search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "St. Anthony's Church"

    • வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கடந்த 8-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நள்ளிரவு 12 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி தொடங்கியது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கடந்த 8-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் புனித கொடியேற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அருட்தந்தை ஒய்.தேவ ராஜன் அடிகளார் தலை மையில் மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது.

    குருவானவர் பீட்டர் பாஸ்டியான், ஓ.எல்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அசன உணவு வழங்கப்பட்டது.

    திருவிழா தொ டர்ந்து 10 நாட்கள் கொண் டாடப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெற்றது. 8-ம் திருவிழா அதிகாலை கோலப்போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் பின்னர் விளை யாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.

    16-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்பட்டது. அன்று மாலை அருட்தந்தை ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. கிழவனேரி பங்கு தந்தை ப்ராக்ரஸ் மறையுரை வழங்கினார். சிறப்பு ஆராதனையில் பணகுடி பங்குதந்தை வளன், தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்கு தந்தை சிபுஜோசப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி தொடங்கியது. முன்னதாக தேர்களை பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி ஜெபம் செய்து அர்ச்சித்தார். தேர்ப்பவனி கோவிலைச் சுற்றியுள்ள ரதவீதிகளில் வலம் வந்து அதிகாலை 5 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. தேர்ப்பவனியின் போது பக்தர்கள் உப்பு, மிளகு, பூமாலை காணிக்கை செலுத்தி வழிபட்டனர். நேற்று 10-ம் திருவிழா கொண்டாடப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் அடிகளார் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் பகல் 11 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்கு தந்தை சிபுஜோசப் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    • தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    வள்ளியூர்:

    தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித கொடியை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஞா.மி.ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் ஊர் பெரியவர்கள் எடுத்து வந்தனர். அந்த புனித கொடியை அருட்தந்தை ஜெபநாதன் அடிகளார் தலைமையில் அருட்தந்தை பீற்றர் பாஸ்டியான் ஜெபம் செய்து அர்ச்சித்தார். பின்னர் தர்மகர்த்தா கொடியேற்றினார்.

    அதனைத்தொடர்ந்து ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. வள்ளியூர் பங்கு தந்தை ஜாண்சன் அடிகளார் மறையுரை வழங்கினார். விழாவில் ஓ.எல்.எஸ்.மெட்ரி பள்ளி தாளாளர் அருட்தந்தை மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொ டர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. 14-ந் தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 8.30 மணிக்கு உணவுத்திருவிழா நடைபெறுகிறது. 15-ந் தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோலப்போட்டி நடைபெறுகிறது. பின்னர் திருப்பலியும் காலை 9 மணிக்கு புனித அந்தோணியார் இளைஞர் சார்பில் விளையாட்டுப் போட்டிகளும், இரவு பாடல், நடனம் மற்றும் மாறுவேடப்போட்டிகளும் நடைபெறுகிறது.

    16-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை சிறப்பு ஆராதனையும் அதனைத் தொடர்ந்து புனித அந்தோணியாரின் தேர்ப் பவனியும் நடைபெறுகிறது. 10-ம் திருவிழா அதிகாலை சிறப்பு திருவிழா திருப்பலியும், காலை 9 மணிக்கு தனித்திறன் போட்டிகளும் நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு புனித அந்தோணியார் தேர்ப் பவனி நடைபெறுகிறது. இரவு அரட்டை அரங்கம் கலைநிகழ்ச்சி நடை பெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்கு தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை சிபு ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அந்தோனியார் திருத்தல கொடியேற்றத்திற்க்கு ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவிற்கு இருதயகுளம் பங்குதந்தை பாக்கிய செல்வன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து 12 நாட்கள் திருப்பலி நிகழ்ச்சி புனித அந்தோனியார் ஆலய திருத்தலத்தில் நடைபெறுகிறது.

    வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் பாளை மறைமாவட்ட முதன்மைகுரு குழந்தைராஜ் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது.

    14-ந் தேதி பாளை மறைமாவட்ட பொருளாளர் அந்தோனி சாமி தலைமையில் திருப்பலி திருவிழா நடைபெறுகிறது.

    அந்தோனியார் திருத்தல கொடியேற்றத்திற்க்கு ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    ×