search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "products"

    • வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
    • ஆய்வில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் உத்தரவின்படி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தினசரி சந்தை மற்றும் மீன் மார்க்கெட் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் சுமார் 100 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • கரட்டடிபாளையத்தில் உள்ள மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகள், பான்மசாலா பாக்கெட்டுகள் என மொத்தம் 107 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • சூரம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் போன்றவற்றை விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கோபி கரட்டடிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் கரட்டடிபாளையத்தில் உள்ள மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகள், பான்மசாலா பாக்கெட்டுகள் என மொத்தம் 107 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த குமார்(32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சூரம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 159 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • தோட்டக்கலைத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
    • தோட்டக்கலைத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    மடத்துக்குளம்

    மடத்துக்குளம் வட்டாரத்தில் 2020-21ம் ஆண்டில் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்துங்காவி கிராமம் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில்தோட்டக்கலைத்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட 125 விவசாயிகளுக்கு பல்வேறு ரக விதைகள் கொண்ட தொகுப்பு வழங்கப்படுகிறது.பயிர் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் துங்காவியில் நடந்த விழாவில் தலா 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.தற்போது பண்ணை குறைபாடு களைதல் திட்டத்தின் கீழ் 20 விவசாயிகளுக்கு, பிளாஸ்டிக் டிரம், பிளாஸ்டிக் அறுவடை பெட்டி உள்ளிட்ட தொகுப்பு தலா 20 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்டது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா, அலுவலர் காவ்யதீப்தினி உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு வழங்கினர்.

    தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: -

    அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்வயல்களின் வரப்பு ஓரங்களில், தோட்டத்தின் எல்லை பகுதிகளில் நடவு செய்யும் வகையில் சீதா, எலுமிச்சை, கொய்யா, நாவல், கொடுக்காப்புளி, நெல்லி, முருங்கை, தேக்கு போன்ற 8வகையான பழம், பயன்தரும் மரக்கன்றுகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள், சிட்டா, ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 ஆகிய ஆவணங்களுடன்மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விருதுநகர் ஒன்றியத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பால் பொருட்கள் தயாரிக்கும் புதிய ஆலை நிறுவப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்ட சபையில் பால் வளத் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அதற்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பதிலளித்துப் பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

    புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் இரண்டு 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிர்விப்பான்கள், கிள்ளனூர் மற்றும் நார்த்தாமலை ஆகிய இடங்களில் நிறுவப்படும்.

    திருவண்ணாமலை பால்பண்ணை மற்றும் பால்பவுடர் தொழிற்சாலையின் கையாளும் திறனை உயர்த்த நவீன சவ்வூடு வடிகட்டும் தொழில் நுட்பத்திலான புதிய எந்திரம் நிறுவப்படும்.

    ஈரோடு ஒன்றியத்தில் 50 மி.லி., 100 மி.லி. மற்றும் 200 மி.லி. என்ற சிறிய அளவிலான சிப்பங்களில் நெய் நிரப்பும் நவீன தானியங்கி எந்திரம் நிறுவப்படும். 17 மாவட்ட ஒன்றியங்களில் மேற்கொள்ளப்படும் கால்நடை பராமரிப்பு சேவை பணிகளை ஒருங்கிணைக்க ஏதுவாக சிறப்பு செயலி மென்பொருள் உருவாக்கப்படும்.

    17 மாவட்ட ஒன்றியங்களிலுள்ள 34 பால் குளிரூட்டும் நிலையங்கள், 341 பால் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் 341 தொகுப்பு பால் குளிர்விப்பான் நிலையங்களில், அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கேமரா நிறுவப்படும்.

    நீலகிரி, தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட துணை பதிவாளர்களுக்கு (பால்வளம்) புதிய இலகுரக வாகனம் வாங்கப்படும். இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் பொது நிலை அலுவலர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும்.

    300 பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையகங்களில் பால் மற்றும் பால் உபபொருட்கள், எந்த நேரமும் நுகர்வோர்களுக்கு கிடைக்கும் வகையில் பாட்டில் குளிர்விப்பான்கள் மற்றும் ஆழ்நிலை உறை குளிர்விப்பான்கள் வழங்கப்படும்.

    17 மாவட்ட ஒன்றியங்களை சார்ந்த 30 முன்னணி பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கான அறிவியல் தொழில்நுட்ப முறைகளை தெரிந்துகொள்வதற்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    விழுப்புரம் ஒன்றியத்தில், குல்பி ஐஸ்கிரீம் தயாரிக்கும் வசதிகள் மற்றும் குளிர்பதன வசதிகளின் தரம் உயர்த்தப்படும். ஈரோடு மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஒன்றியங்களில் உள்ள பயன்படுத்தப்படாத நிலப்பரப்பில் பசுந்தீவன சாகுபடி செய்யப்படும். தர்மபுரி ஒன்றியத்தில் பால் பதப்படுத்தும் எந்திரம், புதிய குளிர்பதன அமைப்பு மற்றும் கொதிகலன் ஆகியவை நிறுவப்படும். 500 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் தானியங்கி பால் பரிசோதனை அலகுகள் வழங்கப்படும்.

    அம்பத்தூரிலுள்ள பால் உபபொருட்கள் பண்ணையில் பனீர், பால்பேடா, குல்பி மற்றும் ஐஸ்கிரீம் ஆகிய பால் உபபொருட்கள் பேக்கிங் செய்யும் தானியங்கி மற்றும் நவீன சிப்பங்கட்டும் எந்திரங்கள் நிறுவப்படும்.

    மேலும் அங்கு அதிக கொள்ளளவு கொண்ட கொதிகலன்கள், மின்மாற்றிகள், மின் உபகரணங்கள், குளிர்பதன சேமிப்பு வசதிகள் மற்றும் ஐஸ்கிரீம் உறைகலன்கள் அமைக்கப்படும். விருதுநகர் ஒன்றியத்தில் வெண்ணெய், நெய், பனீர் மற்றும் இந்திய வகை இனிப்புகள் தயாரிக்க ஏதுவாக பால் பொருட்கள் தயாரிக்கும் புதிய ஆலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

    இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார். 
    ×