search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
    X

    குன்னூரில் புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி

    • நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலய தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • அந்தோணியாரை கட்டுமரக் கப்பலில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்,

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேர் பவனி ஆண்டு தோறும் ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலய தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஆங்கில வழிமுறை திருப்பலி நடைப்பெற்றது. பின்னர் மலையாள வழிமுறை திருப்பலியும், அதனை தொடர்ந்து தமிழ் வழிமுறையில் திருப்பலியும் நடைப்பெற்றது.

    பின்னர் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் அன்பில் விருந்தில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அந்தோணியாரை கட்டுமரக் கப்பலில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்,

    குன்னூர் மவுண்ட் ரோடு வழியாக மார்கெட், பஸ் நிலையம், வி.பி. தெரு வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பாடல்கள் பாடியும், உப்புக்கல்லை இறைத்தும் பொது மக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர், இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்தோணியர் ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×