search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "recruitment"

    • தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்..

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் நகர தி.மு.க. சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது. 11-வது வார்டு பகுதிகளில் நகர்மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. அவை தலைவர் குணா, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், தொ.மு.ச நிர்வாகி சரவணன், மண்ணெண்ணை கடை செல்வம், பட்டறை சரவணன், இளைஞர் அணி நிர்வாகி கார்த்தி மற்றும் டிரைவர் சிவா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின் போது திமுகவில் இணைந்த அனைவருக்கும் நகர திமுகவைத் தலைவர் குணா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு புத்தகம், இலவச சேலை மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பரிசாக வழங்கினார்.

    • பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மூன்று நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற்றது.

    முதல் நாள் மாலையில் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு பிலோமின் தாஸ் முன்னிலையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகள் மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.

    2-வது நாள் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் காலை, மதியம், மாலை திருப்பலி மற்றும் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    இரவு கலை நிகழ்ச்சிகள் வான வேடிக்கை முழங்கிட மணங்கமலும் மலர்கள் மின்னொளி அலங்கார ஆடம்பர தேர் பவனே கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது.

    முன்னதாக பாபநாசம் மேல வீதியில் புனித செபஸ்தியாருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    3வது நாள் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு அமிர்த சாமி முன்னிலையில் திருவிழா திருப்பலி மற்றும் திருப்பலி நடைபெற்றது மாலை கொடி இறக்கம் நடைபெற்றது திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் , இணை பங்கு தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் மற்றும் அருள் சகோதிரிகள் பங்கு பேரவை அன்பியங்கள் , பங்கு இறை மக்களை, பங்கு கிளை கிராம இறை மக்கள் செய்திருந்தனர்.

    • புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
    • கிராம கணக்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி எடுத்துரைக்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட 116 கிராம உதவியாளர்க ளுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெய சீலன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் கிராம உதவி யாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

    அவர்களுக்கான அடிப்ப டை பயிற்சி வகுப்பு இன்று தொடங்க ப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பு 30 நாட்களுக்கு நடைபெறும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் 3 நாட்கள் ஒருங்கிணைப்பு பயிற்சியும், 27 நாட்கள் அந்தந்த வட்டாரங்களில் பல்வேறு அலுவலர்கள் மூலமும் பயிற்சி அளிக்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பில் கிராம உதவியாளர்களின் பணிகள், வருவாய்த்துறை யின் கிராம அளவிலான திட்டங்களை செயல் படுத்துதல், கிராம நிர்வாக அலுவலருக்கு உதவி செய்தல், கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு தொ டர்பாக பிரச்சனைகளை ஆரம்ப கால கட்டங்களின் கண்டறிந்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்தல், கிராம கணக்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி எடுத்துரைக்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பினை கிராம உதவியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கிராமங்க ளில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு, அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடைவதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர்(பொது) சிவகுமார், 116 கிராம உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு பணி நடக்கிறது.
    • இது தொடா்பான கூடுதல் தகவல்களை பெற www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய விமானப் படையில் Medical Assistant (Male Candidates) பணிக்கு, சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தை சேர்்ந்தோர்்களுக்கான, ஆட்சோ்ப்பு பணி சென்னை தாம்பரத்தில் உள்ள எண் 8, Airman Selection Centre, Air Force Station-ல் வருகிற 1.2.2023 முதல் 9.2.2023 வரை நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டை சேர்ந்த வா்களுக்கு 1.2.2023, 2.2.2023 மற்றும் 7.2.2023, 8.2.2023 ஆகிய தேதிகளில் மேற்கண்ட ஆட்சோ்ப்பு பணி நடைபெற உள்ளது. மணமாகாத ஆண்கள் 27.6.2002 முதல் 27.6.2006-க்குள் பிறந்திருக்க வேண்டும். மணமான ஆண்கள் 27.6.1999 முதல் 27.6.2004-க்குள் பிறந்திருக்க வேண்டும்.

    கல்வித்தகுதியில் 10, பிளஸ்-2 இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 வருடங்களுக்கான Vocational Course, Non-vocational பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    10, பிளஸ்-2 இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50சதவீதம் மதிப்பெண்கள் தோ்ச்சி பெற்று, கூடுதலாக டிப்ளமோ,B.Sc (பார்மசி), படிப்பில் தோ்ச்சி பெற்று 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    உடற்தகுதியில் Medical Assistant பணிக்கு 152.2 செ.மீ உயரமும், மார்்பளவு 5 செ.மீ விரிவடைய வேண்டும். Visual Acutely 6/36 each eye, Correctable to 6/9 each eye எனவும் not exceeding + 3.50 D including Astigmatism, Colour vision CP -III எனவும் இருக்க வேண்டும்.இது தொடா்பான கூடுதல் தகவல்களை பெற www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.
    • சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடற்தகுதி தேர்வு நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் துறைக்கு உதவியாக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளுக்கு ஊர்காவல் படையினர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 67 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்புவதற்காக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

    இதில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

    அதில் 169 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் உயரம், எடை பார்க்கப்பட்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

    இதில் 14 பெண்கள் உள்பட மொத்தம் 136 பேர் தேர்வு செய்யப்ப ட்டார்கள். அவர்களின் நன்னடத்தை விவரங்களை சரிபார்த்த பிறகு காலியாக உள்ள 67 இடங்களில் 58 ஆண்கள், 9 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ரேசன்கடையில் காலியாக உள்ள 146 விற்பனையாளர்கள்-18 கட்டுநர்கள் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு 15-ந் தேதி முதல் நடக்கிறது.
    • 04562- 290769 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    விருதுநகர்

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 146 விற்பனையாளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற ப்பட்டுது.

    அவை பரிசீ லிக்கப்பட்டு, தற்காலி கமான தகுதியான விண்ண ப்பதாரர்க ளுக்கான நேர்முக தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பின்புறம் உள்ள அரசு தொழில் மற்றும் பட்டாசு மையத்தில் நடைபெற உள்ளது.

    எனவே நேர்முக தேர்விற்கான அனுமதி சீட்டு விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தின் வழி www.vnrdrb.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டு தபால்வழி அனுப்பி வைக்கப்படமாட்டாது. இதில் ஏதேனும் சந்தேங்கள் ஏற்பட்டால் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவின் 04562- 290769 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    • விண்ணப்பதாரா் கணினியின் திறன்மிக்கவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
    • தகவல் பகுப்பாளா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிவிண்ணப்பிக்கலாம்.இது குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. ஒரு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணிக்கு மாதம் ரூ.18,536 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    இதில் விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், கணினி (பிசிஏ) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் கணினியின் திறன்மிக்கவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணியானது மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் இதனை அடிப்படையாக கொண்டு எந்தவிதமான அரசுப் பணியும் கோர இயலாது.

    ஆகவே, இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபா்கள் கல்விச் சான்று நகல்கள், அனுபவச் சான்று மற்றும் புகைப்படத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு டிசம்பா் 10 ந்தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971198 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இதற்கான விண்ணப்பங்களை திருப்பூா் மாவட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 633, 6வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
    • வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வௌ்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்்துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

    வருகிற 28-ந் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 10 மணிஅளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுநர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்்தி தனியார்் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.

    இதில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவா் சோ்க்கை, வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவி த்தொகை பெறுவதற்கான விண்ணப்பபடிவம் ஆகியவையும்் வழங்கப்படும்.

    விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞா்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு அடையாள அட்டை, ஆதார்்அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்துசெய்யப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊர்க்காவல்படைப் பிரிவில் சேர்ந்து சேவை செய்ய விரும்பும் நபர்கள் 10 - ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
    • சேவை புரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூ.280 மட்டும் சேவை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்ட ஊர்காவல்படைப் பிரிவில் சேர்ந்து, சேவை செய்வதற்காக மாவட்டத்தில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

    ஊர்க்காவல்படைப் பிரிவில் சேர்ந்து சேவை செய்ய விரும்பும் நபர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு உட்பட்ட வராகவும், நல்ல உடற்தகுதி யுடனும் இருத்தல் வேண்டும்.

    குறைந்தபட்ச கல்வி தகுதி 10 - ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அரசு துறையில் பணி புரிபவர்களாகவோ அல்லது சுயதொழில் செய்பவர்களாகவோ இருக்கலாம்.

    தேர்ந்தெடுக்கப்படும் ஊர்க்காவல்படை ஆளினர்களுக்கு காவல் துறையினரால் 45 வேலை நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும்.

    அதன் பின்னர் சேவை புரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூ.280 மட்டும் சேவை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

    இப்பிரிவில் சேவை செய்ய விருப்பமுள்ள வர்கள், பயோடேட்டா, கல்வி மற்றும் வயது சான்றின் நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுயமுகவரி குறிப்பிட்ட அஞ்சல் அட்டையுடன் விருப்ப மனுவினையும் வருகிற 30-ந் தேதி மதியம் 12 மணிக்குள் பாளையில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 26-ந் தேதி நடக்கிறது.
    • தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள், விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 26-ந் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வரவேண்டும்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
    • இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் 19 ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    டாக்டர் எம்.ஜி.ஆர் . கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது . இப்பயிற்சியானது அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பட்டயப் பயிற்சி பெறாத பணியாளர்களுக்கு பயிற்சி பெற ஒரு நல்ல வாய்ப்பாகும். கல்வித்தகுதியாக பழைய 10 - ம் வகுப்பு தேர்ச்சி ( பழைய எஸ்.எஸ்.எல்.சி ) புதிய 10 - ம் வகுப்பு தேர்ச்சி இப்பயிற்சிக்கான பெற்றிருக்க வேண்டும் . அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி அனைவருக்கும் வழங்குவதில் தடைகள் வேண்டுவ தி ல்லையாதலால் ஓராண்டு தொடர் பணி இருக்க வேண்டுமென்ற நிபந்தனையின்றி கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிரந்தர பணியாளர்களும் இந்தப் பயிற்சியினை மேற்கொள்ளலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

    விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரர் பணிநியமனம் செய்யப்பட்ட முறைகள் குறித்து அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக ( அல்லது ) கருணை அடிப்படையில் ( அல்லது ) அரசு பதிவாளர் உத்தரவுப்படி விவரம் குறிப்பிடப்பட வேண்டும் . பயிற்சி அலுவலக வார விடுமுறை நாட்களில் நடைபெறும் . தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவில் கூட்டுறவு மேலாண்மை பட்டயம் கணினி மேலாண்மை , மற்றும் நகைமதிப்பிடும் அதன் நுட்பங்களும் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் 19 ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது . டாக்டர் எம்.ஜி.ஆர் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் 100 ரூபாய் ரொக்கமாக செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 1 ந்தேதி ஆகும் . இப்பயிற்சியானது 8 ந்தேதி தொடங்கப்படவுள்ளது . மேலும் விபரங்களுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் . கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் .3 கடற்கரை சாலை , சரவணபவா கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகம் , கடலூர் -1 தொலைபேசி எண் 04142-222619 மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் செய்திக்குறிப்பில் கூறிப் பட்டிருந்தது. 

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள், விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி , தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 22-ந் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

    இதில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    ×