search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private School"

    ஊட்டி தனியார் பள்ளி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முத்தோரை பாலாடாவில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி மராட்டியம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகளும் உள்ளனர்.

    சர்வதேச அளவில் இயங்குவதால் பள்ளியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி பள்ளியில் தங்கியிருந்து படிக்கும் தங்களது குழந்தைகளை மாதத்தில் ஒருமுறை மட்டுமே பெற்றோர் பார்க்க முடியும். இந்த நிலையில் அந்த பள்ளியில் புனேவை சேர்ந்த ஆனந்த் என்பவரது மகள் சாவ்லி சர்மிளா(வயது 16) தங்கியிருந்து, பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு விடுதியில் உள்ள தனது அறையில் இருந்து உணவு சாப்பிட சாவ்லி சர்மிளா வெளியே வரவில்லை. இதனால் சக மாணவிகள் அவளது அறைக்கு சென்று பார்த்தனர். ஆனால் அறையிலும் அவள் இல்லை. இதனால் பள்ளி வளாகத்தில் தேடினர். மேலும் பள்ளி நிர்வாக அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே விடுதியில் உள்ள குளியல் அறையில் மாணவி சாவ்லி சர்மிளா துப்பட்டா மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் ஊட்டி ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மாணவி சாவ்லி சர்மிளா தனது பெற்றோர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததும், படிப்புக்காக நீண்ட தொலைவில் உள்ள பள்ளியில் சேர்த்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஊட்டி ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    குன்னம்:

    அரியலூர் மாவட்டம் செட்டித்திருக்கோணம் அடுத்த காங்கையார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உத்தண்டம். இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகன் உதயநிதி (வயது 17).

    இவர் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவ்வப்போது ஊருக்கு சென்று வரும் அவர், மற்ற நாட்களில் செல்போன் மூலம் பெற்றோரிடம் பேசுவார். அது போல் நேற்றிரவு செல்போன் மூலம் பெற்றோரிடம் பேசினார்.

    பின்னர் விடுதிக்கு திரும்பினார். சிறிது நேரம் கழித்து அவரது நண்பர்கள் உதயநிதி அறைக்கு சென்றனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி உதயநிதியை அழைத்த போது, உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை.

    இதையடுத்து ஜன்னலை திறந்து பார்த்த போது, உதயநிதி மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இதுகுறித்து விடுதி வார்டனிடம் தெரிவித்தனர். அவர் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உதயநிதியின் உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனிடையே உதயநிதி தூக்கில் பிணமாக தொங்குவதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விடுதிக்கு விரைந்து சென்றனர். மேலும் உதயநிதியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலும் ஆத்திரத்தில் அங்கிருந்த கண்ணாடி, டேபிள், ஷேர் மின் விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். உதயநிதி சாவு குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி அப்பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் மாணவன் சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் உதயநிதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    உதயநிதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. விடுதியில் தங்கியிருந்து படிக்க விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்தாரா? அல்லது ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி பகுதியில் உள்ள 3 தனியார் பள்ளிகளில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி நகரம் மற்றும் அதியமான்கோட்டை பகுதியில் ஒரே குழுமத்தை சேர்ந்த 3 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் 3 வாகனங்களில் திடீரென்று 9 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். காலை 11 மணி முதல் அதியமான்கோட்டை பள்ளியில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை நடைபெறுவதால் மாணவ-மாணவிகளை  வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

    மேலும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களை வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் கணினிகளை சோதனை செய்து வரவு செலவு தொடர்பான பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த சோதனையின்போது வருமான வரி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    3 பள்ளிகளில் வருமான வரி செலுத்துவதில் முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்று உள்ளதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த சோதனையில் வருமான வரி செலுத்துவதில் விதிமீறல் தொடர்பாக ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்ததா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    தர்மபுரி பகுதியில் உள்ள 3 தனியார் பள்ளிகளில் வருமான வரித்துறையினர் காலை 11 மணியில் இருந்து இரவு 10 மணிக்கும் மேல் நடைபெற்ற இந்த திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   
    உ.பி. மாநிலம் நொய்டா மாவட்டத்தில் இன்று பள்ளியின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. #SchoolWallCollapse #NoidaSchool
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் நொய்டா மாவட்டத்தில் உள்ள சாலாப்பூர் கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை பள்ளியின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 3 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #SchoolWallCollapse #NoidaSchool
    முறையான கட்டிடம் இல்லாமல் புழல் பகுதியில் இயங்கும் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடவும், அங்கு படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றவும் கல்வி அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், சசிகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை, புழல் அருகேயுள்ள கன்னடப்பாளையத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது. அங்கு முறையான கட்டிடங்கள் இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் பள்ளிக்கூடங்கள் இயங்குகிறது. இதுகுறித்து அரசுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கும்பகோணம் பள்ளி தீ விபத்தை போல மற்றொரு சம்பவம் நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? கட்டிடமே இல்லாத பள்ளியை நடத்துவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த வாரம் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தொடக்க கல்வி இயக்குனர் ஏ.கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் ஆஜரானார்கள். அவர்கள், இந்த பள்ளிக்கூடத்துக்கு ஏற்கனவே விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

    அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அந்த பள்ளியை மூடவும், அங்கு பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றவும் உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத கல்வித்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். #tamilnews
    ×