search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிமாந்தா பிஸ்வா சர்மா"

    • காங்கிரஸ் அதிகாரத்திற்கு வருவதற்கு சமூகத்தை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டது.
    • இந்த தேர்தல் அறிக்கை இந்தியாவில் நடைபெறும் தேர்தலுக்கானது போன்றது இல்லை.

    காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்க பொருத்தமானது என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் அதிகாரத்திற்கு வருவதற்காக சமூகத்தை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டது. இந்த திருப்திபடுத்தும் அரசியலைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். இந்த தேர்தல் அறிக்கை இந்தியாவில் நடைபெறும் தேர்தலுக்கானது போன்றது இல்லை. பாகிஸ்தானுக்கானது. சமூகத்தை பிளவுப்படுத்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் காங்கிரசின் மனநிலை" என்றார்.

    பிரதமர் மோடியும் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக, முஸ்லிம் லீக்கின் சிந்தனையை ஒத்திருப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கில் நிலையில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம்.
    • தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்துள்ளார்.

    மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.

    தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துள்ளார். இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் செல்கிறார்.

    இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் அசாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து 3,992 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த தகவலை அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வருகை குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    நாளை மாலை 4 மணிக்கு தேஸ்பூர் விமான நிலையம் வந்து இறங்குகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக காஸிரங்கா செல்கிறார். அங்கு தங்கும் பிரதமர் மோடி, 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு காஸிரங்கா தேசிய பூங்கா செல்கிறார். அங்கு இரண்டு மணி நேரம் இயற்கை சூழல் கொண்ட பூங்காவை சுற்றிப் பார்க்கிறார். காஸிரங்காவில் இருந்து அருணாச்சல பிரதேசம் செல்கிறார்.

    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 1.30 மணியளவில் அசாம் மாநிலம் ஜோர்ஹாத் திரும்புகிறார்.

    திக்போய் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த சுத்திகரிப்பு நிலையம் 768 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதேபோல் 510 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள கவுகாத்தி சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்க பணிக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பராயுனி முதல் கவுகாத்தி வரையிலான 3992 கோடி ரூபாய் மதிப்பிலான பைப்லைன் திட்டத்தை திறந்து வைக்கிறார்.

    பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைக்கிறார். சிவசாகர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ஜோர்ஹாட்டில் உள்ள மெலெங் மெத்தேலி போதரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    • ராகுல் காந்தி நடை பயணம் அசாமில் நுழைய பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தவர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா.
    • இவரின் ஆகாய வழி பயணத்திற்கான மட்டும் அசாம் மாநில அரசு 58 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.

    இந்திய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் எம்.பி.யான கவுரவ் கோகாய், அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் விமான போக்குவரத்து செலவு குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். ஆனால், மக்களவை சபாநாயகர் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்வாரா? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக கோகாய் கூறுகையில் "அசாம் மாநில முதல்வர் மற்ற முக்கிய நபர்களுடன் விமான பயணம் மேற்கொண்டதன் வகைக்காக அசாம் மாநில அரசு 58.23 கோடி ரூபாய செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதில் அரசு சாராத பயணமம் அடங்கும் எனச் சொல்லப்படுகிறது.

    செலவழிக்கப்பட்டது அனைத்தும் பொதுமக்கள் பணம். அது முக்கியமான வளர்ச்சி திட்டத்திற்கு அல்லது சமூக நலன் தொடர்பான திட்டத்திற்கு செலவழித்திருக்கலாம். அரசு சாரா பயணம் மேற்கொண்டது. நிதி மற்றும் பொறுப்பு தொடர்பாக முக்கிய கவலை அளிக்கிறது" என்றார்.

    அரசியல் நிகழ்ச்சிக்காகவும், அசாம் மாநிலத்திற்கு வெளியே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் வாடகை விமானத்தை பயன்படுத்தியதாக மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

    சமீபத்தில் அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தியின் நடை பயணம் செல்வதற்கு ஹிமாந்தா பிஸ்வா சர்மா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும், மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில்தான் கோகாய் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

    • அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணத்திற்கு அம்மாநில அரசு தடங்கல் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு.
    • மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று கடைசி நாளாக நடைபயணம் மேற்கொள்கிறார்.

    நேற்று முன்தினம் கவுகாத்தியில் நுழைவதற்கு அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தடைவிதித்திருந்தார். அதையும் மீறி ராகுல் காந்தி கவுகாத்தியில் நுழைய முயன்றார். இதனால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    மேலும், ஹிமாந்தா பிஸ்வா சர்மா உத்தரவின்பேரில் போலீசார் ராகுல் காந்தி மீது மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். நேற்றைய நடைபயணத்தின்போது, என் மீது இன்னும் அதிகமாக வழக்குகள் போட முடியும். அதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா பகிரங்கமாக மிரட்டும் விதமாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவிக்கையில் "நாங்கள் சிறப்பு விசாரணைக்குழு அமைப்போம். இந்த குழு ராகுல் காந்திக்கு எதிரான வழக்குகள குறித்து விசாரணை நடத்தும். மக்களவை தேர்தலுக்கு பின்னர் நாங்கள் அவரை கைது செய்வோம். தற்போது நடவடிக்கை எடுத்தால், இது அரசியல் நடவடிக்கை எனக் கூறுவார்கள். எங்களிடம் ஆதாரம் உள்ளது. கவுகாத்தில் மக்களை தூண்டும் வகையில் பெரிய சம்பவம் நடைபெற்றுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

    • 500 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (நேற்று) ராமரை பற்றி பேச நல்ல நாள்.
    • ராவணனை பற்றி ஏன் பேசுகிறீர்கள். இன்று (நேற்று) ராமரை பற்றி பேசலாமா? என்றார் அசாம் முதல்வர்.

    ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள அசாம் மாநிலத்தில் பல்வேறு தடங்கல் ஏற்படுத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாதான் காரணம் எனவும் விமர்சனம் செய்துள்ளது. தடங்கல் ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை அசாமில் உள்ள கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். நான் என்ன குற்றம் செய்தேன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

    ராகுல் காந்தி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற நிலையில், தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது ஹிமாந்தா பிஸ்வா சர்மா, "ராவணனை பற்றி ஏன் பேசுகிறீர்கள். இன்று (நேற்று) ராமரை பற்றி பேசலாமா?. 500 ஆண்டுகள் கழித்து ராமரை பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ராவணனை பற்றி பேச வேண்டாம்" என்றார்.

    நடைபயணம் தொடர்பாக காங்கிரஸ்க்கும், ஹிமாந்தா பிஸ்வா சர்மவுக்கும் இடையில் மோதல் இருந்து வரும் நிலையில், தற்போது ராகுல் காந்தியை ராவணன் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா மறைமுக தாக்கியுள்ளார்.

    • காங்கிரஸில் இருக்கும்போது முஸ்லீம்களின் வாக்குகளை பெற்றார்.
    • தற்போது அமித் ஷா கட்டளையின்படி அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்.

    அசாம் மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஹிமாந்தா பிஸ்வா சர்மா இருந்து வருகிறார். பா.ஜனதா கட்சியில் இணைவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

    தற்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரான பத்ருதீன் அஜ்மல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவை விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது முஸ்லீம்கள் வாக்குகளை பெற்ற ஹிமாந்தா பிஸ்வா சர்மா, தற்போது அவர்களுக்கு அநீதி இழைத்து வருகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து பத்ருதீன் அஜ்மல் கூறியதாவது:-

    டாக்டர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது முஸ்லீம்களின் வாக்குகளை பெற்றீர்கள். தற்போது அமித் ஷாவின் கட்டளைக்கு இணங்க முஸ்லீம்களுக்கு எதிராக அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    முஸ்லீம் சமூகம் சர்மாவுக்கு பெரும் வாக்கு வங்கியாக இருந்தது. தேர்தலுக்கு முன்பாக அவர் அதை இழக்கக் கூடாது. இருண்டு வருடம் காத்திருங்கள், ஹிமாந்தா மற்றும் யோகி ஆகிய நாத் ஆகிய இருவரும் பிரதமர் மந்திரிக்கான போட்டியில் இருப்பார்கள்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடைபயணத்தின்போது ஹிமாந்தா பிஸ்வா சர்மா மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்.
    • பதிலடியாக ஹிமாந்தா சர்மா சோனியா காந்தி குடும்பத்தை விமர்சனம் செய்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தற்போது ராகுல் காந்தி அசாமில் நடைபயணம் செய்து வருகிறார்.

    நடைபயணத்தின்போது அம்மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். நாட்டிலேயே ஊழல் நிறைந்த முதல்வர் என ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை ராகுல் காந்தி குறிப்பிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காந்திஸ்களை (Gandhis) விட யாரும் அதிக ஊழல் செய்ய முடியுமா? என ஹிமாந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில், "காந்தி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்திலிருந்து வரும் எந்த ஒரு விமர்சனத்தையும் நான் ஒரு வரமாகவே கருதுகிறேன். ஏனென்றால், மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதும் குடும்பத்தை எதிர்த்துப் போராடும் ஆற்றலை இது எனக்கு அளிக்கிறது.

    ஆனால், நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். காந்திஸ்களை (Gandhis) விட யாரும் அதிகமாக ஊழல் செய்ய முடியுமா?. போபர்ஸ் ஊழல், நேஷனல் ஹெரால்டு ஊழல், போபால் கியாஸ் துயரச் சம்பவம், ஆண்டர்சன் தப்பித்தல், 2ஜி ஊழல், சுரங்க ஊழல். இன்னும் ஏராளம் (பட்டியல் நீளம். சென்று கொண்டே இருக்கும்)" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா ஆட்சி செய்யும் மற்ற மாநில முதல்வர்களுக்கு ஊழலில் ஈடுபடுவது எப்படி? என ஹிமாந்தா பிஸ்வா சர்மாவால் பாடம் எடுக்க முடியும் என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அசாம் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி வரை 17 மாவட்டங்களில் 833 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் ராகுல் காந்தி.

    • அரசியல் கட்சி தலைவர்கள்தான் மோடியை விமர்சனம் செய்கிறார்கள்
    • வடகிழக்கு மாநிலங்களில் 2014-க்குப் பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது

    மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் இரண்டு பெண்கள் தொடர்பான வீடியோ வைரல் ஆனதால், மணிப்பூர் விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரும் வகையில் முக்கியத்துவம் பெற்றது.

    இந்த நிலையில் அரசியல்வாதிகள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால், மணிப்பூரில் உள்ளவர்கள் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மீது குறை கூறவில்லை என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மத்திய அரசால் இப்படி நடக்கிறது என்று யாரும் கூறவில்லை. முன்பெல்லாம் என்ன நடந்தாலும் பழி டெல்லிக்கு வந்திருக்கும். இப்போது இது எங்கள் மோதல். இதற்கும் டெல்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும்.

    இந்த மோதல் மே மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல பகுதியில் இருந்து பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் மோடியை விமர்சனம் செய்கிறாரக்ள். ஆனால், மணிப்பூரில் இருந்து யாரும் பிரதமர் மோடியை குறைகூறவில்லை.

    2014-ல் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மெதுவான வளர்ச்சி இருந்தது. இணைப்பு அடிப்படையில் தற்போது திடீரென பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.'' என்றார்.

    காங்கிரஸ் கட்சியில் 20 வருடங்களுக்கு மேல் இருந்த ஹிமாந்த பிஸ்வா 2015-ல் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தான், மேற்கு வங்காளத்தை காட்டிலும் குறைவாகத்தான் மணிப்பூரில் நடந்துள்ளது
    • ஒட்டுமொத்த மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இழிவு படுத்தக்கூடாது

    மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    இந்த வீடியோ சம்பவம் குறித்து முன்னதாகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ ஏற்கனவே உள்ளது. ஆனால் இந்த வீடியோ பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே இதில் ஒரு அரசியல் விஷயம் உள்ளடங்கியுள்ளது.

    வீடியோ தேதியை பொருட்படுத்தாமல் இந்த சம்பவம் கட்டாயம் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஆனால் ஒட்டு மொத்த மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இழிவு படுத்தக்கூடாது.

    மணிப்பூரில் நடந்தது வருத்தமான சம்பவம்தான். ஆனால் இது தினந்தோறும் மணிப்பூரில் நடப்பதுபோல் ஒரு எண்ணம் கொடுக்கப்படுகிறது.

    மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு எதிராக மணிப்பூரை எடுத்துக் கொண்டால், மணிப்பூரில் மிகவும் குறைவான சம்பவங்கள்தான் நடைபெற்று உள்ளது.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் வன்முறையாக மாறி 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அண்டை மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது
    • அசாம் முதல்வர் டுவிட்டர பக்கத்தில் இந்தியா வார்த்தையை நீக்கியுள்ளார்

    கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ள எதிர்க்கட்சிகள், கூட்டணிக்கு I.N.D.I.A. (இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி) பெயர் வைத்துள்ளனர்.

    எதிர்க்கட்சிகள் கூட்டணியை இந்தியா என்று அழைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் என்றாலே இந்தியா...!!! இந்தியா என்றாலே எதிர்க்கட்சிகள் கூட்டணி...!!! என சூழ்நிலை தோன்றுகிறது. இதுகுறித்து விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில், அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, டுவிட்டரின் முகப்பு பக்கத்தில் இருந்து INDIA என்ற வார்த்தை நீக்கிவிட்டார். அதற்குப் பதிலாக BHARAT என்ற வார்த்தை பயன்படுத்தியுள்ளார். பா.ஜனதாவினர் எப்போதுமே பாரத் என்ற வார்த்தையை உபயோகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அசாம் மாநில முதல்வர் என்பதை தற்போது பாரத்தின் அசாம் மாநில முதல்வர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், நமது நாகரிக மோதல் இந்தியாவையும், பாரத்தையும் மையமாக கொண்டது. பிரிட்டீஷ் இந்தியா என பெயர் வைத்தது. காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபடவேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போரிட்டார்கள். நாம் அதற்காக தொடர்ந்து போராடுவோம்'' என்றார்.

    பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு டிஜிட்டல் இந்தியா, மேன் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா என பெயரிட்டுள்ளார். அவருக்கு தங்களுடைய பரிந்துரைகளை தெரிவிக்குமாறு, ஹிமாந்தா பிஸ்மா சர்மாவுக்கு காங்கிரஸ் பதில் கூறியுள்ளது.

    ×