search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rowdy murder"

    சென்னை அரும்பாக்கத்தில் இன்று பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பலால் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். #ChennaiMurder
    போரூர்:

    சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி. பிரபல ரவுடியான இவர் எண்ணூரில் வசித்து வந்தார்.

    இன்று காலையில் கிருஷ்ணமூர்த்தி, அரும்பாக்கத்தில் உள்ள வணிக வளாகம் பின்புறம் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் கிருஷ்ணமூர்த்தியை சுற்றி வளைத்தது. அவர்களின் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    ஆனால் மர்ம கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.

    இந்த கொலை சம்பவம் காலை 11 மணி அளவில் நடந்தது. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் இருந்த இடத்தில் மிகவும் துணிச்சலுடன் கொலையாளிகள் கிருஷ்ணமூர்த்தியை தீர்த்துக் கட்டியுள்ளனர்.

    கிருஷ்ணமூர்த்தி கொலையுண்டதை பார்த்து அந்த வழியாக சென்ற பொது மக்கள் மிரண்டு போனார்கள். பலர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.



    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் உதவி கமி‌ஷனர் குணசேகரன், அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலை நடந்த இடத்தில் பதிவான கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். எண்ணூரில் இருந்து கிருஷ்ணமூர்த்தி மினி வேனை ஓட்டி வந்துள்ளார். அங்கிருந்தே 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து அவரை தீர்த்துக் கட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

    கிருஷ்ணமூர்த்தி மீது மொத்தம் 9 வழக்குகள் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து அவர் திருந்தி வாழ்ந்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் பழைய தகராறுகளால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகவே கிருஷ்ணமூர்த்தியை அவரது எதிரிகள் கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. #ChennaiMurder
    கோவையில் ரவுடி கொலையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை புலியகுளம் சிறு காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் லியோ மார்ட்டின் (29) இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு லியோ மார்ட்டின் அலமேலு மங்கா லே-அவுட் அருகே கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.

    இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே அவர் இறந்தார்.

    இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் லியோ மார்ட்டினை புலிய குளம் துல்லா ஆறுமுகம் வீதியை சேர்ந்த தருண் என்கிற இன்பிரண்ட் ராஜன் (19), கொண்டசாமி கோவில் வீதியை சேர்ந்த விக்கி என்கிற சண்முகம் (19) ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது முன் விரோதம் காரணமாக லியோ மார்ட்டினை குத்தி கொன்றதாக தெரிவித்தனர்.

    கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் அதில் இருந்து அடிக்கடி சந்திக்கும் போதெல்லாம் தங்களுக்கும் லியோ மார்ட்டினுக்கும் தகராறு ஏற்படும் என்றும் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் கொன்றதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கோவையில் பிரபல ரவுடி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை புலியகுளம் சிறு காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் லியோ மார்டின் (வயது 29). இவர் மீது கொலை, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    நேற்று இரவு லியோ மார்டின் அலமேலுமங்கா லே-அவுட் அருகே கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக லியோ மார்டினை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று இரவு மது போதையில் இருந்த லியோ மார்டின் புலியகுளம் துல்லா ஆறுமுகம் வீதியை சேர்ந்த தருண் என்கிற இன்பிரண்ட்ராஜன் (19) என்பவரது வீட்டுக்கு சென்றார்.

    அங்கு தருண் மற்றும் கொண்டசாமி கோவில் வீதியை சேர்ந்த விக்கு என்கிற சண்முகம் (19) ஆகியோரிடம் கஞ்சா கேட்டார். அவர்கள் கொடுக்க மறுத்து இங்கு இருந்து செல்லுமாறும் கூறி உள்ளனர்.

    ஆனால் லியோ மார்டின் செல்ல மறுத்து 2 பேரையும் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து கத்தியால் லியோ மார்டினின் வயிறு, மார்பு பகுதிகளில் சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் அவர் இறந்தது தெரியவந்தது.

    இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடியை குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவான தருண், சண்முகம் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    நந்திவரம், கூடுவாஞ்சேரி, காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன.

    நேற்று மாலை அவர் அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்து விட்டு நண்பர்களுடன் வெளியே வந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் கண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார். உடனே கொலைக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடிக்கும் போது கண்ணனுக்கும், உடன் இருந்த கூட்டாளிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக கண்ணனின் நண்பர்கள் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொலையுண்ட கண்ணனுக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    அரும்பாக்கத்தில் கஞ்சா வியாபார மோதலில் ரவுடி கொல்லப்பட்டாரா? என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். ரவுடி. இவர் மீது சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    நேற்று காலை குமரேசன் அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றார். அப்போது மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க உதவி கமி‌ஷனர் குணசேகர் இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், பெருந்துறை முருகன் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கொலை செய்யப்பட்ட குமரேசன் முதலில்ரவுடி ஒருவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் அவரை பிரிந்த குமரேசன் தனியாக கஞ்சா விற்பனை செய்து வந்திருக்கிறார்.

    இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த மோதல் காரணமாக ரவுடியின் கூட்டாளியான ராஜேஷ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு குமரேசன் தரப்பினரால் கொலை செய்யப்பட்டார்.

    இதற்கு பழிவாங்கும் விதமாக தற்போது குமரேசன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக குமரேசன் நண்பர்கள் 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

    அரும்பாக்கத்தில் இன்று ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வைஷ்ணவா கல்லூரி அருகில் இன்று காலை 10.45 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டப் பட்டதை பார்த்து அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பலர் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக வெட்டுப்பட்ட வாலிபரும் ஓட்டம் பிடித்தார். ஆனால் மர்ம நபர்கள் அவரை விடாமல் துரத்திச் சென்று வெட்டிக்கொன்றனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அரும்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டது சூளைமேட்டை சேர்ந்த ரவுடி குமரேசன் என்பது தெரிய வந்தது. வழக்கு ஒன்றில் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பியபோதுதான் அவரது எதிரிகள் பின் தொடர்ந்து வந்து குமரேசனை தீர்த்து கட்டியுள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட குமரேசன் மீது சூளைமேடு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

    அந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு சென்று விட்டு திரும்பியபோதுதான் பழிக்குபழி வாங்கும் வகையிலேயே குமரேசன் கொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் கமி‌ஷனர் தினகரன், அண்ணாநகர் துணை கமி‌ஷனர் சுதாகர் ஆகியோரது மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கத்தில் தொடங்கி கோயம்பேடு வரை சமீபத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

    அந்த கேமராக்களில் கொலைக் காட்சிகள் பதிவாகி இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அதனை வைத்து கொலையாளிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பட்டப்பகலில் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர் அருகே பணம் கேட்டு மிரட்டிய ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பேக்கரி உரிமையாளர் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை செவனப்பாறை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 37). நேற்றிரவு இவர் அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் கூட்டுறவு சேமிப்பு கிடங்கு அருகே தலையில் அரிவாள் வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரன் இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் கரூர் ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன், குளித்தலை டி.எஸ்.பி. சுகுமார், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மகேஸ்வரனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    மேலும் மகேஸ்வரன் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

    மகேஸ்வரன் மீது கர்நாடகா மாநிலம் மற்றும் நாமக்கல், சேலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அவ்வப்போது செல்லும் மகேஸ்வரன் அங்கு திருட்டில் ஈடுபட்டு விட்டு பின்னர் ஊருக்கு திரும்பி வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சம்பவங்களில் அடிக்கடி கைதாகி ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.

    இந்தநிலையில் கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை சரவணபுரத்தை சேர்ந்த பிச்சை (33) என்பவர் அய்யர்மலை உள்ளிட்ட 4 இடங்களில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேஸ்வரன் ரூ.1.50 லட்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

    ஆனால் அவர் ரூ.10 ஆயிரம் மட்டும் தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் மகேஸ்வரன் ரூ.1.50 லட்சத்தை தரவேண்டும் என்றும், இல்லையென்றால் தொழில் செய்ய விட மாட்டேன் என்று மிரட்டியுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மகேஸ்வரனை தொடர்பு கொண்டு பேசிய பிச்சை, ரூ.1.50 லட்சம் பணம் தருவதாகவும், செவனப்பாறை நுகர்பொருள் கூட்டுறவு சேமிப்பு கிடங்கு அருகே வந்து பணத்தை வாங்கி கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு மகேஸ்வரன் சென்றுள்ளார். அதன் பிறகே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதனால் பண பிரச்சினையில் மகேஸ்வரனுக்கும், பிச்சைக்கும் ஏற்பட்ட தகராறில் பிச்சை அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மகேஸ்வரனை அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக பிச்சை உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மகேஸ்வரன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    கொலை செய்யப்பட்ட மகேஸ்வரனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், யஷ்வந்த் என்ற மகனும் உள்ளனர். பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    ரவுடி கொலை வழக்கில் அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது30), பிரபல ரவுடி. பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி என்பவரை கொன்ற வழக்கிலும் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகி வந்த மகேஷ் மலைப்பகுதியில் தங்கி வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் மலையில் அவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் மாலை வரை மகேசுடன் அவரது நண்பர் முகவூர் பூபேஸ் குப்தா நகரைச் சேர்ந்த வீரமணிகண்டன் (32) என்பவர் சுற்றி திரிந்ததை சிலர் பார்த்துள்ளனர்.

    ஆனால் தற்போது வீரமணிகண்டன் தலைமறைவாகி விட்டார். எனவே அவர்தான் மகேசை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும்.

    நொளம்பூரில் ஜாமீனில் வந்த ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    நொளம்பூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவன் சதீஷ் (30). ரவுடி. இவன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த மாதம் கோயம்பேட்டில் ஒருவரை வெட்டி வழிப்பறி செய்த வழக்கில் சதீசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவன் ஜாமீனில் வெளியே வந்தான்.

    நேற்று இரவு சதீஷ் நொளம்பூர், பாஞ்சாலி அம்மன் நகர் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் நண்பர்களுடன் மது அருந்தினான். அப்போது ஆட்டோவில் 5-க்கும் மேற்பட்ட மர்ம வாலிபர்கள் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர்.

    அவர்கள் சதீசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் இருந்த நண்பர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    பலத்த காயம் அடைந்த சதீஷ் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். உயிருக்கு போராடிய சதீசை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார்.

    இறப்பதற்கு முன்பு சதீஷ் நொளம்பூரை சேர்ந்த ரவுடி ஜெயசீலன் தன்னை வெட்டியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான ஜெயசீலனை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் சிக்கினால்தான் உடன் வந்த கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வரும்.

    கொலையுண்ட சதீஷ் மீது 2014-ம் ஆண்டு மதுரவாயலில் நடந்த ஒரு இரட்டை கொலை வழக்கு உள்பட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சில மாதங்களுக்கு முன்னர் பூந்தமல்லியில் அன்பழகன் என்ற போலீஸ்காரரை வெட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    சென்னை கொட்டிவாக்கத்தில் ரவுடி கொலை வழக்கு தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (28). இவருக்கு நதியா என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர்.

    நேற்று மாலை சுமார் 7 மணியளவில் கொட்டிவாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்துச் சென்ற பாலாஜியை, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டியதில் பாலாஜி சாலையில் மயங்கி விழுந்தார்.

    இதைக்கண்டு அரசு மதுபான கடையில் மது அருந்த வந்தவர்களும் வாகன ஓட்டிகளும் அலறியடித்து ஓடினர். உடனடியாக பாலாஜியின் தந்தையும் உறவினர்களும் ஷேர் ஆட்டோவில் காயம் அடைந்த பாலாஜியை ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த நீலாங்கரை போலீசார் பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை தெற்கு மாவட்ட, இணை கமி‌ஷனர் மகேஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி மதுக்கடையில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பாலாஜி மீது நீலாங்கரை காவல் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் வீட்டில் சோதனை நடத்தியபோது கைத்துப்பாக்கியும், சயனைடும் கைப்பற்றப்பட்ட வழக்கில் போலீசார் பாலாஜி உட்பட 3 பேரை கைது செய்தனர்.

    பாலாஜி மீது 5 வருடத்திற்கு முன்பு மடிப்பாக்கத்தில் ஒருவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    பாலாஜிக்கு பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும் வி‌ஷ ஊசி போட்டு கொல்வதாக போலீசார் தெரிவித்தனர். வி‌ஷ ஊசி போட்டு ஏற்கனவே 3 பேரை கொன்றுள்ளார்.

    ரோட்டில் நடந்துசெல்லும் போது மற்றவர்களுக்கு தெரியாமல் ஊசி போடுவார். அவர்களுக்கு எறும்பு கடித்தது போல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் அவர் ஜெயில் தண்டனை அனுபவித்து வெளியே வந்துள்ளார்.

    பின்னர் ஜாமீனில் வெளிவந்த பாலாஜி திருந்தி வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான பஷில், விக்கி உள்ளிட்ட மூன்று பேரை நீலாங்கரை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர்.

    இந்த கைது சம்பவத்திற்கு பாலாஜி போலீசாருக்கு உளவாளியாக செயல்பட்டு காட்டி கொடுத்ததாக நினைத்து அவரை பழி வாங்கவே அவர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    பாலாஜி கொலை தொடர்பாக பட்டினம்பாக்கம் மோதார் பகுதியில் பதுங்கி இருந்த ஐவின், பசூல், ராஜா, கார்த்திக், சஞ்சய் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேருக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஏரல் அருகே ஒரே நாளில் ரவுடி மற்றும் அவரது நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டம், ஏரல், குரும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஏரல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகரை சேர்ந்தவர் வினோத் (வயது28). பிரபல ரவுடியான இவர் மீது ஸ்ரீவைகுண்டம், ஏரல் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசாரின் ரவுடி பட்டியலிலும் இவர் பெயர் உள்ளது.

    இவரும் ஏரல் சேர்மன் கோவில் தெருவை சேர்ந்த தனுஷ்கோடி (30) என்பவரும் நண்பர்கள். தனுஷ்கோடியின் வீட்டிற்கு வினோத் அடிக்கடி செல்வது வழக்கம். ஏற்கனவே ஒரு வழக்கு தொடர்பாக தனுஷ்கோடி சிறையில் இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு வினோத் அடிக்கடி சென்றார். அப்போது தனுஷ்கோடியின் மனைவியிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இதை கணவரிடம் தனுஷ்கோடியின் மனைவி கூறினார். இதனால் வினோத் மீது தனுஷ்கோடி ஆத்திரம் அடைந்தார். மேலும் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் வினோத்தை கொலை செய்யவும் அவர் திட்டமிட்டார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷ்கோடி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

    தனுஷ்கோடி, வினோத் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து ஏரல் அருகே உள்ள மங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் மது குடிப்பது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று வினோத் அங்கு மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனுஷ்கோடி வினோத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஏரல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வினோத்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலையில் தனுஷ் கோடியுடன் சேர்ந்து மேலும் சிலரும் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வினோத் கொலை தொடர்பாக நேற்று முக்கிய கொலையாளிகள் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வினோத் கொலை செய்யப்பட்ட அன்று அவருடன் சேர்ந்து மது குடித்த வினோத்தின் நெருங்கிய நண்பர் ராமச்சந்திரன் (25) என்பவரையும் கும்பல் கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

    ராமச்சந்திரனின் சொந்த ஊர் குரும்பூர் அருகே உள்ள கள்ளம்பாறை. இவர் எப்போதும் வினோத்துடன் சுற்றி திரிவாராம். சம்பவத்தன்று வினோத்துடன் மது குடித்த போது அவரை கொலை செய்த கும்பல் தடுக்க வந்த ராமச்சந்திரனையும் கொடூரமாக கொன்றுள்ளனர். ராமச்சந்திரன் உடலை அதே பகுதியில் ஆற்றில் அமலை செடிகளுக்கு நடுவே வீசியுள்ளனர்.

    இந்த தகவலை பிடிபட்ட 2 பேரும் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாய ஜோஸ், ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமச்சந்திரன் உடலை மீட்டனர்.

    கொலை நடந்து 3 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ராமச்சந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே நாளில் ரவுடி மற்றும் அவரது நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டம், ஏரல், குரும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமச்சந்திரனின் சொந்த ஊரான கள்ளம்பாறையில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வினோத், ராமச்சந்திரன் கொலை தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த கொலையில் தொடர்புடையவர்கள் யார்? யார்? கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை எங்கே வைத்துள்ளனர்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஏரல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேட்மாநகரத்தை சேர்ந்தவர் வினோத்(வயது28). பிரபல ரவுடியான இவர் மீது ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

    நேற்று இவர் மோட்டார்சைக்கிளில் தனது நண்பரை பார்க்க ஏரல் அருகேயுள்ள மேலமங்களகுறிச்சி பகுதிக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர்.

    இதனிடையே அவரது மோட்டார்சைக்கிள் மட்டும் அங்குள்ள காட்டுப்பகுதியில் கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஏரல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மோட்டார்சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதனிடையே இன்று காலை அங்குள்ள சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் வினோத் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஏரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வினோத் மேலாடைகள் இல்லாமல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    அவரது ஆடைகள் அப்பகுதியில் சிதறி கிடந்தன. மர்ம நபர்கள் நள்ளிரவில் வினோத்தை கழுத்து அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வினோத்தின் நண்பர் ஏரலில் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு வினோத் அடிக்கடி வருவாராம்.

    அப்போது வினோத்துக்கும் நண்பரின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி நண்பருக்கு தெரியவந்தது. அவர் வினோத்தை கண்டித்தார்.

    அதன்பிறகும் அவர்களது தொடர்பு நீடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து வினோத்தை கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஏரல், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×