search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sabarimala verdict"

    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #PinarayiVijayan #Sabarimalaverdict
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலையில் அய்யப்பன் கோவில் உள்ளது. அய்யப்பன் நித்திய பிரம்மசாரி என்பதால் இவரை 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் அனைத்து தரப்பு பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கினர்.

    இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் பரவலாக தீர்ப்புக்கு ஆதரவுக்குரல்களும் எழுந்துள்ளது.

    இந்நிலையில், அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்வது குறித்து கேரள அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட மாட்டது, இனி சபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுக்கவும் முடியாது என அவர் தெரிவித்தார்.

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்று திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 17-ந்தேதி ஐப்பசி மாத பிறப்பின் போது நடை திறக்கப்படும். மறுநாள் 18-ந்தேதி காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி வருகிற 18-ந்தேதி முதல் பெண் பக்தர்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #PinarayiVijayan #Sabarimalaverdict 
    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றி வருகிற 3-ந்தேதி திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனை நடத்த உள்ளது. #Sabarimala #SabarimalaVerdict #SC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரி கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். எனவே இக்கோவிலுக்குள் நுழைய ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

    பெண்களில் 10 வயதிற்கு மேல் 50 வயதிற்குட்பட்டவர்கள் யாரும் இக்கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று இளம் வக்கீல்கள் சங்கம் உள்பட பல்வேறு மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இந்திய இளம் வக்கீல் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விரிவான மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசு, மகளிர் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டது.


    இதற்கான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று வழங்கியது. இதில், இடம் பெற்ற 4 நீதிபதிகள் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு கூறினர்.

    பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மை நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கியதால் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பு வெளியானதும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ஆகம விதிகளுக்கு முரணாக அமையும் என்று கூறினர். கோவிலின் தந்திரி கண்டரரு ராஜீவரரு, பந்தளம் ராஜ குடும்பத்தினரும் தீர்ப்பு ஆகம விதிகளுக்கு முரணானது என்றனர்.

    அதே நேரம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இதுபற்றி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம். அதனை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு திருவிழாக்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

    மண்டல பூஜைக்கான விழா தொடங்க இன்னும் 45 நாட்கள் உள்ளன. அதற்கு முன்பு வருகிற 17-ந்தேதி மாலை 5 மணிக்கு ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும். 18-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றி ஆலோசிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. இதற்காக வருகிற 3-ந்தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சபரிமலையில் இதுவரை பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லை என்பதால் அங்கு பெண்களுக்கான எந்த அடிப்படை வசதியும் இல்லை. சபரிமலை வரும் பெண்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விடுவார்கள்.

    பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரை பெண்களுக்கான கழிப்பறைகளோ, தங்கும் அறைகளோ, தரிசன கியூவரிசையோ கிடையாது. இனி சபரிமலைக்கு வரும் பெண்களுக்காக அடிப்படை வசதிகள் அனைத்தையும் புதியதாக உருவாக்க வேண்டும்.

    முதலில் தனி கழிப்பறைகள், கியூ வசதி, தங்கும் அறைகள் ஆகியவற்றை அமைக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்காக பெண் போலீசார் நியமிக்கப்பட வேண்டும்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களில் விரதம் இருந்து இருமுடி கட்டி வருபவர்களே 18 படிகள் ஏற வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது.


    இந்த நிலையில் 18-ம் படி ஏற ஆண், பெண் இருவரையும் எப்படி அனுமதிப்பது என்பதை முடிவு செய்யவேண்டும். 18-ம் படியின் அகலம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த படியில் ஒரு நிமிடத்திற்கு 36 முதல் 50 பக்தர்கள் ஏறிச் செல்வார்கள்.

    மண்டல பூஜை, மகர விளக்கு நாட்களில் இந்த எண்ணிக்கை நிமிடத்திற்கு அதிகபட்சம் 92 பேராக உயர்த்தப்படும். அதற்கு மேல் பக்தர்களை அனுமதிக்க முடியாது. இனி பெண்களும் 18-ம் படி ஏற வரும்போது, அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பை அளிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

    சபரிமலை கோவில் தற்போது 59 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இனி பெண்களும் வந்தால் இப்போது இருக்கும் இட வசதியை அதிகரிக்க வேண்டும். குடிநீர் வசதி, பம்பை ஆற்றில் பெண்கள் குளிக்க தனி ஏற்பாடு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    இதற்கு இப்போது இருக்கும் இடத்தை காட்டிலும் கூடுதலாக 250 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று தேவசம் போர்டு கருதுகிறது. இந்த நிலத்தை சபரிமலை வனப்பகுதியில் இருந்துதான் எடுக்க வேண்டும்.

    இந்த மலைப்பகுதி பெரியார் புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அவர்களிடம் இருந்து வனப்பகுதியை பெற அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்.

    திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு முன்னால் உள்ள இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட பின்பே பெண்கள் சபரிமலைக்கு சுதந்திரமாக வந்து செல்ல முடியும்.

    இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டு வருவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு தெரியவரும். #Sabarimala #SabarimalaVerdict #SC
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதிற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா வரவேற்பு அளித்துள்ளார். #SupremeCourt #Congress #SabarimalaVerdict #RandeepSurjewala
    புதுடெல்லி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10-50 வயது வரையுள்ள பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும், அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கவேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்று உள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில், “சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு முற்போக்கான மற்றும் பரவலாக வரவேற்பை பெறக்கூடியது ஆகும். இதை காங்கிரஸ் முழு மனதுடன் வரவேற்கிறது. பாலினத்தின் அடிப்படையிலோ அல்லது வேறுவிதமாகவோ பெண்களுக்கு பாகுபாடு காட்டக் கூடாது என்பது தீர்ப்பில் மிகத் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.



    “சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெண்களின் உரிமைகள் மீதான புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பெண்களை மதச்சம்பிரதாயத்தின் கீழ் கட்டுப்படுத்தக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துகிறது. ஒரு சமுதாயம் பரிணாம வளர்ச்சி காணும்போது அதற்கேற்ப மத நம்பிக்கைகளும், சட்டங்களும் அதே போன்ற வளர்ச்சியை காண வேண்டும்” என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.  #SupremeCourt #Congress #SabarimalaVerdict #RandeepSurjewala
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைய அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை வரவேற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், இந்த தீர்ப்பு ஒரு மைல்கல் என கூறியுள்ளார். #SabarimalaVerdict #DMK #MKStalin
    சென்னை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும்  பாகுபாடு இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், சில பேர் விமர்சித்துள்ளனர்.

    இந்நிலையில், தீர்ப்பு குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    'ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்' என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

    சமூக நீதி-பாலின சமத்துவம்-பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல்! 

    என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


    சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்பிரமணியன் சுவாமி, கமல் உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளனர். #SabarimalaVerdict #SubramaniamSwamy
    சென்னை:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரித்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா உள்ளிட்ட 4 நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். மத வழிபாடுகளை நிதிமன்றம் முடிவு செய்யக்கூடாது என்று அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனினும், மெஜாரிட்டி  நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக தேவசம்போர்டு கூறியுள்ளது.



    இந்நிலையில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதுரை ஆதீனம், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

    சபரிமலையில் பாலின சமத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

    உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு நல்ல முடிவு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். கடவுள் அனைவருக்கும் சமமானவர். போகவேண்டும் என்று நினைப்பவர்கள் போகலாம் என்று கூறியுள்ள கமல், கலாச்சாரம் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் என்று குறிப்பிட்டுள்ளார். #SabarimalaVerdict #SubramaniamSwamy
    ×