search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை நிரூபிக்கும் தீர்ப்பு - மு.க ஸ்டாலின் வரவேற்பு
    X

    ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை நிரூபிக்கும் தீர்ப்பு - மு.க ஸ்டாலின் வரவேற்பு

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைய அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை வரவேற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், இந்த தீர்ப்பு ஒரு மைல்கல் என கூறியுள்ளார். #SabarimalaVerdict #DMK #MKStalin
    சென்னை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும்  பாகுபாடு இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், சில பேர் விமர்சித்துள்ளனர்.

    இந்நிலையில், தீர்ப்பு குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    'ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்' என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

    சமூக நீதி-பாலின சமத்துவம்-பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல்! 

    என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×