என் மலர்tooltip icon

    இந்தியா

    சொன்ன நேரத்தில் எந்த திட்டமும் முடிவடைவதில்லை..  ராஜ்நாத் சிங் முன்னிலையில் விமானப்படை தளபதி அதிருப்தி
    X

    சொன்ன நேரத்தில் எந்த திட்டமும் முடிவடைவதில்லை.. ராஜ்நாத் சிங் முன்னிலையில் விமானப்படை தளபதி அதிருப்தி

    • ஒரு திட்டம் கூட சரியான நேரத்தில் முடிக்கப்படவில்லை.
    • நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதியளித்தால், அதை சரியான நேரத்தில் வழங்க வேண்டும்.

    முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஏற்படும் தாமதங்கள் குறித்து இந்திய விமானப்படைத் தளபதி அமர்பிரீத் சிங் விமர்சித்துள்ளார்.

    ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும், விநியோகங்கள் சரியான நேரத்தில் தொடங்காதது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார்.

    சிஐஐ ஆண்டு மாநாட்டில் பங்கேற்ற அமர்பிரீத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது, ஒப்பந்தங்கள் பல முறை கையெழுத்திடப்படுகின்றன, ஆனால் ஆயுதங்கள் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை. காலக்கெடு ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஒரு திட்டம் கூட சரியான நேரத்தில் முடிக்கப்படவில்லை.

    பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குவதற்கு நிலையான காலக்கெடு எதுவும் இல்லை. 83 தேஜாஸ் Mk1A போர் விமானங்களை வழங்குவதற்காக பிப்ரவரி 2021 இல் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் ரூ.48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

    விமான விநியோகம் மார்ச் 2024 இல் தொடங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை, ஒன்று கூட வழங்கப்படவில்லை.

    கடந்த காலங்களில், தேஜாஸ் எம்கே1 விமானங்களை வழங்குவதிலும் தாமதங்கள் ஏற்பட்டன. தேஜாஸ் Mk2 முன்மாதிரி இன்னும் பெறப்படவில்லை. ஆம்கா போர் விமானத்திற்கான முன்மாதிரி கூட தயாராக இல்லை. நம் நாட்டிற்குள் உற்பத்தி செய்வதில் மட்டுமல்ல, நம் நாட்டிற்குள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

    இராணுவத்திற்கும் தொழில்துறைக்கும் இடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதியளித்தால், அதை சரியான நேரத்தில் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    பொது நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் முன்னிலையில் விமானப்படை தலைவர் அதிருப்தி தெரிவித்துள்ளது பேசுபொருளாகி உள்ளது.

    Next Story
    ×