என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரத்தில் ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு - 3 பேருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்22 April 2019 2:02 PM GMT (Updated: 22 April 2019 2:02 PM GMT)
காஞ்சீபுரம் அருகே நள்ளிரவில் ரவுடியை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மடம் தெருவைச் சேர்ந்தவர் தேவா (25).
காஞ்சீபுரம் பகுதிகளில் தேவா அடிக்கடி தகராறுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளது.
நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்திரா பெட்ரோல் பின்புறம் இவரை மர்மநபர்கள் அரிவாளால் சராமாரியாக வெட்டி தப்பி சென்று விட்டனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் ரவுடி தேவாவை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு அவருடைய நண்பர்கள் சதீஷ், துரைபாபு, பாரதி காரணமாக இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மடம் தெருவைச் சேர்ந்தவர் தேவா (25).
காஞ்சீபுரம் பகுதிகளில் தேவா அடிக்கடி தகராறுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளது.
நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்திரா பெட்ரோல் பின்புறம் இவரை மர்மநபர்கள் அரிவாளால் சராமாரியாக வெட்டி தப்பி சென்று விட்டனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் ரவுடி தேவாவை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு அவருடைய நண்பர்கள் சதீஷ், துரைபாபு, பாரதி காரணமாக இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X