search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல் காந்தி நடை பயணம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக விலை மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
    • இன்று முதல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மத்திய அரசு கடந்த வாரம் மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டர் விலையில் ரூ. 100 குறைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து உத்தரவிட்டது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், வாக்கு வங்கியை குறிவைத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் தற்போது விலையை குறைத்துள்ளது. தேர்தலுக்குப் பின் மீண்டும் உயர்த்தமாட்டோம் என சொல்வார்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த நிலையில்தான் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் (நடைபயணம்) தாக்கம் காரணமாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைத்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பு பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும் "பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை குறைப்பு நல்ல விசயம். பாரத் ஜோடோ நியாய யாத்ரா சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என ராகுல் காந்தி தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்" என்றார்.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக விலை மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று முதல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • குஜராத் மாநிலத்தில் நாளை முதல் மார்ச் 10-ந்தேதி வரை நடைபயணம்.
    • 14 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் 467 கி.மீ. தூரம் நடை பயணம்.

    ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலம் இம்பால் முதல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அவரது நடைபயணம் பா.ஜனதா ஆளும் குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட்டம் ஜலோத் என்ற இடத்தில் நாளை நுழைகிறது. நாளை முதல் 10-ந்தேதி வரை 467 கி.மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்த நடை பயணத்தில் கலந்து கொள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஆம் ஆத்மி கட்சி ஏற்றுக் கொண்டது.

    குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடை பயணத்தில் அதிக அளவிலான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், தலைவர்கள் பங்கேற்பார்கள் என ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில அமைப்பு தெரிவித்துள்ளது.

    ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை 6700 கி.மீட்டர் தூரம் கொண்ட நடை பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி தொடங்கினார். குஜராத் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 14 மக்களவை தொகுதிகளை உள்ளிடக்கிய பகுதியில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நுழைவதற்கு முன்னதாக குஜராத் மாநிலத்தில் தாஹோத், பஞ்ச்மஹால், சோட்டா உதேப்பூர், பரூச், தபி, சூரத், நவ்சாரி ஆகிய மாவட்டங்களில் நடை பயணம் செல்ல இருக்கிறது.

    • பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி நடை பயணம் இன்றுடன் முடிவடைகிறது.
    • ராகுல் காந்தி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவும் கலந்து கொள்கிறார்.

    ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மெற்கொண்டு வருகிறார். தற்போது பீகார் மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த சில தினங்களாக அவர் நடை பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்றுடன் பீகார் மாநிலத்தில் அவருடைய நடை பயணம் முடிவடைகிறது. இன்று மாலை உத்தர பிரதேச மாநிலத்திற்கு அவரது நடைபயணம் சென்றடைகிறது.

    இன்று காலை பீகார் மாநிலம் சசாரமில் ராகுல் காந்தியை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் அவரை வரவேற்றார். பின்னர் ராகுல் காந்தியை ஜீப்பில் (Wrangler) அமர வைத்து தேஜஸ்வி யாதவ் ஜீப்பை ஓட்டினார்.

    ராகுல்காந்தி கைமுரில் இன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார்.

    நிதிஷ் குமார் இந்தியா கூட்டணி உடனான தொடர்பை முறித்துக் கொண்ட பிறகு தேஜஸ்வி யாதவ் ராகுல் காந்தியுடன் மேடையில் தோன்றும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். ரோஹ்தாஸ் என்ற இடத்தில் ராகுல் காந்தி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    • கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டார்.
    • மொத்தம் 145 நாட்கள், 4500 கி.மீ. கொண்டதாக நடை பயணம் அமைந்தது.

    இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி வருடாந்திர தணிக்கை அறிக்கையை சமர்பித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி முதல் 2023 ஜனவரி 30-ந்தேதி வரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டார்.

    இதற்காக 71.8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 50 லட்சம் ரூபாய் விதம் மொத்த நாளைக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 1.59 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

    கட்சிக்கு 452 கோடி ரூபாய் நிதி கிடைத்த நிலையில் 2022-2023-ம் ஆண்டில் 467 கோடி ரூபாய் செலவு ஆனதாக தெரிவித்துள்ளது. இதில் 192 கோடி ரூபாய் தேர்தல் செலவாகும்.

    ராகுல் காந்தியின் நடை பயணம் மொத்த 145 நாட்கள் (இடைவெளி நாட்களும் சேர்த்து) கொண்டதாக இருந்தது. மொத்தம் 4500 கி.மீட்டர் தூரம் உள்ளடக்கியதாகும்.

    2021-22-ல் செலவு 400 கோடியாக இருந்த நிலையில் 2022-2023-ல் 467 கோடியாக அதிகரித்துள்ளது. அதேவேளையில் கட்சி நிதி 2021-22-ல் 541 கோடியாக இருந்த நிலையில், 2022-23-ல் 452 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

    ×