search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதானப்பட்டி அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் விபத்து அபாயம்
    X

    தேவதானப்பட்டி அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் விபத்து அபாயம்

    தேவதானப்பட்டி அருகே சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால் விபத்து அபாயம் உள்ளது.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை தேவதானப்பட்டிக்கு கொண்டு வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதேபோல் மாணவ-மாணவிகளும் இங்கு வந்து வெளியூர்களுக்கு செல்வதால் தேவதானப்பட்டி முக்கிய சந்திப்பாக உள்ளது.

    கோவை, திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருவதால் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. பைபாஸ் சாலை அருகே பாலம் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது முழுவதும் முடிவடைந்த நிலையில் சாலை அமைக்கப்படாததால் விபத்து அபாயம் உள்ளது.

    இதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக சாலை சாரல் மழைக்கே செல்லரித்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பால பணிகள் முடிந்துள்ளது. ஆனால் சாலை சீரமைக்கப்படாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×