search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்பவனி"

    • தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
    • திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    மணிகண்டம்:

    மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு நற்கருணை பவனியும், இயேசுவின் திருப்பாடுகள் காட்சி எனப்படும் பாஸ்கா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி மாலையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    நள்ளிரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 4 சப்பரங்களில் அருள்நிறை அடைக்கல அன்னை, செபஸ்தியார், அந்தோணியார் மற்றும் ஆவூர் தேர் என்று அழைக்கப்படும் சப்பரத்தில் உயிர் நீத்த ஆண்டவர் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் தேர்பவனி நடைபெற்றது.

    முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் நேற்று அதிகாலை நிலையை அடைந்தது. விழாவில் நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர், சோமரசம்பேட்டை, புங்கனூர், மணிகண்டம், திருச்சி, அம்மாபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று காலை தேரடி திருப்பலி, புது நன்மை ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவில் உபய தேர்பவனியும், கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து பட்டிமன்றம் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக மணியக்காரர்கள் சேவியர், ஜெரின் ராஜதுரை, கொத்து மணியக்காரர்கள், கத்தோலிக்க இளைஞர் மன்றத்தினர் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

    • 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் அசன உணவு வழங்கப்பட்டது.
    • தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பழமை வாய்ந்த உலக மீட்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் மாலை சிறப்பு திருப்பலி, இறைமக்களுக்கு அசன உணவும் வழங்கப் பட்டது. நேற்று முன்தினம் நற் கருணை பவனி நடை பெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை பங்கு ஆலயத்தில் வெய்கா லிப்பட்டி புனித ஜோசப் கல்வியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயலர் அருட்பணி சகாய ஜான், பண்டாரகுளம் பங்குத் தந்தை அருட்பணி மிக்கேல் ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி னர்.

    இதைதொடர்ந்து திருத்தேர் அர்ச்சிக்கப்பட்டது. உலக மீட்பர் திரு உருவ தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி ஆலங் குளம்-தென்காசி சாலை வழியாக அண்ணாநகர் மற்றும் ஆலங் குளத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது. தேர் பவனியில் இறைமக்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் உலக மீட்பர் ஆலயம் பங்குத்தந்தை அருட்பணி எஸ்.எம்.அருள் ராஜ் மற்றும் வின்சென்ட் தே பவுல் சபை இறை மக்கள் செய்திருந்தனர்.

    • ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயத்திற்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை திருமணம் ஆகாத பெண்கள், கர்ப்பிணி பெண்கள் வந்து குத்துவிளக்கிற்கு எண்ணெய் ஊற்றி சென்றால் கேட்டவரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இறுதிவாரத்தில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான வியாகுல அன்னை தேர்பவனி நேற்றுஇரவு நடைபெற்றது. முன்னதாக திருவிழா கூட்டுப்பாடல் திருப்பலி மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. இதில் பேராலய பங்குதந்தை பிரபாகர், உதவி பங்குதந்தை பிரவீன் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேர்கள் புனிதம் செய்யப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. முதலாவதாக மைக்கேல் சம்மனசு தேரும், தொடர்ந்து புனிதசவேரியார், புனிதசூசையப்பர், புனிதஅந்தோணியார் சொரூபங்களை தாங்கிய தேரும், இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக வந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பா டுகளை உதவி பங்குதந்தை பிரவீன் அடிகளார் தலைமையில் பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சென்ட், செயலாளர் குழந்தைராஜ், பக்த சபைகள், அன்பிய பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

    • அன்னையின் பிறப்பு நாளான நேற்று மாலை சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
    • பேராலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறுசப்பரபவனியும் , பல்வேறு அருட்தந்தை யர்களால் திருப்பலியும் தினம் ஒரு தலைப்புகளில் நிறைவே ற்றப்பட்டது. அன்னையின் பிறப்பு நாளான நேற்று மாலை சிறப்பு திருப்பலி கும்பகோணம் மதுரை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

    இத்திருப்பலியில் பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணைஅதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், மறை வட்ட முதன்மை குரு இன்னசென்ட், உதவி பங்கு தந்தையர் அமலவில்லியம், அன்புராஜ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு அருட்தந்தை யர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பலி நிறைவ டைந்ததும் பூண்டி மாதா பேராலயத்தின் முகப்பில் வண்ண வண்ண மின்விளக்கு களாலும், மல்லிகை மலர்க ளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சுரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி புறப்பட்டது. இந்த தேர் பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    தேர்பவனி தொடங்கியதும் வாணவேடி க்கை நடந்தது.

    தேர் பவனி நிறைவடைந்ததும் இன்று காலை திருவிழா நன்றி திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டு, பூண்டி மாதா பேராலயத்தின் அன்னையின் பிறப்பு பெருவிழா நிறைவு பெற்றது.

    அன்னையின் பிறப்பு பெருவிழா தேர் பவனியை ஒட்டி பூண்டி மாதா பேராலயம், பேரால யத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையி லான குழுவினர் செய்திருந்தனர்.

    • உலக நன்மைக்காக மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.
    • இன்று காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்க ண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.

    இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.

    விழாவின் முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி எனப்படும், தேர்த்திருவிழா கொட்டும் மழையில் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, கூட்டுபிராத்தனை உள்ளிட்ட நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து தஞ்சை மறைமாவட்ட ஆயார் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், வேளாங்க்ண்ணி உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ், நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி செய்யது முகம்மதுஹாஜி உசேன் சாகிப், நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான்சா கிப், வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வர் கோயில் தலைமை குருக்கள் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு உலக நன்மைக்காக மும்மத பிரார்த்ததை நடைபெற்றது

    பின்னர் தேர் புனிதம் செய்யப்பட்டு தேர் கடற்கரைசாலை, ஆரியநாட்டுதெரு உத்திரியமாதாதெரு, கடைவீதி வழியாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் அதிதூதர், செபஸ்தியார் ,சூசையப்பர் , உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகிய ஏழு தேர்களில் தனியாக காட்சியளித்தார்.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழா இன்று காலை 6 மணிக்கு விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • கீழை நாடுகளின் ‘லூர்து நகர்’ என்ற பெருமையுடன் வேளாங்கண்ணி அழைக்கப்படுகிறது.
    • செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மாதாவின் பிறந்தநாள்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் வேளாங்கண்ணி பேராலயம் திகழ்கிறது.

    கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்ற பெருமையுடன் வேளாங்கண்ணி அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம் வங்கக்கடலோரம் அமைந்து எழில்மயமாக காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.

    மாதா பிறப்பு திருவிழா

    பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த பேராலயத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து மாதாவை வேண்டிக்கொள்கிறார்கள். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றம் நடைபெறும். அதைத்தொடர்ந்து செப்டம்பர் 8-ந்தேதி வரை 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

    கொடியேற்றம்

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்பட பல்வேறு மொழிகளில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன.

    வேளாங்கண்ணியில் உள்ள கீழ்கோவில், மேல்கோவில் ஆகிய இடங்களில் நவநாள்ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசி உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. விழா நாட்களில் தினமும் இரவு 8 மணிக்கு சிறிய தேர்பவனியும் நடந்தது. திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பெரிய தேர் பவனி

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று இரவு கொட்டும் மழையிலும் கோலாகலமாக நடந்தது. தேர்பவனி தொடங்குவதற்கு முன்னதாக தஞ்சை மறை மாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் ஆகியோர் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து முன்னாள் ஆயர் மற்றும் பரிபாலகர் ஆகியோர் பெரிய தேரை புனிதம் செய்து பவனியை தொடங்கி வைத்தனர். ஆரோக்கியமாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் இரவு 8 மணி அளவில் பேராலய முகப்பில் இருந்து பவனி வர தொடங்கியது. பெரிய தேருக்கு முன்னால் மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சூசையப்பர், லூர்துமாதா, உத்திரியமாதா ஆகிய 6 தேர்கள் அணிவகுத்து வந்தன.

    மரியே வாழ்க கோஷம்

    கடற்கரைசாலை, ஆரியநாட்டு தெரு வழியாக பவனி வந்த தேர்களின் பவனி மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது. தேர் பவனியின்போது திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாதா தேர் மீது பூக்களை வீசி 'மரியே வாழ்க' என கோஷம் எழுப்பி மாதாவை வேண்டி கொண்டனர்.

    முன்னதாக பேராலய கலையரங்கில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குத்தந்தையர்தள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ், ஆரோக்கியவின்டோ.

    மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி கார்த்திகா, போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, மற்றும் சர்வமத பிரதிநிதிகள் ரஜதநீலகண்டர் குருக்கள், நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் கலிபா சாகிபு, நாகூர் தர்கா தலைமை மானேஜிங் டிரஸ்டி சையதுமுகமது ஹாஜி ஹூசைன் சாகிப், சமூக ஆர்வலர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    3 ஆயிரம் போலீசார் குவிப்பு

    விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், பேராலயம் மற்றும் பேரூராட்சி சார்பில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சுகாதாரத்துறையின் மூலம் வேளாங்கண்ணியில் 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    இன்று திருவிழா நிறைவு

    இன்று (வெள்ளிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காலை விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    மாலை திருக்கொடி இறக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுவதுடன் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.

    • 29-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • அன்னையின் பிறப்பு பெருவிழாவாக இன்று நடைபெறும்.

    சென்னை பெசன்ட்நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலையத்தின் பொன் விழா மற்றும் ஆண்டு பெருவிழா, கடந்த மாதம் 29-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    ஒவ்வொரு நாளும் உழைப்பாளர் தின விழா, நலம் பெறும் விழா, இளையோர் விழா, பக்தசபை விழா, நற்கருணை பெருவிழா, இறையழைத்தல் தினம், ஆசிரியர்கள் தினம், குடும்ப விழா என்று மாலை 5.30 மணிக்கு சிறப்பு கூட்டுத் திருப்பலி மற்றும் ஆராதனையும், நவநாள் ஜெபமும் நடத்தப்பட்டது. இதில் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.

    தேர்பவனி

    இதன் தொடர்ச்சியாக ஆடம்பர தேர் பவனி நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலை முதல் பிற்பகல் வரை திருப்பலிகள் நடந்தன. அதன் பின்னர், மாலை 5.30 மணிக்கு மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆடம்பர திருப்பலியை நடத்தி அதன் பின்னர் தேர்பவனியையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பக்தர்கள், பொது மக்கள் திரளாக பங்கேற்றனர். தேர்பவனி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு, பெசன்ட்நகர் கடற்கரை சாலை, 4-வது பிரதான சாலை மற்றும் 2 மற்றும் 7-வது அவென்யூ வழியாக சென்று மீண்டும் ஆலயத்துக்கு வந்தடைந்தது.

    கொடி இறக்க நிகழ்வு

    இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அன்னையின் பிறப்பு பெருவிழாவாக, நடைபெற உள்ளது. இதையொட்டி, மாலை 5.30 மணிக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் அன்னைக்கு முடிசூட்டு விழாவும், அதோடு கொடி இறக்க நிகழ்வும் நடத்தப்பட இருக்கிறது.

    • தினமும் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும், அருளுரையும் கலை நிகழ்சிகளும் நடைபெற்று வந்தது
    • இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரூம், சிவகாசி வாண வேடிக்கையும் நடைபெற்றது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயம் தென் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கத்தோலிக்க தேவால யங்களில் ஒன்று.

    இந்த தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா ஆண்டு தோறும் ஆகஸ்ட் 6 -ந்தேதி திருகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 15 -ந்தேதி வரை மிகவும் சிறப்பாக நடை பெறும். 10 ம் நாள் நடைபெறும் அன்னை யின் தேர்பவனி யில் லட்சக்க ணக்கான மக்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசிபெற்று செல்வது வழக்கம். இந்தா ண்டுக்கான பெருவிழா ஆகஸ்ட் 6-ந் தேதி பாண்டி ச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்ட மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தினமும் காலை, மாலை ஜெபமாலை, புகழ்மாலை மற்றும் திருப்பலியும், அருளுரையும் மற்றும் கலை நிகழ்சிகளும் நடைபெற்று வந்தது.

    10-ம் திருவிழாவான நேற்று (15 ம் தேதி) காலை 5 மணி, 6 மணிகளில் தமிழில் திருப்பலியும், காலை 7 மணிக்கு மலையாள திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு நடைபெற்ற அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் இந்திய சுதந்திர தினவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றி ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார்.

    பின்னர் அன்னையின் தேர்பவனி நடைபெற்றது. அன்னையின் பெருவிழா திருப்பலி மற்றும் ஆரோபண அன்னையின் தேர்பவனி யில் குமரி மாவட்டம் மற்றும் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்று சென்றனர். தேர்பவனியில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கப்பியறை பேரூராட்சி தலைவர் அனுஷா கிளாடிஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரூம், சிவகாசி வாண வேடிக்கையும் நடைபெற்றது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெஸ்டின் பிரபு தலைமையில் இணை பங்கு தந்தை மகிமைநாதன் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பங்கு பேரவை துணை தலைவர் பெர்னாண்டஸ், செயலாளர் மைக்கலோஸ் ஜோண் ஆர்க் ஜோஸ், பொருளாளர் செல்லம், துணை செயலாளர் கிறிஸ்துதாஸ் உறுப்பினர்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.

    • ஆடம்பர தேர்பவனியை ஆயர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
    • இன்று மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும், பல்வேறு தலைப்புகளில் அருட்தந்தையர்களால் மறையுரையும் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது.முன்னதாக ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

    திருப்பலியில் ஆயர் மறையுரை ஆற்றினார்.தொடர்ந்து, புனித அலங்கார அன்னை ஆடம்பர தேர்பவனியை ஆயர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.

    தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேராலயத்தை வந்தடைந்தது.

    இன்று காலை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    விழா ஏற்பாடுகளை அலங்கார அன்னை பேராலய பங்குத்தந்தை பிலோமின்தாஸ், உதவி பங்குத்தந்தை எட்மண்ட் லூயிஸ் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பிரண்ட்ஸ் ஆப் ஜீசஸ் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    • ஆண்டு பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மாதா மற்றும் அந்தோனியார் சொரூபம் தேரில் ஏற்றப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி பேரா லயத்தின் உபகோவிலான பழைமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான் அந்தோ னியாரின் பெரியதிருத்தேர் பவனி நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு ஆலயத்தில், வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்புத்திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சப்ப ரத்தில், மாதா மற்றும் அந்தோனியாரின் சொரூபம் தேரில் ஏற்றப்பட்டு,புனிதம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்த னர்.

    இதனை தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • பல சமய தலைவர்கள் வடம்பிடித்து தொடங்கி வைத்த அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி
    • விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை. பங்கு இறை மக்கள், பங்குப்பேரவையினர், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி :

    தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 5-ந்தேதி வரை நடைபெற்றது. 9-ம் நாளான நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பல சமய தலைவர்கள் வடம்பிடித்து தொடங்கி வைத்த அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.

    10-ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடை பெற்றது. கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணி ஜாண் ரூபஸ் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ வாழ்வு பணி குழு செயலர் அருட்பணி எட் வின் வின்சென்ட் மறையுரை யாற்றினார். பிற்பகல் 3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெரி வின் சென்ட் மற்றும் பங்கு இறை மக்கள், பங்குப்பேரவையினர், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.

    • தேர்பவனி விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • உப்பு, மிளகு ஆகியவற்றை தேரின் மீது தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பெரும்பாண்டியில் உள்ள புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் 103-வது ஆண்டு தேர்பவனி விழா கடந்த 8-ந்தேதி மறைமாவட்ட முதன்மை குரு மரியதாஸ் தலைமையில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, தினமும் அருட்தந்தையர்களால் ஜெபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

    முன்னதாக அருள் தந்தை ஆரோக்கியாதாஸ் காலை திருப்பலி, மறையுரை அருள் செபஸ்தியார் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி, மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினர்.

    அதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த தேரில் புனித பெரிய நாயகி அன்னை எழுந்தருளி தேர்பவனி நடைபெற்றது.

    அப்போது, ஒவ்வொ ருவரும் உப்பு, மிளகு ஆகியவற்றை தேரின் மீது தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாமைகள், குடந்தை அரசன், ஸ்டீபன், சகாயராஜ், ஜான் பீட்டர் ராஜ் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பா ளர்கள் செய்திருந்தனர்.

    ×