search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahul Gandhi Yatra"

    • குஜராத் மாநிலத்தில் நாளை முதல் மார்ச் 10-ந்தேதி வரை நடைபயணம்.
    • 14 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் 467 கி.மீ. தூரம் நடை பயணம்.

    ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலம் இம்பால் முதல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அவரது நடைபயணம் பா.ஜனதா ஆளும் குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட்டம் ஜலோத் என்ற இடத்தில் நாளை நுழைகிறது. நாளை முதல் 10-ந்தேதி வரை 467 கி.மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்த நடை பயணத்தில் கலந்து கொள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஆம் ஆத்மி கட்சி ஏற்றுக் கொண்டது.

    குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடை பயணத்தில் அதிக அளவிலான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், தலைவர்கள் பங்கேற்பார்கள் என ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில அமைப்பு தெரிவித்துள்ளது.

    ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை 6700 கி.மீட்டர் தூரம் கொண்ட நடை பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி தொடங்கினார். குஜராத் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 14 மக்களவை தொகுதிகளை உள்ளிடக்கிய பகுதியில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நுழைவதற்கு முன்னதாக குஜராத் மாநிலத்தில் தாஹோத், பஞ்ச்மஹால், சோட்டா உதேப்பூர், பரூச், தபி, சூரத், நவ்சாரி ஆகிய மாவட்டங்களில் நடை பயணம் செல்ல இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடைபயணத்தின்போது ஹிமாந்தா பிஸ்வா சர்மா மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்.
    • பதிலடியாக ஹிமாந்தா சர்மா சோனியா காந்தி குடும்பத்தை விமர்சனம் செய்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தற்போது ராகுல் காந்தி அசாமில் நடைபயணம் செய்து வருகிறார்.

    நடைபயணத்தின்போது அம்மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். நாட்டிலேயே ஊழல் நிறைந்த முதல்வர் என ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை ராகுல் காந்தி குறிப்பிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காந்திஸ்களை (Gandhis) விட யாரும் அதிக ஊழல் செய்ய முடியுமா? என ஹிமாந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில், "காந்தி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்திலிருந்து வரும் எந்த ஒரு விமர்சனத்தையும் நான் ஒரு வரமாகவே கருதுகிறேன். ஏனென்றால், மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதும் குடும்பத்தை எதிர்த்துப் போராடும் ஆற்றலை இது எனக்கு அளிக்கிறது.

    ஆனால், நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். காந்திஸ்களை (Gandhis) விட யாரும் அதிகமாக ஊழல் செய்ய முடியுமா?. போபர்ஸ் ஊழல், நேஷனல் ஹெரால்டு ஊழல், போபால் கியாஸ் துயரச் சம்பவம், ஆண்டர்சன் தப்பித்தல், 2ஜி ஊழல், சுரங்க ஊழல். இன்னும் ஏராளம் (பட்டியல் நீளம். சென்று கொண்டே இருக்கும்)" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா ஆட்சி செய்யும் மற்ற மாநில முதல்வர்களுக்கு ஊழலில் ஈடுபடுவது எப்படி? என ஹிமாந்தா பிஸ்வா சர்மாவால் பாடம் எடுக்க முடியும் என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அசாம் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி வரை 17 மாவட்டங்களில் 833 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் ராகுல் காந்தி.

    • யாத்திரையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும் கலந்து கொண்டனர்.
    • சோனியா முக கவசம் அணிந்து இருந்தார். இருவரும் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை சென்று கொண்டிருக்கிறார்.

    கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, அரியானா உள்பட 10 மாநிலங்களை கடந்து 108-வது நாளான இன்று காலையில் தலைநகர் டெல்லிக்குள் யாத்திரை நுழைந்தது.

    டெல்லி எல்லையான பதர்பூரில் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி தலைமையில் காங்கிரசார் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர். பாத யாத்திரை புறப்படும் போதே தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராகுலுடன் அணிவகுத்து பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.

    யாத்திரையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும் கலந்து கொண்டனர். சோனியா முக கவசம் அணிந்து இருந்தார். இருவரும் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.

    ராகுல் நடைபயணத்தில் சோனியா கலந்து கொள்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கர்நாடகாவில் யாத்திரை நடந்த போது கடந்த அக்டோபர் மாதம் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

    அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர்சிங் ஹுடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றும் படியும், பின்பற்ற இயலாவிட்டால் பாத யாத்திரையை ஒத்திவைக்கும்படியும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

    இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வழக்கமாக ராகுல் பாத யாத்திரையில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அவரை சுற்றிலும் கயிறுகளை பிடித்தபடி யாரும் அருகில் நெருங்க முடியாத படி போலீசார் அணிவகுத்து வருவார்கள்.

    ஆனால் இன்று பாது காப்பு முறையாக செய்யாததால் காங்கிரசார் அதிருப்தி அடைந்தனர். காங்கிரஸ் தொண்டர்களே அரண் போல் நின்று யாத்திரையில் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராகுல் சென்ற பாதையின் இரு புறமும் மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தார்கள்.

    இன்று இரவு செங்கோட்டை அருகே தங்குகிறார்கள். டெல்லியில் 9 நாட்கள் யாத்திரை நடக்கிறது. புத்தாண்டு ஓய்வுக்கு பிறகு ஜனவரி 3-ந்தேதி புறப்படுகிறது.

    ×