search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு  குறைப்பு
    X

    பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு  குறைப்பு

    பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 350 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.

    இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி செப்டம்பர் 22ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 29-ந் தேதி வந்தடைந்தது.

    வடகிழக்கு பருவ மழை சீசன் தொடங்கியதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு கடந்த 28-ந் தேதி நிறுத்தப்பட்டது.

    இதன் காரணமாக 31-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று போனது. செப்டம்பர் 29-ந் தேதி முதல் கடந்த 31-ந் தேதி வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 1,604 டி.எம்.சி. தண்ணீர் வந்த சேர்ந்தது.

    பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு தொடர்ந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் இணைப்பு கால்வாயில் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று விட்டதால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 350 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீர் பேபி கால்வாய் மூலமாக அனுப்பப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 23 . 60 அடியாக பதிவானது. 656 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×