பிரபல ரவுடியை வெட்டிக்கொல்ல முயற்சி- மர்மநபர்களுக்கு வலைவீச்சு

வினோத் பேசிய போது அவரிடம் ரெயில் அருகில் தனியாக வா. உன்னிடம் பேச வேண்டும் என யாரோ கூறியுள்ளனர்.வினோத்தை அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
பிரபல ரவுடியை வெட்டிக்கொல்ல முயற்சி- மர்மநபர்களுக்கு வலைவீச்சு
Published on

கும்பகோணம்:

தஞ்சை, கும்பகோணம் மாதுளம்பேட்டை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன்வினோத் (வயது 44)

பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு வழக்குகள் கும்பகோணம் காவல் நிலையங்களில் உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை வீட்டில் வினோத் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்த வினோத் பேசிய போது அவரிடம் ரெயில் அருகில் தனியாக வா.

உன்னிடம் பேச வேண்டும் என யாரோ கூறியுள்ளனர்.

இதையடுத்து வினோத் வீட்டிலிருந்து கிளம்பி கும்பகோணம் ரயில்வே நிலையம் அருகே உள்ள கஸ்தூரிபாய் ரோட்டிற்கு வந்துள்ளார்.

அப்போதுஅங்கு சிலர் நின்று கொண்டிருந்து ள்ளனர். அவர்கள் வினோத்தை அருகில் அழைத்துள்ளனர். இவர்கள் தான் தன்னிடம் செல்போனில் பேசியவர்கள் என நினைத்து அவர்களை நோக்கி சென்றுள்ளார்.

அப்போது சிறிதும் எதிர்பாராத நேரத்தில் வினோத்தை அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் நிலைகுலைந்த வினோத் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதையடுத்து அந்த மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர்.இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த வினோத்தை மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

தகவலறிந்த கும்பகோணம் டி.எஸ்பி. அசோகன் மற்றும் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை கைப்பற்றி தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து அவர்களை தேடி வருகின்றனர்.

பிரபல ரவிடியை பட்டப்பகலில் மர்மநபர்கள் வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com