என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Private School"
குன்னம்:
அரியலூர் மாவட்டம் செட்டித்திருக்கோணம் அடுத்த காங்கையார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உத்தண்டம். இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகன் உதயநிதி (வயது 17).
இவர் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவ்வப்போது ஊருக்கு சென்று வரும் அவர், மற்ற நாட்களில் செல்போன் மூலம் பெற்றோரிடம் பேசுவார். அது போல் நேற்றிரவு செல்போன் மூலம் பெற்றோரிடம் பேசினார்.
பின்னர் விடுதிக்கு திரும்பினார். சிறிது நேரம் கழித்து அவரது நண்பர்கள் உதயநிதி அறைக்கு சென்றனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி உதயநிதியை அழைத்த போது, உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை.
இதையடுத்து ஜன்னலை திறந்து பார்த்த போது, உதயநிதி மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இதுகுறித்து விடுதி வார்டனிடம் தெரிவித்தனர். அவர் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உதயநிதியின் உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனிடையே உதயநிதி தூக்கில் பிணமாக தொங்குவதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விடுதிக்கு விரைந்து சென்றனர். மேலும் உதயநிதியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் ஆத்திரத்தில் அங்கிருந்த கண்ணாடி, டேபிள், ஷேர் மின் விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். உதயநிதி சாவு குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி அப்பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் மாணவன் சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் உதயநிதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உதயநிதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. விடுதியில் தங்கியிருந்து படிக்க விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்தாரா? அல்லது ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டில், சசிகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை, புழல் அருகேயுள்ள கன்னடப்பாளையத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது. அங்கு முறையான கட்டிடங்கள் இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் பள்ளிக்கூடங்கள் இயங்குகிறது. இதுகுறித்து அரசுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கும்பகோணம் பள்ளி தீ விபத்தை போல மற்றொரு சம்பவம் நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? கட்டிடமே இல்லாத பள்ளியை நடத்துவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த வாரம் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தொடக்க கல்வி இயக்குனர் ஏ.கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் ஆஜரானார்கள். அவர்கள், இந்த பள்ளிக்கூடத்துக்கு ஏற்கனவே விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.
அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அந்த பள்ளியை மூடவும், அங்கு பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றவும் உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத கல்வித்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்