என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
- டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தீபாவளிக்கு 40 சதவீத போனஸ் வழங்க ேவண்டும்
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் பால்சாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ராஜா வரவேற்று பேசினார்.
தமிழக அரசின் சில்லறை மதுபான விற்பனை கடைகளில் பணியாற்றி மரணம் அடைந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றுள்ள, ஓய்வு பெற உள்ள பணியாளர்களுக்கு சிறப்பு பணிக்கொடையாக ரூ.10 லட்சம் ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும்.
மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் மேலும் பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். நிர்வாக சீர்கேடுகளை போக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிர்வாக சீரமைப்பு குழு அமைக்க வேண்டும். தீபாவளிக்கு 40 சதவீத போனஸ் வழங்க ேவண்டும் என்பன உள்பட பல்ேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற நவம்பர் மாதம் மாநில மாநாடு நடத்தவும், 2023 ஜனவரி மாதத்தில் பெருந்திரள் மறியல் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்