search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "products"

    • மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் தயாரித்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
    • ரூ.38 ஆயிரத்து 640-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் துறையின் விரிவாக்கப்பணி சார்பில் சி.எஸ்.ஐ.மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அவர்கள் தயாரித்த குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், பொம்மைகள், ஊறுகாய் மற்றும் எழுது பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட்டன. கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி விற்பனையை தொடங்கி வைத்தார். கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர்.

    இதன் மூலம் வருகின்ற நிதி சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை மூலம் ரூ.38 ஆயிரத்து 640-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளையும் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.

    • 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும்.
    • ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

    சேலம்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும். இதை யொட்டி, சேலத்தில் பல்வேறு பகுதி களில் மூக்கணாங்கயிறு, கழுத்து

    கயிறு, ஜலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து

    வியாபாரிகள் கூறுகையில், அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ள

    வலசையூர்,ஆச்சாங்குட்டப்பட்டி, அடி மலைபுதூர், சுக்கம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, பேளூர் உள்படபல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அயோத்தியாப்பட்டணத்திற்கு வந்து தங்கள் கால்நடைகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதற்காக மூக்கணாங்கயிறு, ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

    • வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக காய்கறிகள் லாரிகளில் கொண்டுவந்து இறக்கி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்டப்பட்டது.

    ரூ.20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன. இது தவிர வாகனங்கள் நிறுத்துமிடம், ஏ.டி.எம். மையம், கழிவறை வசதிகளும் கட்டப்பட்டுள்ளன.

    இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கடைகள் ஏலம் விடப்பட்டன. தொடர்ந்து ஏலம் எடுத்த கடை வியாபாரிகளுக்கு, சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டான இன்று முதல் மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்தது. காலை முதலே வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் காய்கறிகளை குவித்து வைத்து விற்பனையில் ஈடுபடத் தொடங்கினர்.

    மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக காய்கறிகள் லாரிகளில் கொண்டுவந்து இறக்கி வைக்கப்பட்டது. காய்கறிகள் விற்பனை நடைபெறுவதை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏராளமான பொதுமக்கள் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வந்தனர்.

    • மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.
    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.

    அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அந்த வண்டியின் ஓட்டுநர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

    • செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துங்கள் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மண்டலத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் செறிவூட்டப்பட்ட அரிசிகள் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு அதன் அடிப்படையில் விநியோகிக்கப்படுகிறது.

    இந்த பொருட்களில் வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியினை பொது விநியோகத் திட்டத்திற்கும் வழங்குகிறது.

    மாணவர்கள் பெற்றோர்களிடம் இதன் பயன் குறித்து எடுத்து சொல்லி அனைவரும் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருள்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியமுடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மண்டல மேலாளர் ஜோதிபாசு, துணை மண்டல மேலாளர் மேகவர்ணம், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் முத்துக்குமார், தர கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கம் இணை பதிவாளர் கோவிந்தராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலத்தில் தடைசெய்யப்பட்ட 103 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • தடை செய்யப்பட்ட பொருட்–களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் சேலம் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் சுமார் 103 கிலோ எடையுள்ள, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தட்டுகள், டம்ளர்கள், ஸ்பூன்கள், உறிஞ்சு குழல்கள் மற்றும் கேரி பேக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் எனவும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதுபோன்ற ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை உபயோகம் மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்குமாறும், நெகிழி கேரி பேக்கிற்கு பதிலாக மஞ்சப்பை போன்ற மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தவறும்பட்சத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    • ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5.70 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 11, 036 தேங்காய்கள் வரத்து இருந்தன.இவற்றின் எடை 4,743 கிலோ.தேங்காய் கிலோ ரூ.21.10 முதல் ரூ.27.25 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.24.65. 51 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 980 கிலோ.கொப்பரை கிலோ ரூ.61.15 முதல் ரூ.85.35 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.78.85.ஏலத்தில் 96 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள் உள்பட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கல்.
    • பாட்டு போட்டி, பேச்சு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி ஊராட்சி ஒன்றியதொடக்க ப்பள்ளியில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    அனைவரையும் தலைமையாசிரியர் மகாதேவன் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளைய ராஜா நேரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மேரி, கிராம கமிட்டி உறுப்பினர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், சத்துணவு ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமுகம் நேரு படத்தை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

    அப்போது மேலநம்ம ங்குறிச்சி கிராம கமிட்டி உறுப்பினர்கள் பள்ளிக்கு தேவையான பீரோ, மேசை, நாற்காலி, மின்விசிறி, விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள் என சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு உபகரண பொருட்களை பள்ளிக்கு வழங்கினார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்ப ட்டது.

    தொடர்ந்து,பாட்டு போட்டி, பேச்சு போட்டி களில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு குலுக்கல் முறையில் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.

    • மதுரை-ராமநாதபுரத்தில் மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த கும்பல் சிக்கியது.
    • 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரையில் போதை தரும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பள்ளி மாணவர்களும் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தி வருவது சமீப காலமாக தெரிய வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து போதைபொருட்களை விற்பனை செய்யும் கும்பலை கண்டறிந்து கைது செய்ய மதுரை தெற்குவாசல் போலீஸ் கமிஷனர் சண்முகம் ஆலோசனையின் பேரில் கீரைத்துறை போலீசார் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சந்தான போஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நேற்று இரவு வாழைத்தோப்பு ஜங்சன் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதிலிருந்த ஒரு வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.

    அப்போது சீட்டுக்கு அடியில் ஒரு பையில் 7 கிலோ 920 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் ஆட்டோவில் வந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அதிரடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஆட்டோவில் புகையிலை பொருட்களை கடத்தியவர் சிந்தாமணி ராஜாமணி நகரை சேர்ந்த நல்லுசாமி மகன் விஜய் (23) என்பதும், அவர் அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த சூர்யா (23) என்பவருடன் சேர்ந்து புகையிலை பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

    மதுரையில் புகையிலை பொருட்களுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் அவற்றை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்து நல்ல வருமானம் பெற முடிவு செய்து விஜய் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    அவருக்கு சிந்தாமணியை சேர்ந்த சண்முகவேல் மனைவி மணிமேகலை (23), காமராஜபுரம் ஜோசப் நகர் சுப்பிரமணி மனைவி முனீஸ்வரி (53) என்பவரும் பெங்களூர் சென்று புகையிலை பொருட்களை வாங்கி வந்து கொடுத்து வந்தனர்.

    அவற்றை விஜயும், சூர்யாவும் மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த பட்டாகத்தி பாலாஜி என்பவருடன் சேர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலும் விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்கள் ஆட்டோவில் புகையிலை பொருட்களை மறைத்து கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்துதள்ளனர்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக விஜய், சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. யாக மகாலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார்.
    • இவர் நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. யாக மகாலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார். இவர் நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனையை முழுவதுமாக தடுக்க நடவடிக்கை எடுப்பேன். விசைத்தறி, கைத்தறி கூலி தொழிலாளர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன்.

    பொதுமக்கள் உங்கள் பிரச்சினைகளை, சமூக விரோத செயல்கள் குறித்த தகவல்களை என்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உதவி பொருட்கள், இனிப்பு வழங்கினார்.
    • இதில் மாணவ- மாணவிகள், பொதுமக்கள், பணிதள பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஒன்றியம் நுணாக்காடு ஊராட்சி ஆட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சா.சின்னையன் மாணவர்களுக்கு உதவி பொருட்கள், இனிப்பு வழங்கினார்.

    இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் துரைராஜ், தலைமை ஆசிரியர் ஜாசி, ஆசிரியர் முத்துக்குமரன், ஊராட்சி மக்கள் பிரதிநிதி பொன் இளையகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் ஊராட்சி மக்கள் பிரதிநிதி அ.மேனகா, வி.கோவிந்தராஜ், சாமூண்டீஸ்வரி, ஆ.ஜெயந்தி, செ.சத்யா மற்றும் உறுப்பினர்கள் , ஊராட்சி செயலர் தெ.இளங்கோவன், மக்கள் நல பணியாளர் செல்வி மற்றும் மாணவ மாணவிகள் , பொதுமக்கள், பணி தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியர் முத்துகுமரன் நன்றி கூறினார்.

    • கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்.
    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

    நாமக்கல், ஆக.1-

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நாளை யும், நாளை மறுநாளும் வல்வில் ஓரிவிழா அரசின் சார்பில் நடைபெற உள்ளது. வல்வில் ஓரி விழாவை ஒட்டி மலர் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க முகாம் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன.

    கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்.

    இந்த ஆய்வின்போது வாகனங்களில் கொண்டு வரப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே சுற்றுலா பயணிகள் எக்கா ரணம் கொண்டும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர வேண்டாம்.

    சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மட்டும் சேகரிக்க ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மட்டுமே பயன்ப டுத்திய குடிநீர் பாட்டில்களை போடவேண்டும். கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். எனவே கடைக்காரர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.

    கொல்லிமலையில் கடத்த ஒரு மாத காலமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம் மருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அருவிகளுக்கு செல்லவோ, குளிக்கவோ சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும்  அனுமதி கிடையாது. இருசக்கர வாகனங்களில் கொல்லிமலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×