search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானப்படை"

    • 300 பயணிகளை மீட்ட நிலையில் மீதி இருந்த 500 பயணிகளை மீட்பதற்குள் நீர்வரத்து அதிகமானது.
    • ரெயிலில் சிக்கியிருப்பவர்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை ஹெலிகாப்டரில் மீட்க முடிவு செய்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3-வது நாளாக தவித்து கொண்டிருக்கும் 500 பயணிகளையும் மீட்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    திருச்செந்தூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னை நோக்கி புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் மழையில் சிக்கியது.

    300 பயணிகளை மீட்ட நிலையில் மீதி இருந்த 500 பயணிகளை மீட்பதற்குள் நீர்வரத்து அதிகமானது. எனவே அவர்களை மீட்க முடியவில்லை.

    ஒரு பக்கம் பெருக்கெடுத்து ஓடும் தாமிரபரணி ஆறு. மற்ற மூன்று பக்கமும் அளவுக்கு அதிகமான வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு குழுவினரால் நெருங்க முடியவில்லை. இன்று 3-வது நாளாக ரெயிலிலேயே தவிக்கிறார்கள்.

    சூலூர், கொச்சி ஆகிய இடங்களில் இருந்து கடற்படை, விமானப்படையை சேர்ந்த 7 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    ரெயிலில் சிக்கியிருப்பவர்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை ஹெலிகாப்டரில் மீட்க முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி ரெயிலில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை இன்று ஹெலிகாப்டரில் மீட்டனர். அந்த பெண்ணுக்கு தேவையான மருத்துவ முதலுதவிகள் அளிக்கப்பட்டன. பின்னர் அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வெள்ளத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் உள்பட 55 பெண்கள், 19 சிறுவர்கள், 3 கைக்குழந்தைகளை ராணுவத்தினர் நேற்று மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

    தேசிய பேரிடர் மீட்பு குழுவும், ரெயில்வே உயர் அதிகாரிகளும் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

    ரெயில் பெட்டிகளில் இருக்கும் பயணிகளுக்கு இன்று காலையில் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

    இன்று மாலைக்குள் அனைவரையும் மீட்பதற்கு முப்படைகளும் ஒருங்கிணைந்து வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவாக மீட்பு பணி தொடங்கும் என்று ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் உள்ளது
    • போர் விமானம் நல்ல நிலையத்தில் உள்ளதால் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேப்ப மூடு பகுதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் செல்பி பாயிண்ட் அமைக் கப்பட்டுள்ளது.

    இந்த பூங்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். பூங்காவிற்குள் பாகிஸ்தான் போரில் கடந்த 1971-ம் ஆண்டு ஈடுபட்ட மேக் 21 ரக போர் விமானம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த போர் விமானமானது கடந்த 2014-ம் ஆண்டு விமானப் படையால் வழங்கப்பட்டது.

    தற்பொழுது இந்த விமானம் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக திருவனந்தபுரம் விமா னப்படை தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் பிஜு, அபினவ் ஆகியோர் கொண்ட குழுவினர் மாநக ராட்சி அலுவல கத்திற்கு வந்தனர். மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிர மணியனுடன் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் வைக்கப் பட்டுள்ள விமானத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:-

    போர் விமானத்தை நல்ல நிலையில் மாநகராட்சி பராமரித்து வருகிறது. போர் விமானத்தில் பொதுமக்கள் தங்களது பெயர்களை எழுதி வைத்துள்ளனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற போர் விமானத்தில் பெயர்களை எழுதாமல் இருக்க எச்சரிக்கை பலகை மாநகராட்சி சார்பில் வைக்க வேண்டும். விமானத்தின் உற்பத்தி, அது என்ன என்ன சேவை செய்துள்ளது என்பது குறித்த முழு விவரத்தையும் எழுதி அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும்.

    விமானத்தின் இரு புறங்களில் உள்ள மரக்கி ளைகளை அகற்ற வேண்டும். இதனால் விமானத்தின் மீது மரக்கிளைகள் முறிந்து விழுவதை தவிர்க்கலாம். மேலும் போர் விமானம் நல்ல நிலையத்தில் உள்ளதால் அந்த விமானத்திற்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கலெக்டர் தகவல்
    • 2-ம் கட்டமாக உடற்தகுதிகள் தேர்வும் நடைபெறும்

    திருவண்ணாமலை:

    இந்திய விமானப்படையில் அக்னிவீரவாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிகளுக்கு ஜூலை மாதம் 27 முதல் ஆகஸ்டு 17 வரையில் விண்ணப்பிக்கலாம்.

    இந்திய விமானப்படையில் அக்னிவீரவாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வயது வரம்பு 27.06.2003 முதல் 27.12.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை 10, பிளஸ் 2 சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் (மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ்ஆ ட்டோமொபைல் கம்ப்யூட்டர் சயின்ஸ்) 3-ம் ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    அல்லது Instrumentation Technoloy / Information Technology அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் நிறுவனத்தில் இருந்து 50 சதவீதம் மதிப்பெண்களுடன் மொத்தம் 50% மதிப்பெண்கள் மற்றும் டிப்ளமோ படிப்பில் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் (அல்லது டிப்ளமோ படிப்பில் ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லை என்றால் இடைநிலை மெட்ரிகுலேஷன்) பெற்றிருக்க வேண்டும்.

    அறிவியல் பாடங்கள் தவிர மற்றவையாக COBSE உறுப்பினராக பட்டியலிடப்பட்ட மத்திய மாநில கல்வி வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பாடத்திலும் இடைநிலை 10, பிளஸ் 2 சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மொத்தத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். உடற் தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.5 சென்டி மீட்டர் ஆண்களும் 152 சென்டி மீட்டர் பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

    இப்பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.30,000 மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வும் வழங்கப்படும். தேர்வுக் கட்டணமாக ரூ.250 ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு இணைய வங்கி மூலமாக பணம் செலுத்த வேண்டும். முதற்கட்ட தேர்வாக இணைய வழியில் பொதுஅறிவு மற்றும் ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் தேர்வும், 2-ம் கட்டமாக பொதுஅறிவு. மற்றும் ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் தேர்வும், 2-ம் கட்டமாக உடற்தகுதிகள் தேர்வும் நடைபெறும். 2 தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் இறுதியில் தேர்வு செய்யப்படுவர்கள்.

    ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பைப் பார்த்து, தேர்வு முறை, தேர்வுக்கு வேண்டிய ஆவணங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

    எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ். தெரிவித்துள்ளார்.

    • குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இணையவழியாக வருகிற 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

    தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    அக்னிவீரர்களுக்கான இணையவழித்தேர்வு அக்டோபர் 13-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

    27.6.2003 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் 27.12.2006 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    கல்வித்தகுதி 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    அரசால் அங்கீகரிக்க ப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    உடல்தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும்.

    தேர்வானது மூன்று முறைகளை கொண்டது.

    எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது.இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம்.

    அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    இந்த பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணிமுடி ந்தபிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணி புரிய அனுமதிக்கப்படு வார்கள்.

    இந்த பதவிக்கு விண்ணப்பிக்க இந்திய விமானப்படை அக்னி பாத்தின் மேலே உள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    அவ்வாறு விண்ணப்பித்த வர்கள் தங்களது முழு விவரத்தை https.//form.gle/k9ynQSJ9NRJoWkoc7 என்ற லிங்கில் பதிவு செய்ய வேண்டும்.

    எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிகஅளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது.
    • முதலில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது. பழங்குடியினர் நலத்துறையின் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ள இந்த அரசு கட்டிடத்தின் 3-வது மாடியில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென்று தீப்பிடித்தது. 3-வது மாடியில் இருந்து மேலே உள்ள 3 தளங்களிலும் தீ மளமளவென வேகமாக பரவியது. ஏ.சி. மெஷின்கள், சிலிண்டர்களில் தீ பரவியதால் பல வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    முதலில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டது. 14 மணி நேர கடும் போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்களை ஈடுபடுத்தி உள்ளனர்.
    • மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு.

    மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபாலில் உள்ள சத்புரா பவன் என்ற கட்டிடம் அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமானது.

    இந்த அரசு கட்டிடத்தில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சத்புரா பவனின் மூன்றாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கும் தீ பரவியது.

    இதையடுத்து, ஊழியர்கள், அலுவலர்கள் உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேறினர். இதனால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    கட்டிடத்தில் இருந்த பர்னிச்சர் மற்றும் ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்களை ஈடுபடுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், தீ 50 சதவீதம் கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தீயை முழுவதும் அணைக்க இந்திய விமானப் படையின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது.

    மேலும், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு பணி நடக்கிறது.
    • இது தொடா்பான கூடுதல் தகவல்களை பெற www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய விமானப் படையில் Medical Assistant (Male Candidates) பணிக்கு, சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தை சேர்்ந்தோர்்களுக்கான, ஆட்சோ்ப்பு பணி சென்னை தாம்பரத்தில் உள்ள எண் 8, Airman Selection Centre, Air Force Station-ல் வருகிற 1.2.2023 முதல் 9.2.2023 வரை நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டை சேர்ந்த வா்களுக்கு 1.2.2023, 2.2.2023 மற்றும் 7.2.2023, 8.2.2023 ஆகிய தேதிகளில் மேற்கண்ட ஆட்சோ்ப்பு பணி நடைபெற உள்ளது. மணமாகாத ஆண்கள் 27.6.2002 முதல் 27.6.2006-க்குள் பிறந்திருக்க வேண்டும். மணமான ஆண்கள் 27.6.1999 முதல் 27.6.2004-க்குள் பிறந்திருக்க வேண்டும்.

    கல்வித்தகுதியில் 10, பிளஸ்-2 இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 வருடங்களுக்கான Vocational Course, Non-vocational பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    10, பிளஸ்-2 இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50சதவீதம் மதிப்பெண்கள் தோ்ச்சி பெற்று, கூடுதலாக டிப்ளமோ,B.Sc (பார்மசி), படிப்பில் தோ்ச்சி பெற்று 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    உடற்தகுதியில் Medical Assistant பணிக்கு 152.2 செ.மீ உயரமும், மார்்பளவு 5 செ.மீ விரிவடைய வேண்டும். Visual Acutely 6/36 each eye, Correctable to 6/9 each eye எனவும் not exceeding + 3.50 D including Astigmatism, Colour vision CP -III எனவும் இருக்க வேண்டும்.இது தொடா்பான கூடுதல் தகவல்களை பெற www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டாடா மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் மூலம் உள்நாட்டில் இந்த விமானங்கள் தயாரிக்கப்படும்.
    • புதிய திட்டத்திற்கு, அக்டோபர் 30 ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படைக்கான போக்குவரத்து விமானம் தயாரிக்கும் திட்டத்திற்கு குஜராத் மாநிலம் வதோதராவில் நாளை மறுநாள் 30ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் கூறியதாவது:

    (இந்திய விமானப்படைக்கு) ஸ்பெயின் நிறுவனத்திடமிருந்து 56 சி-295 எம்.டபிள்யூ ரக போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்படி, 16 விமானங்கள் பெறப்படும். எஞ்சிய 40 விமானங்கள் டாடா மற்றும் டிசிஎஸ் கூட்டமைப்பு மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்படும். தனியார் நிறுவனம் மூலம் முதல் முறையாக இந்திய ராணுவத்திற்கான விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. 

    இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.21,935 கோடியாகும். விமானப்படைக்கான இந்த விமானங்கள் மக்கள் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விமானப்படைக்கான முதல் போக்குவரத்து விமானம் 2026 செப்டம்பர் மாதம் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளது.
    • இதில் ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதங்களைப் பொருத்தி தாக்குதல் நடத்தமுடியும்.

    புதுடெல்லி:

    பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இலகுரக போர் ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது. இது 5.8 டன் எடையுள்ள இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர். ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதங்களை இதில் பொருத்தி தாக்குதல் நடத்தமுடியும்.

    இந்த ஹெலிகாப்டர், உயரமான மலைப்பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வகையிலான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வானிலையிலும் இயங்கக்கூடியது. இரவு நேரத்திலும், காடுகளிலும் பயன்படுத்தலாம். மெதுவாக பறக்கும் விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம் ஆகியவற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம். இந்த ஹெலிகாப்டரில் பல்வேறு வகையான ஆயுதங்களை பொருத்தி ஏற்கனவே பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இந்திய விமானப்படையில் இந்த ஹெலிகாப்டர் இன்று முறைப்படி சேர்க்கப்படுகிறது. இதற்கான விழா ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது.

    • விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு நடவடிக்கை கடந்த 24-ந்தேதி தொடங்கியது.
    • விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

    புதுடெல்லி

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது.

    அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. குறிப்பாக விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு நடவடிக்கை கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தனர். இத்திட்டத்தின் கீழ் சேருவதற்காக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

    அந்தவகையில் "அக்னிபாத்" ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் வந்த 6,31,528 விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை மிக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது இந்த முறை 7,49,899 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    • விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு கடந்த 24-ந்தேதி தொடங்கியது.
    • வருகிற 5-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    புதுடெல்லி:

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன.

    ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. குறிப்பாக விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு நடவடிக்கை கடந்த 24-ந்தேதி தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த 7 நாட்களில் மட்டும் 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக விமானப்படை தெரிவித்து உள்ளது.

    வருகிற 5-ந்தேதி வரை முன்பதிவுக்கான கால அவகாசம் இருப்பதால், மேலும் அதிக இளைஞர்கள் விண்ணப்பிப்பார்கள் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    • விமானப்படைக்கான ஆள்தேர்வு பணி கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
    • விண்ணப்பம் செய்ய ஜூலை 5-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

    புதுடெல்லி

    முப்படைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. வடமாநிலங்களில் போராட்டம் வெடித்தபோதிலும், திட்டம் வாபஸ் பெறப்படாது என்று கூறிவிட்டது. ராணுவம், விமானப்படை, கடற்படை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஆள்தேர்வு நடைபெறுகிறது.

    விமானப்படைக்கான ஆள்தேர்வு பணி கடந்த 24-ந்தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம், அன்று காலை 10 மணி முதல் செயல்பட தொடங்கியது.

    நேற்று காலை 10.30 மணி நிலவரப்படி, 94 ஆயிரத்து 281 பேர் விண்ணப்பித்துள்ளதாக ராணுவ அமைச்சக செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு தெரிவித்தார். விண்ணப்பம் செய்ய ஜூலை 5-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

    ×