search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rowdy"

    • மாநிலம்முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்யும்பணியை மேற்கொண்டனர்.
    • துணை கமிஷனர், ஆர்.டி.ஓ., முன் ஆஜர்படுத்திநன்னடத்தை உறுதி மொழிபத்திரம் பெறப்பட்டது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் ரவுடிகள்மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்என சில நாட்களுக்குமுன் போலீஸ் உயரதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதற்கு 'ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' என்றும் பெயரிட்டுள்ளார். மாநிலம்முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்யும்பணியை மேற்கொண்டனர். அதில், பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்கள், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆகியோர்களைபிடிக்க அந்தந்த மாநகர,மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து தேடும்பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகரில் கமிஷனர்,எஸ்.பி., உத்தரவின்படி,தனிப்படைஅமைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக தொடர் வழக்குகளில்தொடர்புடையவர்கள்,குற்றவாளிகள்,தலைமறைவானவர்கள்,பிடிவாரன்ட்உள்ளவர்களை பிடிக்கும் பணியில்ஈடுபட்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தில்பழைய , அடி தடி, கொலைமுயற்சி, தொடர் குற்றங்களில் ஈடுபட்டு சிறையில்இருந்து வெளி வந்து தலைமறைவானர்கள் என 141பேரை போலீசார் பிடித்தனர். இதில்21 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மீதமுள்ளவர்களை,துணை கமிஷனர், ஆர்.டி.ஓ., முன் ஆஜர்படுத்திநன்னடத்தை உறுதி மொழிபத்திரம் பெறப்பட்டது.  

    • சுதந்திரராஜ் என்பவர் குடிபோதையில் ராஜா ரகுபதியிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார்.
    • ரவுடிகள் பட்டியலில் உள்ள இவர் குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வந்தவர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சண்முக புரத்தை சேர்ந்தவர் ராஜா ரகுபதி ( வயது 27). இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மாசிலாமணிபுரத்தை சேர்ந்த சுதந்திரராஜ் ( 30) என்பவர் குடிபோதையில் ராஜா ரகுபதியிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதந்திரராஜை கைது செய்தனர். இவர் மீது சிப்காட் உள்பட பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதாகவும், ரவுடிகள் பட்டியலில் உள்ள இவர் குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வந்தவர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    • நெல்லித்தோப்பு பெரியார் நகரில் ரவுடியை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • கடந்த ஆண்டு வினோத்தையும் சாலமனின் கூட்டாளிகளையும் ரிஷி தாக்கியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு பெரியார் நகரில் ரவுடியை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுவை சின்ன கொசப்பாளையத்தை சேர்ந்தவர் ரிஷி (வயது 25) ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இவருக்கும் நெல்லித்தோப்பை சேர்ந்த சாலமன், வினோத் ஆகியோருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

    கடந்த ஆண்டு வினோத்தையும் சாலமனின் கூட்டாளிகளையும் ரிஷி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரிஷி மீது வினோத்தும் சாலமனும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். மேலும் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தனர். ரிஷி எங்கெங்கு சென்று வருகிறார் என்பதையும் நோட்டமிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் ரிஷி மது குடித்து விட்டு பெரியார் நகர் வழியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த சாலமன், வினோத் மற்றும் இவர்களது கூட்டாளிகள் 4 பேர் ரிஷியை வழிமறித்தனர். தன்னை கொலை செய்ய கும்பல் வழிமறிப்பதை கண்ட ரிஷி அவர்களிடமிருந்து உயிர் தப்பிக்க ஓடினார். ஆனால் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி ரிஷியை கத்தியால் வெட்டியது.

    இதில் ரத்த வெள்ளத்தில் ரிஷி மயங்கி சாய்ந்தார். உடனே அந்த கும்பல் ரிஷி இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் ரிஷியை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு ரிஷி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உருளையன் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் இதில் சம்மந்தப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • ஒரு வருட நிபந்தனை ஜாமீனை மீறி ரவுடி குற்றச்செயலில் ஈடுபட்டதால் மீதமுள்ள நாட்களை சிறையில் கழிக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.
    • கடந்த மாதம் லாஸ்பேட்டை வீரபத்திர சாமி கோவில் தெருவை சேர்ந்த கலா மற்றும் அவரது தோழிகளை மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் சிறைக்கு சென்றார்.

    புதுச்சேரி:

    ஒரு வருட நிபந்தனை ஜாமீனை மீறி ரவுடி குற்றச்செயலில் ஈடுபட்டதால் மீதமுள்ள நாட்களை சிறையில் கழிக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.

    புதுவை கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் விக்கி என்ற பல்லு விக்கி.ரவுடியான இவர் மீது கொலை,கொலை முயற்சி,வழிப்பறி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளது. இதனால் விக்கியை ஒரு வருடத்துக்கு குற்றசெயல்களில் ஈடபடக்கூடாது என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.அதில் சுமார் 2 மாதம் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருந்தார்.ஆனால் கடந்த மாதம் லாஸ்பேட்டை வீரபத்திர சாமி கோவில் தெருவை சேர்ந்த கலா மற்றும் அவரது தோழிகளை மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் சிறைக்கு சென்றார்.

    இந்தநிலையில் ஒரு வருட நிபந்தனை ஜாமீனை மீறி குற்றசெயலில் ஈடுபட்டதால் விக்கி என்ற பல்லு விக்கியை மீதமுள்ள 298 நாட்கள் சிறையில் கழிக்குமாறு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சப்-கலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துைர செய்தனர்.அதன்பேரில் அவர் விக்கியை 298 நாட்கள் சிறையில் இருக்குமாறு உத்தரவிட்டார்.

    ஒரு வருட நிபந்தனை ஜாமீனை மீறி ரவுடி குற்றசெயலில் ஈடுபட்டதால் அவரை மீண்டும் சிறையில் அடைத்து மீதமுள்ள நாட்களை சிறையில் கழிக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டது புதுவையில் இதுவே முதல் முறையாகும்.

    • சேலம் தாதகாப்பட்டி, குமரன் நகர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் லாரி அதிபர் இவரிடம் செயின், பணம் பறித்த ரவுடிகளை போலீசார் ைது செய்தனர்.
    • 2 பவுன் செயின், அரை பவுன் மோதிரம், ரூ.1050 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி, குமரன் நகர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ப்ரதீப் (வயது 27). சீலநாயக்கன்பட்டி பைபாசில் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் சண்முக நகர் மின் வாரிய அலுவலகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் ப்ரதீப்பை திடீரென வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டினார். மேலும் , தாக்கி அவரிடமிருந்து 2 பவுன் செயின், அரை பவுன் மோதிரம், ரூ.1050 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாதகாப்பட்டி கேட், அம்மாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ரஞ்சித் என்கிற ரஞ்சித் குமார் (28) என்பவரை கைது செய்தனர்.

    கைதனா ரஞ்சித்குமார் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவரிமிருந்து செயின், மோதிரம், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வினோத் பேசிய போது அவரிடம் ரெயில் அருகில் தனியாக வா. உன்னிடம் பேச வேண்டும் என யாரோ கூறியுள்ளனர்.
    • வினோத்தை அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை, கும்பகோணம் மாதுளம்பேட்டை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன்வினோத் (வயது 44)

    பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு வழக்குகள் கும்பகோணம் காவல் நிலையங்களில் உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை வீட்டில் வினோத் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.

    அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்த வினோத் பேசிய போது அவரிடம் ரெயில் அருகில் தனியாக வா.

    உன்னிடம் பேச வேண்டும் என யாரோ கூறியுள்ளனர்.

    இதையடுத்து வினோத் வீட்டிலிருந்து கிளம்பி கும்பகோணம் ரயில்வே நிலையம் அருகே உள்ள கஸ்தூரிபாய் ரோட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போதுஅங்கு சிலர் நின்று கொண்டிருந்து ள்ளனர். அவர்கள் வினோத்தை அருகில் அழைத்துள்ளனர். இவர்கள் தான் தன்னிடம் செல்போனில் பேசியவர்கள் என நினைத்து அவர்களை நோக்கி சென்றுள்ளார்.

    அப்போது சிறிதும் எதிர்பாராத நேரத்தில் வினோத்தை அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் நிலைகுலைந்த வினோத் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    இதையடுத்து அந்த மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர்.இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த வினோத்தை மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

    தகவலறிந்த கும்பகோணம் டி.எஸ்பி. அசோகன் மற்றும் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை கைப்பற்றி தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து அவர்களை தேடி வருகின்றனர்.

    பிரபல ரவிடியை பட்டப்பகலில் மர்மநபர்கள் வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டிவனத்தில் பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரோசனை போலீஸ்இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தீவனூர் பஸ் நிலையம் அருகே ஒருவர் சாலையின் குறுக்கே நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தீவனூர் கிராமத்தை சேர்ந்த ரவுடி பிரவின்(வயது 34) என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து பிரவீனை கைது செய்தனர். 

    • எனது மனைவியை எவ்வாறு நீ அவதூறாக பேசலாம் என்று கேட்டு என்னை சத்தம் போட்டார். இதனால் மதுபோதையில் இருந்த நான் ஆத்திரம் அடைந்து கத்தியால் குத்தினேன்.
    • கைதான ராஜரத்தினம் பெயர் கடையம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் உள்ளது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பாதுகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் முருகன்(வயது 39). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    குத்திக்கொலை

    இவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் கீழபத்து வயல் பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கீழக்கடையம் ஆர்.சி.சர்ச் தெருவை சேர்ந்த ராஜரத்தினம் (38 ) என்பவர் சக்திவேல் முருகனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    இதுதொடர்பாக கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரசேகர் விசாரணை நடத்தி ராஜரத்தினத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

    அவதூறு பேச்சு

    தினமும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவோம். வழக்கம்போல் நேற்றும் மது அருந்தினோம். அப்போது சக்திவேல் முருகன் மனைவியை நான் அவதூறாக பேசினேன்.

    உடனே அவர், எனது மனைவியை எவ்வாறு நீ அவதூறாக பேசலாம் என்று கேட்டு என்னை சத்தம் போட்டார். இதனால் மதுபோதையில் இருந்த நான் ஆத்திரம் அடைந்தேன்.

    • சேலம் கன்னங்குறிச்சியில் பல வழக்குகளில் ஈடுப்பட்ட பிரபல ரவுடி போலீசார் கைது செய்தனர்.
    • 2 மாதங்களுக்கு முன்பு தலை மறைவானார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் கோகுல் என்ற கோகுல் நாத் (வயது 29), இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே ஒரு வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் 2 மாதங்களுக்கு முன்பு தலை மறைவானார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று அவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

    புதுவையில் மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை மற்றும் கடை வியாபாரிகள் தொழில் செய்ய முடியாமல் ரவுடிகளால் மாமூல் வசூலிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தற்போது மாமூல் வேட்டைகளுக்கு சென்று ரவுடிகள் மாமூல் வசூலிப்பதால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதோடு, புதிய தொழில்கள் தொடங்கப்படுவதும் தடைபட்டு வருகிறது.

    ரவுடிகளின் ராஜ்ஜியமாக புதுவை மாறி வருவதை வில்லியனூர் சம்பவம் உறுதி செய்கிறது.

    இச்சம்பவத்தில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டு உள்ளனர். ஆனால், குற்றவாளிகள் திருந்தி நல்ல முறையில் வாழ்ந்து வரும் நிலையிலும் அவர்கள் மீது 144 சட்டத்தை போட்டு அவர்கள் பழிவாங்கப்பட்டு வருகின்றனர்.

    வணிகர்களிடமும், சிறு, சிறு தொழில் செய்வோரிடமும் மாமூல் வசூல் செய்யும் அனைவரின் மீதும் குண்டர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    புதுவை மாநிலத்தில் தற்போது தொழில்கள் நலிவடைந்த நிலையில் வணிகர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார வரி, தொழில் வரி, குப்பை வரி என அனைத்துக்கும் அதிக அளவில் வரிவசூல் செய்வதோடு புதிதாக மாமூல் வசூல் என்ற வரியையும் வணிகர்களிடம் வசூலிப்பது நியாயமா? இந்த நிலை நீடித்தால் புதுவை மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்.

    தற்போது காவல்துறையில் குறுக்கிடும் எந்த அரசியல் வாதியாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்ட விரோதமான 3 நம்பர் ஆன்-லைன் லாட்டரி விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அவற்றை எல்லாம் தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் ரோந்து பணியை அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    சென்னை ஆதம்பாக்கத்தில் 17 வயது இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த ரவுடியை கைது செய்ய வேண்டும் என்று அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் ராபின். ரவுடி. இவர் மீது ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 6 கொலை வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் ராபின் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை சந்தித்து அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.

    சம்பவத்தன்று இளம்பெண் வெளியே சென்று இருப்பதை அறிந்த ராபின் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் இளம்பெண்ணை மிரட்டி கடத்தி சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மாந்தோப்பில் வைத்து அவரை கற்பழித்தார். பின்னர் இளம்பெண்ணை துரைப்பாக்கத்தில் விட்டு விட்டு ராபின் தப்பி ஓடி விட்டார்.

    வீட்டுக்கு திரும்பிய இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி மடிப்பாக்கத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இளம்பெண்ணை ராபின் கடத்தி சென்றபோது மாந்தோப்பில் அவரது நண்பர்கள் 4 பேர் இருந்ததாக தெரிகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூறும்போது, “உறவுப் பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி புகாரை வாங்க மறுக்கிறார். மேலும் புகாரை வாபஸ் பெறக்கோரி எங்களை மிரட்டுகிறார்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடி ராபினை கைது செய்ய வேண்டும் என்றனர்.
    காஞ்சீபுரம் அருகே நள்ளிரவில் ரவுடியை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மடம் தெருவைச் சேர்ந்தவர் தேவா (25).

    காஞ்சீபுரம் பகுதிகளில் தேவா அடிக்கடி தகராறுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளது.

    நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்திரா பெட்ரோல் பின்புறம் இவரை மர்மநபர்கள் அரிவாளால் சராமாரியாக வெட்டி தப்பி சென்று விட்டனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் ரவுடி தேவாவை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சம்பவம் குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு அவருடைய நண்பர்கள் சதீஷ், துரைபாபு, பாரதி காரணமாக இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ×