search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pension"

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தினைவழங்க வேண்டும்.
    • மென்பொருள் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்திணை ரத்து செய்து, அனைவருக்கும் பயனளிக்கும் பழைய ஓய்வூதியத்தினைவழங்கிட வேண்டும்.

    மறுக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பை உடன் வழங்கிட வேண்டும். மாநகராட்சி நகராட்சியில் நிரந்தர பணியிடங்களை அளித்திடும் அரசாணை எண் 152 ரத்து செய்ய வேண்டும்.

    தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தினை, சத்துணவு ஊழியர்களைக் கொண்டு முழுமையாக அமுல்படுத்தி விட வேண்டும்.

    அரசுத் துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி, அவுட் சோரிங் முறைகளை ரத்து செய்து, காலம் முறை ஊதியத்தை உடனடியாக காலியிடங்களை நிரப்பிட வேண்டும்.ஏ மற்றும் பி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும்பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும்.

    சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம் ஆர் பி செவிலியர்கள், நூலகர்கள், உள்ளிட்டு தொகுப்பூதியம், சிறப்பு காலம் முறை ஊதியம் பெறும் ஊழியர்களை, நிரந்தரப்படுத்தி காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை பனிக்காலமாக அறிவிக்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும்.

    கருவூலம் உள்ளிட்ட அரசுத் துறையில் பயன்படுத்தப்படும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பது கைவிட வேண்டும்.

    ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்ட த்தில் தமிழ்நாடு அரசு உயர் சங்கத்தின், நன்னிலம் வட்டக்கிளை நிர்வாகிகள், மற்றும்மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • 100 நாள் திட்ட தொழிலாளருக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது.
    • எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    கோவில் பூசாரிகள் நல சங்க மாநிலத் தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. பெரும்பாலான கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள், குறைந்த வருவாய் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர்.100 நாள் திட்ட தொழிலாளருக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் கோவில் பூசாரிகள், அர்ச்சகர் நிலை இதைவிட மோசமாக உள்ளது.

    ஒரு சில கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு, மாத ஊதியம் இன்றி ஊக்கத்தொகை என்ற பெயரில் தினசரி 33 ரூபாய் வழங்கப்படுகிறது.

    நீண்ட நாள் கோரிக்கைக்கு பின் ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில் வேலை பார்க்கும் பூசாரிகளுக்கு 1,000 ரூபாய் மாத ஊக்க தொகையாக வழங்கப்படுகிறது. அவர்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊதியம் குறைவாக பெற்று வரும் அர்ச்சகர், பூசாரிகளுக்கு அறநிலையத்துறையே இ.பி.எப்., சந்தா தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • இந்திய உணவு கழக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இணையாக கூலி வழங்க வேண்டும்.
    • ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.4000 ஊக்க ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் நாகேஷ், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சாமிக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொதுச்‌ செயலாளர் சந்திரகுமார்‌ சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் கிடங்குகள், திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் பணி புரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு , இந்திய உணவுக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இணையாக கூலி வழங்க வேண்டும், கொள்முதல் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்த வேண்டும், ‌ ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ. 4000 ஊக்க ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாநில பொருளாளர் கோவிந்தராஜன், மாநில செயலாளர்கள் கிருஷ்ணன், முருகேசன், ‌கலியபெருமாள், தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வம், தஞ்சாவூர் மாவட்ட பொருளாளர் தியாகராஜன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, மாவட்ட செயலாளர்கள் சிவகுருநாதன், ஆனந்தன் , புஷ்பநாதன், சம்பத், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தை எதிர்க்கட்சித் தலைவர் முற்றுகை.
    • உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை நிறுத்தி வைப்பதாக அதிகாரி விளக்கம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியல் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    எம்.எல்.ஏ.க்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வில்லியனூர் தொகுதியில் உள்ள கொம்பாக்கம் வார்டு பகுதியை சேர்ந்த 40 பேருக்கு முதியோர் உதவித்தொகை எம்.எல்.ஏ. பரிந்துரை இன்றி வழங்கப்பட இருந்தது.

    அமைச்சர் நமச்சிவாயம் பயனாளிகளுக்கு இந்த உதவித் தொகையை வழங்குவார் என பயனாளிகளுக்கு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. தகவலறிந்த எதிர்கட்சித்தலைவர் சிவா, தொகுதி தி.மு.க. நிர்வாகிகள், ஆதரவாளர்களோடு வந்து குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டார்.

    அப்போது இயக்குனர் முத்துமீனா அலுவலகத்தில் இல்லை. அவருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வரச்சொல்லும்படி ஊழியர்களிடம் சிவா வலியுறுத்தினார். அரை மணி நேரத்திற்கு பிறகு இயக்குனர் முத்துமீனா அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் தொகுதி எம்.எல்.ஏ. பரிந்துரையின்றி உதவித்தொகை வழங்க எப்படி முடிவு செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

    நியமன எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில், இறப்பு காலியிடங்களை வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நியமன எம்.எல்.ஏ.க்கு தொகுதியே இல்லாத போது எந்த அடிப்படையில் இறப்பு காலியிடம் அளிக்க முடியும்.? என சிவா கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளிக்க முடியாமல் இயக்குனர் முத்துமீனா திணறினார். உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை நிறுத்தி வைப்பதாக கூறினார். இதன்பின் எதிர்கட்சி த்தலைவர் சிவா அங்கிருந்து, ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

    • 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
    • சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் பல்லடம் வட்டக் கிளையின் 15 -வது பேரவைக் கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு வட்ட கிளைத் தலைவா் பாண்டியம்மாள் தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம் வருமாறு:- 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட சரண்டா் விடுப்பு அகவிலைப்படி ஊதியத்துடன் நிலுவை தொகையையும் வழங்க வேண்டும்.சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மாவட்ட செயலாளா் பாலசுப்பிரமணியம், வட்ட கிளைச் செயலாளா் ஆறுச்சாமி, பொருளாளா் ஜெயகுமாரி, மாவட்ட சத்துணவு ஊழியா் சங்கத்தலைவா் ராணி, மாவட்டச் செயலாளா் முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

    • கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மாவட்ட தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரம் பகுதியில் கோவில் பூசாரிகள் நல சங்க மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

    மாநில ஆலோசனை குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட செயலாளர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராமநாதபுரம் மாவ ட்டத்தில் அதிக அளவில் ஓய்வு பெற்ற பூசாரிகள் இருப்பதால் தமிழக அரசிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர். தகுதியான பூசாரிகள் விண்ணப்பத்தை தேர்வு செய்து ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூசாரிகள் நல வாரியத்திற்கு அலுவல்சாரா உறுப்பினர்களை தமிழக அரசு விரைந்து நியமனம் செய்ய வேண்டும். இந்து சமய அறநிலைத்துறை மூலம் பூசாரிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.

    பொறுப்பாளர்கள் ராமநாதபுரம் மாவட்டத் துணைத் தலைவர் பொன் முனியசாமி, கடலாடி ஒன்றிய செயலாளர் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் அய்யனகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

    • அரசு ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
    • இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    தமிழ்நாடு தொடக்கப்ப ள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் திருவாரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் முடிவின்படி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    கல்வி நலன் மாணவர் நலன் ஆசிரியர் நலன் இவைகளுக்கு எதிரான மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையினை கைவிட்டு, அந்தந்த மாநில கல்விக் கொள்கைகளின் படி கற்பித்தல் பணியை தொடர அனுமதிக்க வேண்டும்.

    ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்திட வேண்டும்.

    ஊதியக்குழு அறிக்கைகளை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்ப டுத்த வேண்டும்.

    இதற்கு ரிய நிதியினையும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்தப் போராட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    மத்திய அரசு கல்வியினை மாநில அரசு பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    • நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.6000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.
    • தமிழக அரசு உடல் உழைப்பு நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் 22-வது பேரவை கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    முருகேசன், பானுமதி, கார்த்திக் ஆகியோர் தலமை தாங்கினர். பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர்மணி மூர்த்தி பேரவை கொடியினை ஏற்றி வைத்தார்.

    அஞ்சலி தீர்மானத்தை சங்கத் துணைத் தலைவர்பரிமளா வாசித்தார். சங்க துணை செயலாளர்சேவையா வரவேற்று பேசினார். ஏ .ஐ. டி. யூ .சி மாநில செயலாளர் சந்திரகுமார் பேரவையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் கோவி ந்தராஜன் முன்வைத்தார். மாவட்ட பொருளாளர்சுதா வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

    ஏஐடியூசி மாவட்ட செயலாளர்தில்லைவனம் பேரவையினை நிறைவு செய்து பேசினார்.

    இந்த பேரவையில் நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூபாய் 6000 மாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர்அன்பழகன், போக்குவரத்து சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன், சுமை தூக்கும் சங்கத்தின் மாநில தலைவர் சாமிக்க ண்ணு, தெருவியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்கு மரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர்செந்தில்நாதன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர்கோடீஸ்வரன், தலைவர்இளஞ்செழியன், நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர்தியாகராஜன், கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    திருவாரூர்:

    நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ராஜஸ்தான் மற்றும் சட்டீஷ்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் வழங்கப்படுவது போல் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கணேசன், மாவட்டச்செயலாளர் ரெ.ஈவேரா ஆகியோர் கவன ஈர்ப்பு உரையாற்றினர். இதில் மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நட.ஜெயசீலன், அமிர்தராஜ், ஜெயந்தி, மகளிர் வலையமைப்பு அமைப்பாளர் கல்யாணி, அமைப்புச் செயலாளர் கிருபாராணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் வடுகநாதன் நன்றி கூறினார்.

    • டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துேவாம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
    • தி.மு.க.வுக்கு துணை போய் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், மா.கோவிந்தராசு, ராமசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், அம்மா பேரவை இணை செயலாளரும் பால்வளத் தலைவருமான காந்தி , எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் பகுதி செயலாளரும் கூட்டுறவு அச்சகத் தலைவருமான புண்ணியமூர்த்தி, திராவிட கூட்டுறவு வங்கி தலைவர் கரந்தை பஞ்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பகுதி செயலாளரும் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவருமான சரவணன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிறது. இந்த காலத்தில் அவர்கள் ஒரு சாதனை கூட செய்யவில்லை. 15 மாதத்தில் என்ன செய்தது என்று வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? .ஆட்சிக்கு வந்தால் இல்லதரசிகளுக்கு மாதம் ரூ.1000, சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துேவாம் என மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் இவைகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. தி.மு.க.வுக்கு துணை போய் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மேயர் சாவித்ரி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட பிரதிநிதி பூபதி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி வாஞ்சிநாதன், அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதி கோட்டை பகுதி மோகன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் திருநீலகண்டன், கிளை செயலாளர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி , கேசவன், காந்திமதி, விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி என்ற சோம ரத்தினசுந்தரம், 51-வது வட்ட செயலாளர் மனோகரன், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் பாலை ரவி, ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, மாணவரணி முருகேசன், மாவட்ட பொருளாளர் தம்பிதுரை , மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் மலைஅய்யன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரைசெந்தில், மாவட்ட துணை செயலாளர் தவமணி மலையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தீபாவளிக்கு 40 சதவீத போனஸ் வழங்க ேவண்டும்

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் பால்சாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ராஜா வரவேற்று பேசினார்.

    தமிழக அரசின் சில்லறை மதுபான விற்பனை கடைகளில் பணியாற்றி மரணம் அடைந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றுள்ள, ஓய்வு பெற உள்ள பணியாளர்களுக்கு சிறப்பு பணிக்கொடையாக ரூ.10 லட்சம் ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும்.

    மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் மேலும் பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். நிர்வாக சீர்கேடுகளை போக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிர்வாக சீரமைப்பு குழு அமைக்க வேண்டும். தீபாவளிக்கு 40 சதவீத போனஸ் வழங்க ேவண்டும் என்பன உள்பட பல்ேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற நவம்பர் மாதம் மாநில மாநாடு நடத்தவும், 2023 ஜனவரி மாதத்தில் பெருந்திரள் மறியல் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • 983 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 18 லட்சத்து 88 ஆயிரத்து 383 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • வேளாண்மை துறையில் அலுவலராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற, இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார்.

    திருவாரூர்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைதியின் சின்னமான புறாவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பறக்க விட்டனர்.

    அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்துமைக்காக காவல்துறை வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை சுகாதாரத்துறை மருத்துவ துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த 81 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

    மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வேளாண்மை துறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சமூக பாதுகாப்பு திட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மூலம் 983 பயனாளிகளுக்கு 4 கோடியே 18 லட்சத்து 88 ஆயிரத்து 383 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் திருவிடைமருதூரைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மனைவி 69 வயதான வனஜா என்பவர் தனது ஒரு மாத ஓய்வூதியத்தை ராணுவ வீரர்களுக்கு அளிக்க கூறி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் அளித்தார்.கலியபெருமாள் ஆடுதுறையில் வேளாண்மை துறையில் அலுவலராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்.இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார்.அவரது இறப்பிற்கு பிறகு ஓய்வூதியத் தொகை அவரது மனைவியான வனஜாவிற்கு வழங்கப்பட்டு வருகிறது

    இந்த நிலையில் தனது ஒரு மாத ஓய்வூதிய பணமான ரூ. 15,000 ராணுவ வீரர்களுக்கு அளிக்க வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ளார் வனஜா.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள வளநாடு பகுதியில் பிறந்தவர் வனஜா என்பதால் தனது சொந்த மாவட்டத்தில் இதை வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் இதனை அளித்ததாக வனஜா தெரிவித்தார்.அவர் அந்த பணத்தை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கும் போது அனைவரும் கைத்தட்டி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுகிறது.

    ×