டர் (344 சென்டி மீட்டர்) மழை பதிவாகியுள்ளது. இது நாட்டிலேயே வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரு பகுதியில் பதிவான அதிகபட்ச மழையாகும்.

    ×