search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia World Cup 2018"

    மாஸ்கோவில் இன்றிரவு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண கங்குலி ரஷியா சென்றுள்ளார். #WorldCup2018 #Russia
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை காண உலகில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் மாஸ்கோ சென்றுள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இடது கை பேட்ஸ்மேனும் ஆன கங்குலி கால்பந்து போட்டியின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் இங்கிலாந்து - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மாஸ்கோ சென்றுள்ளார். இதை கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #ENGCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது.



    இதையடுத்து, இரண்டாவது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் கடுமையாக போராடினர் இதற்கு பலன் அளிக்கும் விதமாக 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை அடைந்தன. அதன்பின்னர் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து, முதல் கூடுதல் நேரத்திலும் எண்ட அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் 109வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இதைத்தொடர்ந்து, குரோஷியா அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன் இறுதி போட்டியிலும் நுழைந்தது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #WorldCup2018 #FifaWorldCup2018 #ENGCRO #CROENG #EnglandvCroatia
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. #WorldCup2018 #ENGCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்து வருகிறது. #WorldCup2018 #FifaWorldCup2018 #ENGCRO #CROENG #EnglandvCroatia
    உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றால், வெற்றியை கொண்டாட திங்கட்கிழமை வங்கி விடுமுறை அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் 1-0 என பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இங்கிலாந்து அணி 1990-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்று இங்கிலாந்து மக்கள் நம்புகிறார்கள். இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெறுகிறது. ஒருவேளை இங்கிலாந்து வெற்றி பெற்றால் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாட பொது வங்கி விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



    இதுகுறித்து இங்கிலாந்து அரசு இணையத்தளத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றம் இதுகுறித்து விவாதம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HarryKane  #RussiaWorldCup2018 #WorldCup2018
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.

    ஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.



    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRABEL #BELFRA #FrancevBelgium
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகிக்கிறது. #WorldCup2018 #FRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.



    ஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகித்தன. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRABEL #BELFRA #FrancevBelgium
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் ரஷியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #RUSCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று முன்தினம் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷியா - குரோஷியா அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஷியா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமெரிக் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் நேரம் வழ்ங்கப்பட்டது.

    இதை பயன்படுத்தி ஆட்டத்தின் 100-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் டொமகோஜ் விஜே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதலாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து, இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 115வது நிமிடத்தில் ரஷியா அணியின் பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன. இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

    முதலில் ரஷியாவின் வாய்ப்பை குரோஷியா கோல்கீப்பர் தடுத்துவிட்டார். ஆனால் குரோஷியா அணி முதல் வாய்ப்பில்   கோல் போட்டது.

    இர்ண்டாவது வாய்ப்பை ரஷிய கோலாக்கியது. ஆனால் குரோஷியாவின் வாய்ப்பை ரஷியா கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.
    இதனால் மீண்டும் 1 - 1 என சமனானது.

    மூன்றாவது வாய்ப்பை ரஷியா வீணாக்கியது. குரோஷியா மீண்டும் கோலாக்கியது. இதனால் 1-2 என முன்னிலை பெற்றது.

    நான்காவது வாய்ப்பை ரஷியா கோலாக்கியது. குரோஷியாவும் கோல் அடித்ததால் 2-3 என முன்னிலை பெற்றது.

    இறுதியாக, ஐந்தாவது வாய்ப்பை ரஷியா கோல் போட்டதால் 3-3 என சமனானது. குரோஷியா மீண்டும் ஒரு கோல் அடித்து 4-3 என  வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #RUSCRO #CRORUS #RussiavCroatia
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகிக்கிறது. #WorldCup2018 #RUSCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று முன்தினம் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷியா - குரோஷியா அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஷியா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.



    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39 வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமாண்டிக் ஒரு கோல் அடித்தார். 

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன. #WorldCup2018 #FifaWorldCup2018 #RUSCRO #CRORUS #RussiavCroatia
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #BRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.



    இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார். 
    இதையடுத்து எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது. 
    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணி தனக்கு கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை கோலாக மாற்றவில்லை. 

    ஆனாலும், ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கணக்கில் பிரேசில் பின்தங்கியது.

    ஆட்டத்தின் இறுதிவரை யாரும் கோல் அடிக்காததால் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #BRABEL #BELBRA #BrazilvBelgium
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. #WorldCup2018 #BRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.



    இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #BRABEL #BELBRA #BrazilvBelgium
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் பெனால்டி ஷூட் முறையில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து. #WorldCup2018 #COLENG #ColombiavEngland
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன.

    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 57வது நிமிடத்திக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து பயன்படுத்தி கொண்டது.

    அந்த அணியின் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் முடிவில் 93வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

    கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் முறை தரப்பட்டது.
    இதில் முதல் வாய்ப்பில் கொலம்பியாவும், இங்கிலாந்தும் ஒரு கோல் அடித்தன. இரண்டாவது வாய்ப்பிலும் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தன.

    மூன்றாவது வாய்ப்பில் கொலம்பியா அணி ஒரு கோல் அடிக்க 3-2 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் வாய்ப்பு தடுக்கப்பட்டது.

    நான்காவதில் கொலம்பியா வாய்ப்பு தடுக்கப்பட்டது. இங்கிலாந்து ஒரு கோல் அடித்து 3-3 என சமனிலை ஆனது.

    இறுதியாக, கடைசி வாய்ப்பில் கொலம்பியா கோல் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணி கோல் அடித்து 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup #COLENG #ColombiavEngland #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    கொலம்பியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 0-0 என சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #COLENG #ColombiavEngland
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன. #WorldCup #COLENG #ColombiavEngland #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    ×