search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puzhal Lake"

    தொடர் மழை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது.
    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் நீர் மட்டம் 21.20 அடியாகும். மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.

    இந்நிலையில், தொடர் மழை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறக்கப்பட்டது.

    ஏரியில் இருந்து உபரிநீர் கால்வாய் வழியாக திறக்கப்படும் நீரானது செங்குன்றம், சாமியார்மடம், வடகரை, கிரான்ட்லைன், வடபெரும்பாக்கம், கொசப்பூர், மஞ்சம்பாக்கம், மணலி, சடயங்குப்பம் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புழல் ஏரியில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் தண்ணீரை எடுத்து பயன்படுத்துவதற்காக ராட்சத மின்மோட்டார் பொருத்தப்பட்டு குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. #Puzhallake
    சென்னை:

    புழல் ஏரியில் தண்ணீர் குறைந்த நிலையில் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் ‘ஜோன்ஸ் டவர்’ பகுதியில் குட்டை போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சுமார் 2 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த தண்ணீர் முழுவதும் வினியோகம் செய்யப்பட்ட பின்னர், ஏரியில் ஆங்காங்கே கிடக்கும் தண்ணீரை சிறிய அளவில் வாய்க்கால் போன்று வெட்டி ஒரே இடத்துக்கு கொண்டு வந்து, மின்மோட்டார்கள் மூலம் குழாய்களில் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக மின்சாரத்தில் இயங்கும் ராட்சத மின்மோட்டார்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    இந்தப்பணி ஓரிரு நாட்களில் நிறைவடைய இருக்கிறது. அதற்கு பிறகு மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையின் குடிநீர் தேவையை கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், கல்குவாரி தண்ணீர் மற்றும் ஏரிகளில் இருந்து கிடைக்கும் சொற்ப அளவு தண்ணீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை வெகு நாட்கள் நீடிக்க வாய்ப்பு இல்லை. இதனால் மாற்று ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது. வீராணம், நெய்வேலி சுரங்கம், விவசாய பம்பு செட்டுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் ஏரியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை குழாய்கள் மூலம் எடுப்பது வழக்கம். ஆனால் நடப்பாண்டு கோடை தொடங்குவதற்கு முன்பாகவே ஏரியில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. ஏரிகளில் போதுமான தண்ணீர் இல்லாததால், ஏரியை தூர் வாருவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் எடுத்து முடித்தவுடன் தூர் வாரும் பணியை தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.  #Puzhallake
    செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரிகளில் 124 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #EdappadiPalaniswami
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டி பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.

    சென்னை-தண்டையார்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் அருகில் நேரு நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளை இணைக்க வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இருவழிப்பாலம்,

    பழனி, மாட்டு மந்தை அருகில் பாலாற்றின் குறுக்கே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம், செய்யூர் வட்டம், பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 9 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மறு கட்டுமானம் செய்யப்பட்ட ஒரு வழிப்பாலம் என மொத்தம் 240 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத்துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    அடையாறு ஆறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி ஆகிய ஏரிகளில் 124 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தூர்வாரும் பணிகள் என மொத்தம் 532 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத்துறையின் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

    சென்னை, சேத்துப்பட்டு பொழுதுபோக்கு மீன்பிடிப்பு மற்றும் பசுமை பூங்கா வளாகத்தில் 6 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 20 இருக்கைகள் கொண்ட குளிர்சாதன வசதிகளுடன் கூடிய மெய்நிகர் காட்சியக அரங்கம், தொடுதிரை கணினி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் காட்சியகத்துடன் கூடிய மெய்நிகர் காட்சியகம்,

    மாதவரம் வளாகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்ண மீன் வானவில் விற்பனை வளாகம் என மொத்தம் 21 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    உயர் கல்வித்துறை சார்பில் உசிலம்பட்டியில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், கருத்தரங்கக்கூடம், விடுதி, பணிமனை மற்றும் இதர கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மேலும் தேனி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டுக்கல், வேலூர், தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 67 கோடியே 25 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

    2018-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிங்காரவேலர் விருது, சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகளையும் 2017-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது மற்றும் 2018-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் தமிழ்ச்செம்மல் விருதுகள் என மொத்தம் 56 விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். #EdappadiPalaniswami

    சென்னை புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை கத்தை கத்தையாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #OldBankNotes #Demonetisation
    சென்னை:

    பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்புநீக்க நடவடிக்கையை அறிவித்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டன.

    பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு,  அதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டது. பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. மொத்தமாக கையிருப்பு வைத்திருந்தவர்கள், வருமானத்தை கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்தவர்களால் வங்கிகளில் நேரடியாக செலுத்தி பணத்தை மாற்ற முடியவில்லை. இதனால் பலர் ரூபாய் நோட்டுக்களை குப்பையில் வீசினர்.


    இந்நிலையில், சென்னையை அடுத்த புழல் ஏரி அருகே இன்று 25 மூட்டைகளில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் கிடந்தன. அந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தன. இது அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நோட்டுக்களை வெட்டி வீசியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மத்திய அரசு அறிவித்த காலக்கெடு முடிந்தபிறகு செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  #OldBankNotes #Demonetisation
    பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 350 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.

    இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி செப்டம்பர் 22ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 29-ந் தேதி வந்தடைந்தது.

    வடகிழக்கு பருவ மழை சீசன் தொடங்கியதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு கடந்த 28-ந் தேதி நிறுத்தப்பட்டது.

    இதன் காரணமாக 31-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று போனது. செப்டம்பர் 29-ந் தேதி முதல் கடந்த 31-ந் தேதி வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 1,604 டி.எம்.சி. தண்ணீர் வந்த சேர்ந்தது.

    பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு தொடர்ந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் இணைப்பு கால்வாயில் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று விட்டதால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 350 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீர் பேபி கால்வாய் மூலமாக அனுப்பப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 23 . 60 அடியாக பதிவானது. 656 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    புழல் ஏரியில் துப்பாக்கி முனையில் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர்கள் சேது என்கிற சேதுபதி (27). ராஜேஷ் என்கிற கபாலி ராஜேஷ் (24).

    சேதுபதி மீது 4 கொலை வழக்கு, 8 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 20 வழக்குகள் உள்ளன. கபாலி ராஜேஷ் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 12 வழக்குகள் உள்ளன.

    இந்த பகுதியில் ரவுடித் தனம் செய்த 2 பேரையும் செங்குன்றம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். 3 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் 2 பேரும் ரவுடி தனத்தில் ஈடுபட்டனர். இதை தட்டிக் கேட்ட ஆயுதப்படை போலீஸ் மற்றும் ஏட்டு பாலாஜி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதையடுத்து ரவுடிகள் 2 பேரையும் கைது செய்யும்படி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவிட்டார். இந்த நிலையில், பாடியநல்லூர் தி.மு.க. பிரமுகர் ஒருவரை ரவுடிகள் 2 பேரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, போலீஸ் துணை கமி‌ஷனர் கலைசெல்வன், உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் ஆகியோர் மேற்பார்வையில் புழல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் 2 ரவுடிகளையும் தேடி வந்தனர். நேற்று முன்தினம் செங்குன்றம் ஆலமரம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அபோது, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடிகள் சேதுபதி, கபாலி ராஜேஷ் ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினார்கள்.

    போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக 2 பேரும் புழல் ஏரிக்குள் ஓடினார்கள். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பட்டாக் கத்திகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ரவுடிகள் சேதுபதி, கபாலி ராஜேஷ் இருவரும் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக இணைப்பு கால்வாயில் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் நீர் திறப்பு 400 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 29-ந் தேதியிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கண்டலேறு அணையில் வினாடிக்கு 1200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 595 கனஅடி வீதம் வருகிறது.

    கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர் மட்டம் 12.25 அடியாக பதிவாகி வெறும் 13 மில்லியன் கனஅடி மட்டும் தான் இருப்பில் இருந்தது. தற்போது கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது.

    கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக கடந்த 6-ந் தேதி இணைப்பு கால்வாயில் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 300 கனஅடி வீதம் திறக்கப்பட்டது.

    இன்று காலை முதல் நீர் திறப்பு 400 கனஅடியாக உயர்த்தப்பட்டது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 24.08 அடியாக பதிவாகியது. 720 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
    சோழவரம் ஏரியில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்த தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. #Puzhallake
    சென்னை:

    சென்னை குடிநீர் தேவைக்கு பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    இந்த ஏரிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. தற்போது வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வருவதால் அங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது.

    சென்னை அருகில் உள்ள சோழவரம் ஏரியில் 1081 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். ஆனால் தற்போது வெறும் ஒரு மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    எனவே சோழவரம் ஏரியில் இருந்து கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு நேரடியாக தண்ணீர் அனுப்ப முடியவில்லை. ஆகவே 3 ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்தது. தண்ணீர் மிகவும் குறைந்ததால் சோழவரம் ஏரியில் இருக்கும் நீர் சேறும் சகதியுமாக உள்ளது. எனவே இங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    புழல் ஏரியில் தற்போது 783 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. பூண்டியில் 14 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 486 மில்லியன் கன அடியும் தண்ணீர் உள்ளது. சோழவரத்தில் 1 கன அடி இருக்கிறது.

    சென்னையில் உள்ள 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி. ஆனால் தற்போது ஆயிரத்து 284 மில்லியன் கன அடி தண்ணீர்தான் உள்ளது. #Puzhallake


    புழல் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஒரே மாதத்தில் 193 மில்லியன் கனஅடி குறைந்தது. #PuzhalLake
    செங்குன்றம்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமானது புழல் ஏரி. இதனுடைய மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. தற்போது 959 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு சோழவரம் ஏரியில் இருந்து டீசல் மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு கால்வாய் வழியாக வினாடிக்கு 12 கனஅடி தண்ணீர் வருகிறது.

    புழல் ஏரியின் நீர் இருப்பு தற்போது மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கத்தாலும் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் இதே தேதியில் புழல் ஏரியின் நீர் இருப்பு 1,152 கனஅடியாக இருந்தது. ஒரே மாதத்தில் 193 மில்லியன் கனஅடி குறைந்துவிட்டது,

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடி. தற்போது சோழவரம் ஏரி வறண்டு 32 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த தண்ணீரும் தற்போது ராட்சத டீசல் மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்பட்டு புழல் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம் வினாடிக்கு 12 கனஅடி தண்ணீர் புழல் ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் புழல் ஏரியின் நீர், ஏரிக்கரையோரம் செங்குன்றம் பேரூராட்சியின் குப்பைகளை கொட்டி எரிப்பதாலும், ஏரி நீரில் பொதுமக்கள் துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது போன்ற காரணங்களாலும் மாசுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  #PuzhalLake
    ×