search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chariot Bhavani"

    • தேர் பவனி விழா நடந்தது.
    • நேற்று முதல் இறை விருந்து திருப்பலி, மாலையில் திருப்பலியும், நற்கருனை பணி, ஆசியும் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் உள்ள ஜெபமாலை அன்னை சர்ச் பெருவிழா செப்.29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் நவ நாள் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் மறை மாவட்ட பாதிரியார் திரவியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    தேர் பவனி விழா நேற்று நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடந்தது. தேர் பவனியில் பங்கு அருள் பணிப் பேரவையினர், தொழில் முனைவோர், வணிகர்கள், ஜெபமாலை அன்னை பக்தர்கள், பங்கு இறைமக்கள் பங்கேற்றனர். நேற்று முதல் இறை விருந்து திருப்பலி, மாலையில் திருப்பலியும், நற்கருனை பணி, ஆசியும் நடந்தது. ராமநாதபுரம் பாதிரி யார்கள் சிங்கராயர், ரீகன் தேவசகாயம் மற்றும் கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.

    • உலக நன்மைக்காக மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.
    • இன்று காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்க ண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.

    இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.

    விழாவின் முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி எனப்படும், தேர்த்திருவிழா கொட்டும் மழையில் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, கூட்டுபிராத்தனை உள்ளிட்ட நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து தஞ்சை மறைமாவட்ட ஆயார் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், வேளாங்க்ண்ணி உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ், நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி செய்யது முகம்மதுஹாஜி உசேன் சாகிப், நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான்சா கிப், வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வர் கோயில் தலைமை குருக்கள் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு உலக நன்மைக்காக மும்மத பிரார்த்ததை நடைபெற்றது

    பின்னர் தேர் புனிதம் செய்யப்பட்டு தேர் கடற்கரைசாலை, ஆரியநாட்டுதெரு உத்திரியமாதாதெரு, கடைவீதி வழியாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் அதிதூதர், செபஸ்தியார் ,சூசையப்பர் , உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகிய ஏழு தேர்களில் தனியாக காட்சியளித்தார்.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழா இன்று காலை 6 மணிக்கு விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • கீழ மைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது
    • இவ்விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு புனித வனத்து சின்னப்பருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே பிரசித்தி பெற்ற புனித வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி அருட்தந்தை இன்னோசென்ட் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினசரி திருப்பலி, நவநாள் திருப்பலி, தவ நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழா தொடங்கிய நாள் முதல் விருந்து உபசரிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதற்காக காட்டுக்குள் உள்ள முந்திரி மரங்களுக்கு கீழே கறி விருந்து சமைத்து உறவினர்களை அழைத்து விருந்து உபசரிப்பது நடைபெற்றது.

    இதில் விருந்தினர்கள் மட்டுமின்றி ஆலயத்திற்கு வரும் யார் வேண்டுமானாலும் அந்த விருந்தில் கலந்து கொண்டு உணவு உண்ணலாம். காட்டு திருவிழா என்று அழைக்கப்படும் வனத்து சின்னப்பர் ஆலய திருவிழாவில் பாரம்பரிய மனம் மாறாமல் பல ஆண்டுகளாக இந்த விருந்தோம்பல் நடைபெற்று வருவது இந்த விழாவின் சிறப்பு ஆகும்.விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலை திருப்பலி மற்றும் பெருவிழா திருப்பலியும், இரவு தேவ நற்கருணை ஆசீர்வாதமும் நடந்தது.

    இரவு 12 மணியளவில் ஆடம்பர தேர்பவனியை குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி, அருட்தந்தைகள் ஜான் கென்னடி, சதீஷ் ஏசுதாஸ் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட சப்பரத்தில் புனித வனத்து சின்னப்பர், ஆரோக்கிய அன்னை மற்றும் சம்மனசு ஆகியோர் எழுந்தருளினர்.இவ்விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு புனித வனத்து சின்னப்பருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

    பின்னர் வாணவேடிக்கை மற்றும் பேண்டு வாத்தியம் முழங்க திருத்தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தா.பழூர் செல்லும் சாலை வழியாக கீழ மைக்கேல் பட்டி புனித மைக்கேல் அதிதூதர் ஆலய வாயிலை சென்றடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கீழமைக்கேல்பட்டி பங்கு தந்தை அடைக்கலசாமி மற்றும் ஊர் நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.

    • ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம், திருக்காவலூர் எனும் ஏலாக்குறிச்சியில் புகழ் பெற்ற புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. 1716 ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்டு, தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா தளங்களில் ஒன்றான இந்த பழமை வாய்ந்த ஆலயத்தில் 53 அடி உயரமுள்ள பித்தளையிலான மாதா சொரூபம், ஜெபமாலை பூங்கா அமைந்து உள்ளது தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தின் 292-ம் ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 22 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக மாலை 7 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் தேர்திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பங்குதந்தை அதிபர் தங்கசாமி மின்விளக்குகளுடன் அலங்கரிக்கபட்ட அலங்கார தேரை மந்திரித்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். வாணவேடிக்கை , வாத்தியங்கள் முழங்க தேர்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

    தேர்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் வேண்டுதலாக ஆடு, கோழி, விளை நிலங்களில் விளைந்த விளைபொருட்களை காணிக்கையாக செலுத்தினர். திருவிழா குறித்து பங்குத்தந்தை கூறுகையில், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    மேலும் பக்தர்கள் தங்களின் உடல் நோயை தீர்க்க, மந்திரிக்கப்பட்ட மாதா எண்ணையையும், மாதா குளத்து மண்ணையும் பெற்று செல்கின்றனர், இன்று இரவு 7 மணிக்கு உய்யகொண்டான் திருமலை பங்குதந்தை அம்புரோஸ் தலைமையில் தேர்திருப்பலியும் தேர்பவனியும் நடைபெறும். மே1-ந்தேதி காலை 6 மணிக்கு பங்குதந்தை தங்கசாமி மற்றும் உதவி பங்குதந்தை ஞான அருள்தாஸ் ஆகியோரால் கொடி இறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவடைய உள்ளது என்று கூறினார்.

    திருவிழாவை முன்னிட்டு டி.எஸ்.பி. சங்கர்கணேஷ் தலைமையில், திருமானூர் இன்ஸ்பெக்டர் அனிதா ஆரோக்கியமேரி மேற்பார்வையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருமானூர் எஸ் ஐ கட்டுப்பாட்டில் 30 சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்றது. திருமானூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமையில் மருத்துவக்குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

    • ஏலாக்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது
    • திருவிழாவின் தொடர்ச்சியாக திருப்பலியும், நடைபெற்று வந்தது.

    திருமானூர்:

    அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா தலங்களிலில் ஒன்றான 1716-ம் ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சொரூபம் அமையபெற்றுள்ள திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தின் 292-வது ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து புனித அடைக்கல அன்னை திருஉருவ கொடி ஏலாக்குறிச்சி ஊரைசுற்றி ஊர்வளமாக வந்து கொடிமரத்தி ஏற்றப்பட்டது.திருவிழாவின் தொடர்ச்சியாக திருப்பலியும், நடைபெற்று வந்தது. நிகழ்ச்சியின் முக்கிய விழாவான தேர்பவனி இன்று இரவு நடைபெறுகிறது.கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி மின்விளக்குகளுடன் அலங்கரிக்கபட உள்ள அலங்கார தேரை மந்திரித்து தேர்பவனியை தொடங்கவைக்க உள்ளார்.

    பங்குதந்தை அதிபர் தங்கசாமி திருவிழாவை பற்றி கூறுகையில்.ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திற்கு ஆந்திரா. கர்நாடகா. கேரளா. பாண்டிச்சேரி மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். மேலும் மாற்று மதத்தினர் கோவிலுக்கு வந்து தங்களின் உடல் நோயை தீர்க்க மாதா எண்ணெயும் மாதா குளத்து மண்ணையும் பெற்று செல்வார்கள். திருவிழாவிற்கு தேவையான அனைத்து சுகாதார வசதிகளும், மின்விளக்கு வசதிகளும் செய்து வருகிறோம் என்று கூறினார்.


    • விழாவில் பாரம்பரிய ஆடை அணிந்து பங்கேற்ற படுகர் இன மக்கள்
    • தேரோட்டம் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றாக ஊட்டி மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.

    ஆண்டுதோறும் ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி கலச பூஜை மற்றும் பூச்சொரிதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. கோவில் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து வருகிற 21-ந் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெறும்

    நேற்று நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் சார்பில் விழா நடந்தது. இதனை முன்னிட்டு ஊட்டி மாரி யம்மன், ஹெத்தையம்மன் அலங்காரத்தில், காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்தார்.

    தேர்பவனி மாரியம்மன் கோவிலில் தொடங்கி கமர்சியல் சாலை, காபி அவுஸ், லோயர் பஜார் மற்றும் மெயின் பஜார் வழியாக தேர்பவனி வந்தது. இதை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்தும், நடனமாடியும் அம்மனை வீதி உலா அழைத்து வந்தனர்.

    இதில் அதிமுக மாவட்ட செயலாளரும் மத்தியகூட்டுறவு வங்கிதலைவருமான கப்பச்சிவினோத், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்ட னர்.

    மேலும், அன்னதான நிகழ்ச்சி, இசை கச்சேரி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

    இதேபோல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முகூர்த்தகால் நடுதல், 17-ந் தேதி தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது

    • வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கடந்த 8-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நள்ளிரவு 12 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி தொடங்கியது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கடந்த 8-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் புனித கொடியேற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அருட்தந்தை ஒய்.தேவ ராஜன் அடிகளார் தலை மையில் மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது.

    குருவானவர் பீட்டர் பாஸ்டியான், ஓ.எல்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அசன உணவு வழங்கப்பட்டது.

    திருவிழா தொ டர்ந்து 10 நாட்கள் கொண் டாடப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெற்றது. 8-ம் திருவிழா அதிகாலை கோலப்போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் பின்னர் விளை யாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.

    16-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்பட்டது. அன்று மாலை அருட்தந்தை ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. கிழவனேரி பங்கு தந்தை ப்ராக்ரஸ் மறையுரை வழங்கினார். சிறப்பு ஆராதனையில் பணகுடி பங்குதந்தை வளன், தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்கு தந்தை சிபுஜோசப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி தொடங்கியது. முன்னதாக தேர்களை பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி ஜெபம் செய்து அர்ச்சித்தார். தேர்ப்பவனி கோவிலைச் சுற்றியுள்ள ரதவீதிகளில் வலம் வந்து அதிகாலை 5 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. தேர்ப்பவனியின் போது பக்தர்கள் உப்பு, மிளகு, பூமாலை காணிக்கை செலுத்தி வழிபட்டனர். நேற்று 10-ம் திருவிழா கொண்டாடப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் அடிகளார் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் பகல் 11 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்கு தந்தை சிபுஜோசப் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    • வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.
    • தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து திருவிழாவை முன்னிட்டு வருடம்தோறும் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.

    திருச்சி,

    வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 7-ந்தேதி தேர் பவனி நிகழ்ச்சி நடக்கிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் பல நாடுகளில் இருந்தும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வது வழக்கமானது.

    தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து திருவிழாவை முன்னிட்டு வருடம்தோறும் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகிறார்கள். திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து அப்பகுதியில் உள்ள பக்தர்கள் ஆண்டுதோறும் பாதையாத்திரை சென்று வருகிறார்கள்.

    இதனை முன்னிட்டு 31-வது ஆண்டாக திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பாதயாத்திரை செல்லும் குழுவினருக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் நடத்தி வைத்தார். பின்னர் பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனியில் இருந்த வேளாங்கண்ணி மாதா சிலையை பங்கு தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து மந்திரித்தார்.

    இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியோடு வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றார்கள். பாதயாத்திரை மற்றும் தேர் பவனிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களான பி.ஜான் பீட்டர், கே.ரெத்தினம், பி.பிரபு, ஆர்.எஸ்.சுரேஸ், ஆட்டோஅருண், பி.ஆனந்த ராஜ், கீர்த்தி வினோத் ஆகியோர் செய்து இருந்தனர்.


    • புனித அதிசய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது
    • அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள புனித அதிசியமாதா ஆலய தேர்த்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுக்கோட்டை மறைவட்ட அதிபர் சவரிநாயகம் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

    18, 19, 20 ஆகிய தேதிகளில் கோட்டைக்காடு எம்.எம்.ஐ. பங்குத்தந்தை செங்கோல் மேலப்பட்டி ஐயங்காடு மற்றும் வம்பன் காலனி மற்றும் ஆவுடையார்கோயில் உதவி பங்குத்தந்தை பிராங்கோ எடின், குளவாய்ப்பட்டி வாழைக்கொள்ளை மற்றும் வண்ணாச்சிக்கொள்ளை, மற்றும் வேளாங்கண்ணி பங்குத்தந்தை அற்புதராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இறை மக்களுக்காக திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர்.

    இன்று 21-ந்தேதி சிறுவர், சிறுமிகளுக்கான திவ்ய நற்கூருணை (புது நன்மை) விழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் நவ நாட்களில் பங்கு மக்கள் குடும்பத்தோடு அனைத்து திருப்பலி நிகழ்ச்சிகளிலும் திரளாக கலந்துகொண்டனர்.

    தேர் பவனி நிகழ்ச்சியில் தேவமாக திருஉருவம் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஆர்கே அடிகளார் தலைமையில் சித்தேரிமுத்து முன்னிலையில் ஆலங்குடி நகர மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து உள்ள கிறிஸ்தவ மக்கள் தேவாலய தேவமாதா புகழ் பாடிக்கொண்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற தேர் பவனி ஆலங்குடி முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.

    விழாவில் சுற்றுச்சூழல் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் திருவரங்குளம் ஒன் றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார், ஆலங்குடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    பங்கு பணியாளர்கள், அருட்சகோதரிகள் பக்தசேவைக் குழுக்கள் அன்னதான குழு மற்றும் இளையோர் இயக்கம் ஆகியோர்களால் சிறப்பாக திருவிழா நடைபெற்றது. ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலய தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • அந்தோணியாரை கட்டுமரக் கப்பலில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்,

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேர் பவனி ஆண்டு தோறும் ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலய தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஆங்கில வழிமுறை திருப்பலி நடைப்பெற்றது. பின்னர் மலையாள வழிமுறை திருப்பலியும், அதனை தொடர்ந்து தமிழ் வழிமுறையில் திருப்பலியும் நடைப்பெற்றது.

    பின்னர் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் அன்பில் விருந்தில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அந்தோணியாரை கட்டுமரக் கப்பலில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்,

    குன்னூர் மவுண்ட் ரோடு வழியாக மார்கெட், பஸ் நிலையம், வி.பி. தெரு வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பாடல்கள் பாடியும், உப்புக்கல்லை இறைத்தும் பொது மக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர், இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்தோணியர் ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

    ×