search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "risk"

    • பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பெருமளவில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது.
    • இந்த நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பெருமளவில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர்,மகேஸ்வரி ஆகியோரிடம் ஈகார் கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி நகராட்சி சார்பாக இன்று காலை முதல் தெருகளில் சுற்றி திரிந்த 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை உயிருடன் பிடித்து அருகிலிருந்த வனத்துறைக்கு சொந்தமான சமூக காட்டில் விட்டனர் இந்த நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
    • தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் 100-க்கண க்கான வாகனங்கள் மூலமாக பல்வேறு பொரு ட்கள் கொண்டு வரப்பட்டு, கடைகளில் பொருட்களை ஏற்றி, இறக்கி வருகின்றனர் கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர்.  4 மணி நேரமும் வாகனங்கள் மூலம் பொருட்கள் கொண்டுவரும் நிலையில் பணம் வசூலிக்கும் வாலிபர்கள் வாகன டிரைவர்களிடம் சீட்டு வழங்கி அதற்கான கட்டண தொகை வசூல் செய்கின்றனர். கட்டணம் வசூல் செய்யும் வாலிபர்கள் அடாவடியாக வாகன ஓட்டுனர் மற்றும் கடை உரிமையாளர்களிடம் பணம் வசூல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக அடா வடியாக வசூல் செய்யும் வாலிபர்களிடம் ஏன்? இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள், பணம் கேட்டால் கண்டிப்பாக வழங்கப்படும். ஆனால் சில நேரங்களில் வேலை பளு காரணமாக சில நிமிடங்கள் காலதாமதமானால் இது போன்ற அடாவடியாக வசூல் செய்வதால் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் தொ டர்ந்து அடாவடிப்போக்கில் கட்டண வசூல் செய்வதால் நாளடைவில் பெரிய அளவிலான சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினருக்குள் வாக்குவாதம் ஏற்படும் சமயத்தில் தகராறாக மாறி கடும் பாதிப்பை ஏற்படும் நிலையும் உருவாக்கி வருகின்றது. இது சம்பந்தமாக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தனி கவனம் செலுத்தி, கட்டணம் வசூல் செய்யும் நபர்களிடம் ஒழுங்கான முறையில் பணம் வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்களும் வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும், இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து அதிகரித்தால் வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப் பெரிய போராட்டத்தை கையில் எடுக்கும் நிலை ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
    • கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது.

    ஊட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்களுக்கு வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் ஊட்டி நகரையே பலமுறை சுற்றி வரும் நிலையே காணப்படுகிறது.

    இந்த நிலையில் கோடப்பமந்து கால்வாயின் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி முடிந்த பின்பும், பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் அந்த சாலையில் வாகனங்களை நிறுத்த முடியாமலும், வாகனங்கள் செல்வதற்கும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுத்து அங்கு இருக்கும் கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சீமை கருவேல மரங்களால் மழை வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • நிலத்தடி நீரை விஷமாக மாற்றி கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் தன்மை கொண்டது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே மு.வேலாயுதம்பாளையம் கிராம பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றின் இரு கரையோரங்களிலும் ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்து பரந்து, விரிந்து ஓங்கி நின்றபடி உள்ளதால் ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் செல்லும் போது நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மேலும் நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீர் தேங்கி மேலே எழும்பி அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய விளை நிலங்களில் புகுந்து உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படும் அபாயம் சூழ்நிலை நிலவி வருகிறது.

    மேலும் சீமை கருவேல மரங்களின் வேர்கள் மண்ணில் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த மரங்களின் வேர்கள் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் தன்மை கொண்டது. மேலும் காற்று மண்டலம் முழுவதும் நச்சுத்தன்மை ஆக்கி சுற்று பகுதி முழுவதும் பரவும் ஆற்றல் கொண்டது.

    நொய்யல் ஆற்றின் இரு கரையோரங்களிலும் வளர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களால் மழை வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சீமை கருவேல மரங்களை முற்றிலும் வெட்டி அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்று விவசாயிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடுபவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரையிலான நான்கு வழி சாலை பணிகள் மும்முரம்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் சாலைகளில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிக்கொண்டு சாகசத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், ரேசில் ஈடுபடுவதை தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இப்படி மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடுபவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சையில் சில வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரையிலான நான்கு வழி சாலை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    இந்த சாலையில் இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ரேசில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    அதாவது சாலைகளில் மின்னல் வேகத்தில் வண்டியை ஓட்டி சென்று வீலிங் சாகசம் செய்கின்றனர். குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் இந்த சம்பவம் நடந்து வருகிறது.

    மோட்டார் சைக்கிள் முன் சக்கரத்தை அலேக்காக தூக்கியும், பின் சக்கரத்தை தூக்கியும் தீப்பொறி பறக்க வீலிங் சாகசம் செய்தனர்.

    தொடர்ந்து இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே இது போன்ற சாகச சம்பவம் நடைபெறாமல் தடுக்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கண்காணிப்பு பணியையும் பலப்படுத்த வேண்டும் என்றனர்.

    • தேங்கிய மழைநீரை உரிய எந்திரங்களை கொண்டு அகற்ற நடவடிக்கை.
    • கொள்ளிடம் ஆற்றில் ஓரிரு நாட்களில் சுமார் 60 ஆயிரம் கன அடிநீர் மயிலாடுதுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கத்தில் அரசின் திட்டங்கள் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர்அமுதவல்லி தலைமையில், மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டத்தி ல்மழைநீர் வடிகால்வாய்கள் சத்தம் செய்யப்பட்டு தூர்வாரி ஆழப்படுத்துவதையும், தேங்கிய மழைநீரினை உரிய இயந்திரங்களைக் கொண்டு அகற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து உறுதி செய்ய சம்மந்தப்பட்ட அலுவலரிடம் அறிவுறுத்தப்பட்டது.

    மயிலாடுதுறையில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள இடற்பாடுகளை களையவும், நிரந்தர தீர்வு காணுவதற்கு விரிவான ஆய்வறிக்கை திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்காலிகமாக உள்ள சிக்கல்களை களைய நடவடிக்கை எடுக்க நகராட்சி அலுவலர்களிடம் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி பேசினார். அதனை தொடர்ந்து கலெக்டர் லலிதா பேசியதாவது:

    மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் ஓரிரு தினங்களில சுமார் 60 ஆயிரம் கன அடிநீர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.

    இதனால் பொது மக்கள் யாரும் நீர்நிலைகள் அருகில் செல்லவோ, குளிப்பதோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ள ப்படுகி றார்கள். மாவட்டத்திலுள்ள 4 பல்நோக்கு நிவாரன முகாம்கள் மற்றும் தற்காலிக நிவாரன முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு எதிர் பாராத அசம்பாவிதங்களை தவிர்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், உதவி ஆணையர் (கலால்) அர நரேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள்அ ர்ச்சனா (சீர்காழி), யுரேகா (மயிலாடுதுறை), இணை இயக்குனர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை முருகண்ணன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர்கவித பிரியா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆலத்தூரில் இருந்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளுக்கு ஆலத்தூரில் இருந்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும் மின்கம்பங்கள் குடிசை பகுதிகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அம்பேத்கர் நகரில் உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

    இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். எனவே உயிரிழப்பு ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆபத்தில் சிக்கியுள்ளவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்ற பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை மாணவர்களுக்கு செய்து விளக்கம் அளித்தனர்.
    • நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி அனைவரையும் வரவேற்றார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடத்தினர்.

    அரக்கோணம் நான்காவது பட்டாலியனை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்கள், குழு கமாண்டர் ராஜேஷ்குமார் மீனா, ராஜன் தலைமையில் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை தாங்களே காத்துக் கொள்வது, ஆபத்தில் சிக்கியுள்ள மற்றவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்று பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகையை மாணவ-மாணவிகளுக்கு செய்து விளக்கம் அளித்தனர்.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, அலுவலர் சுகுமாரன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் என்.துளசி ரங்கன், ஏ.வரதராஜன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, சீர்காழி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன், சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நடேசன், ஜோதி, சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் தொகுத்து வழங்கினார்.

    இரவு நேரங்களில் போக்குவரத்து மிகுந்த சமயங்களில் மரம் கிடைப்பதை அறிந்து கொள்ள முடியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    பூதலூர்:

    கல்லணையிலிருந்து கோவிலடி வழியாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்காக கோவிலடி, திருச்சின்னம் பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் சாலையோரம் இருந்த பழமை வாய்ந்த பல மரங்கள் அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டன.

    வெட்டப்பட்ட மரங்கள் அனைத்தும் அப்புறப்ப டுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சின்னம் பூண்டி கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த மரமும் ஒன்று வெட்டி அகற்றப்பட்டது. அதன் அடிபாகம் வெட்டப்பட்டு வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படாமல் அந்த இடத்திலேயே சாலையோரம் கிடக்கிறது.அந்த மரத்துண்டில் சிவப்பு கொடி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    பகல் நேரங்களில் மரம் இருப்பதை சிகப்பு கொடியால் அறிந்துகொள்ள இயலும். இரவு நேரங்களில் பரபரப்பான போக்குவரத்து மிகுந்த சமயங்களில் மரம் கிடைப்பதை அறிந்து கொள்ளமுடியாமல் விபத்துக்கள் ஏற்படக்கூ டும். எனவே உடனடியாக வெட்டப்பட்டு அகற்றப்ப டாமல் இருக்கும் அடிமர த்தை அகற்றி போக்குவரத்து சீராக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதயநோய் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக நேரம் தூங்குவதாலும் இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
    லண்டன்:

    ஜெர்மனியின் முனிச் நகரில் இதய நோய் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மருத்துவ நிபுணர் எபாமேனோண்டஸ் ஃபௌண்டாஸ் கூறுகையில், 10 லட்சம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட 11 ஆய்வுகள் மூலம் குறைவாக தூங்குவதால் இதயநோய் வருவது போன்று தொடர்ந்து அதிகமாக தூங்கினாலும் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், எந்த காரணிகளால் இதயம் பாதிக்கப்படும் என்பதை கண்டறிய இன்னும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போதைய ஆய்வின்படி, குறைவாக தூங்குபவர்களுக்கு 11 சதவிகிதம் இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், தொடர்ந்து அதிகமாக தூங்குபவர்களுக்கு 33 சதவிகிதம் அதாவது 3 மடங்கு அதிகமாக இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 
    போடியில் பரபரப்பு துர்நாற்றம் வீசும் குப்பைகளால் மாணவர்களுக்கு ஆபத்து

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே போடியில் ஜ.க.நி ஆரம்ப பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 1,000மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றன. இந்தபள்ளியின் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது.

    அதன் அன்றாட குப்பைகளை இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் பகுதிகளில் குப்பைகளை நகராட்சி சேகரிக்கின்றன. குப்பைகளால் மிகுந்த துர்நாற்றம் வீசுகின்றது. துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    பள்ளியில் பயிலும் சிறு வயது குழந்தைகள் என்பதால் குப்பைகளின் துர்நாற்றத்தினால் அடிக்கடி குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, மூச்சுத் திணறல், காய்ச்சல் ஏற்படுகின்றது.

    கல்வி கற்கும் குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவதால் கல்வி தரம் பாதிக்கப்படுகிறது.

    எனவே நகராட்சியும், பள்ளி நிர்வாகவும் சேர்ந்து குப்பைகள் சேகரிக்கும் இடத்தை வேறொரு இடத்திற்கு மாற்றி அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என பொதுமக்களும், குழந்தைகளின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    தேவதானப்பட்டி அருகே சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால் விபத்து அபாயம் உள்ளது.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை தேவதானப்பட்டிக்கு கொண்டு வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதேபோல் மாணவ-மாணவிகளும் இங்கு வந்து வெளியூர்களுக்கு செல்வதால் தேவதானப்பட்டி முக்கிய சந்திப்பாக உள்ளது.

    கோவை, திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருவதால் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. பைபாஸ் சாலை அருகே பாலம் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது முழுவதும் முடிவடைந்த நிலையில் சாலை அமைக்கப்படாததால் விபத்து அபாயம் உள்ளது.

    இதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக சாலை சாரல் மழைக்கே செல்லரித்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பால பணிகள் முடிந்துள்ளது. ஆனால் சாலை சீரமைக்கப்படாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×