search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic bags"

    கூடலூர் நகர் பகுதியில் நகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதார அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்றவர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 அபராதம் விதித்ததனர்.

    கூடலூர்:

    கூடலூர் நகரம் உள்பட மாவட்டம் முழுவதும் பாலித்தீன் பைகள் விற்பனை செய்யுவும், ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்தவும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பாலித்தீன் பைகள் விற்பனை மட்டும் பயன்பாடு தொடர்ந்து உள்ளதா? என நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தலைமையில் பொறியாளர் சிவக்குமார், கம்பம் வருவாய் அலுவலர் பரமசிவம், நகராட்சி சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், சுகாதார உதவியளர்கள் குமார், தினே‘ மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கொண்ட குழுவினர் கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகளில் சோதனை நடத்தினார்கள். 

    அப்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பாலித்தீன் பைகள், டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த டீக்கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்ற 4 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    தாய்லாந்து நாட்டில் இன்று தேசிய சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பதற்கு மிகப்பெரிய கடைகள் மற்றும் மால்கள் முன்வந்துள்ளன. #ThaiEnvironmentDay #CampaignAgainstPlastic
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டில் 1991ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி தாய் சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெருகி வரும் பிளாஸ்டிக் பயன்பாடு பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதால் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது.

    அவ்வகையில் இன்று தாய் சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை பொதுமக்கள் இன்று தவிர்க்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. அதனை ஏற்று பல்வேறு கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க ஒப்புக்கொண்டுள்ளன.



    இதற்காக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன், முன்னணி ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைகளை நடத்தும் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    டிசம்பர் 4-ம் தேதியை பிளாஸ்டிக் பைகள் இல்லா நாளாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அனைத்து கடைகளும் மால்களும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது சில நாட்களோ வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளை வழங்காமல், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன. #ThaiEnvironmentDay #CampaignAgainstPlastic 
    அதிக நச்சுத்தன்மை கொண்ட வி‌ஷத்தை விட அபாயகரமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை கூறினார். #Plasticban
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் சணல், துணிப்பைகள் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பாலு முன்னிலை வகித்தார்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணி மற்றும் சணல் பைகளை வழங்கினார் அப்போது அவர் பேசியதாவது:-



    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வீசி விடுவதால் அவை பூமியில் மக்காமல் அப்படியே இருந்து விட்டு சுற்றுப்புற சூழலை பாழாக்கி விடுகிறது.

    அதிக நச்சுத்தன்மை கொண்ட வி‌ஷத்தை விட அதிக அபாயகரமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    அதற்கு மாற்றாக சணல் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் எந்தவித கெடுதல் ஏற்படாது.

    இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் பேசினார்.

    நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர்கள் சிவசங்கரன், மோகனகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Plasticban
    புகளுர் பேரூராட்சியில் உள்ள கடைகளில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் கப்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    தமிழ்நாடு அரசு வருகிற ஜனவரி முதல்தேதி முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதல், சேமிப்பு வைத்தலை தடை செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டரின் அறிவுரைகளின் படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காகித ஆலை புகளுர் பேரூராட்சியில் உள்ள கடைகளில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைமற்றும் பிளாஸ்டிக் கப்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

    பின்னர் அவற்றிற்கு பதிலாக  செய்தித்தாள் காகிதங்கள், வாழை மற்றும் பாக்கு மட்டை  மூலம் செய்யப்பட்ட பொருட்கள், பனியன்  துணிகள், கைப்பை மற்றும் கூடைகள் ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தினர். 

    நிகழ்ச்சியின் போது பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், இளநிலை உதவியாளர் முருகேசன், துப்புரவு மேற்பார்வையாளர்  மற்றும் துப்புரவு பணியாளர்கள் உடனிருந்தனர்.
    பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு எளிதில் மக்கக்கூடிய பைகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. #Plastic
    கோவை:

    தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் முனைப்புடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை அறிவிப்பு கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதை போலவே பொது மக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அறிவிப்பை முழுமையாக செயலாக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர்.

    தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பொருட்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு எளிதில் மக்கக்கூடிய பைகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

    பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக கோவையில் விற்பனை செய்யப்படும் ‘பயோ-பேக்குகள்’.

    பெங்களூரை சேர்ந்த ரிஜினோ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து நிறுவன அதிபர் சிபி செல்வன் கூறியதாவது:-

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மக்கும் தன்மையிலான இந்த பைகள் 3 மாதத்தல் மக்கி விடும். எளிதாக தண்ணீரில் கரைந்து விடும் தன்மை கொண்டவை. அந்தத் தண்ணீரை நாம் தவறுதலாக அருந்தினாலும், அதனால் உடல்நலன் பாதிக்கப்படாது. தீப்பற்றி எரியும் போது பிளாஸ்டிக் பைகள் உருகுவது போல் இல்லாமல், இந்த பைகள் சாம்பலாகி விடும். அந்தப் பைகளை விலங்குகள் உண்டாலும் அவற்றுக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது.

    தாவரங்களில் இருந்து பெறப்படும் மூலப்பொருட்கள் மற்றும் மக்காசோளம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்த பைகள் தயாரிக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு பிளாஸ்டிக் பை போலவே காணப்படும் இந்த பயோ பேக்கை பயன்படுத்தி விட்டு தூக்கி வீசினாலும், பொடி, பொடி துகள்களாகி சில நாட்களில் மக்கி விடும். மருந்து கடைகள், ஓட்டல், ஜவுளிகடைகள், தொழிற்சாலைகளில் பொருட்கள் பார்சல் செய்ய ஏராளமானோர் இதனை வாங்குகின்றனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் எங்களுக்கு ஆர்டர் கிடைத்து வருகிறது.


    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோன்ற பைகள் போலியாக விற்கப்படுவதை தடுக்க இந்த பைகளில் கோவை ஸ்மார்ட் சிட்டி லோகோ அச்சிடப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அங்காடியில் இந்த பைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு 1 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் பல வகைகளில் பைகள் உள்ளன.

    தயாரிப்பு குறைவாக இருப்பதால் விலை சற்று அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இந்த பைகளுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. பொதுமக்கள் இந்த பைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். எனவே தயாரிப்பு அதிகரிக்கும் போது விலை குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Plastic
    கூடலூரில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி 44,700 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 வியாபாரிகளிடம் இருந்து ரூ.45,500 அபராதமும் வசூலித்தனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் 50 மைக்ரான் அளவு கீழ் உள்ள பிளாஸ்டிக்பைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை பதுக்கி வைத்து சிறு வணிகர்கள், பொதுமக்களுக்கு அதிகளவு விற்பனை செய்வதாக நகராட்சி நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் ஆணையாளர் பார்வதி தலைமையில் ஸ்ரீஜித், ரமேஷ், செல்வம் உள்ளிட்ட பணியாளர்கள் கூடலூர் நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 30 கடைகளில் பிளாஸ்டிக்பைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 25 கடைகளில் 50 மைக்ரான் அளவுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக்பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது.

    ஆனால் மீதமுள்ள 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 44,700 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அப்போது நகராட்சி அலுவலர்களிடம் கையும்களவுமாக சிக்கி கொண்ட வியாபாரிகள் இனி வரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை விற்பனை செய்யப்பட மாட்டாது என உறுதி அளித்தனர். ஆனால் நகராட்சி அலுவலர்கள் வியாபாரிகளின் உறுதிமொழியை ஏற்க வில்லை.

    பலமுறை எச்சரிக்கை செய்தும் அதிகாரிகளின் உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகளை பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்தது தவறு என கூறி நகராட்சி ஆணையாளர் பார்வதி 5 வியாபாரிகளுக்கு ரூ.45,500 அபராதம் விதித்து உடனடியாக வசூலித்தார். நகராட்சி வரலாற்றில் அதிக அளவு பிளாஸ்டிக்பைகள் பறிமுதல் செய்து அபராத தொகையும் வசூலித்தது இதுவே முதன்முறையாகும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மக்காத பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதால் மாசுபடுகிறது. இதனை தடுக்க பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலமாக இருப்பதால் தமிழகம். கேரளம், ஆந்திரா, கர்நாடக மற்றும் வெளிமாநிலங்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கி றது.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மக்காத பிளாஸ்டிக் பைகளை உபயோகித்து முக்கிய சுற்றுலா தளங்களிலும் நகர் பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகளை விட்டு செல்லுவதால் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு வரும் வன விலங்குகள் மற்றும் பசு மாடுகள் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை உண்கிறது.

    இதனால் விலங்குகளும் இறந்து விடுகின்றன மேலும் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்து வருகிறது.

    2019-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சர்வேதேச சுற்றுலாத் தலமான கொடைக் கானலில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என சுமார் 4 வருடத்திற்கு முன்பே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

    ஆனால் கொடைக் கானலில் ஓட்டல்கள், சாலையோர கடைகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்கின்றன.

    இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்த விட நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி இந்த பிளாஸ்டிக் பைகளை கடையில் உபயோகிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

    ×