search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pat cummins"

    • மார்ச் 1-ந்தேதி இந்தூரில் தொடங்கும் 3-வது டெஸ்டில் அவர் அணியோடு இணைந்து கொள்வார்.
    • ஒருவேளை அவர் வரவில்லையென்றால் ஸ்டீவ்சுமித் கேப்டனாக பணியாற்றுவார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி முதல் 2 டெஸ்டிலும் தோற்று பரிதாப நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் நாடு திரும்பியுள்ளார். தனிப்பட்ட காரணமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளார்.

    மார்ச் 1-ந்தேதி இந்தூரில் தொடங்கும் 3-வது டெஸ்டில் அவர் அணியோடு இணைந்து கொள்வார். ஒருவேளை அவர் வரவில்லையென்றால் ஸ்டீவ்சுமித் கேப்டனாக பணியாற்றுவார்.

    • புஜாரா தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார்.
    • இந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது டிவீட்டரில் பகிர்ந்து உள்ளது.

    டெல்லி:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இந்த போட்டியில் புஜாரா தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அணி, தங்களது வீரர்கள் கையெழுத்திட்ட ஆஸ்திரேலிய ஜெர்சியை புஜாராவுக்கு பரிசளித்தது.

    இந்த ஜெர்சியை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் புஜாராவுக்கு வழங்கினார். இந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது டிவீட்டரில் பகிர்ந்து உள்ளது.

    • நான் அவுட்டாகும்போது மட்டும்தான் கோபப்படுவேன்.
    • ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக புஜாரா தீவிரமாக தயாராகிவருகிறார்.

    இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. 2010-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான புஜாரா, இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 7014 ரன்களை குவித்துள்ளார்.

    இந்திய டெஸ்ட் அணி பேட்டிங் ஆர்டரில் ராகுல் டிராவிட் ஆடிய முக்கியமான 3-ம் வரிசையில் ராகுல் டிராவிட்டின் இடத்தை நிரப்பியவர் புஜாரா. அப்பேர்ப்பட்ட இடத்தை தனது நேர்த்தியான பேட்டிங் மற்றும் மிகச்சிறந்த பொறுமையாலும் நிரப்பியவர் புஜாரா.

    ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக தீவிரமாக தயாராகிவரும் புஜாரா, பாட் கம்மின்ஸ் பவுலிங்கை எதிர்கொள்வது மிகக்கடினம் என்று கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் அவுட்டாகும்போது மட்டும்தான் கோபப்படுவேன். அவுட்டாகும்போது நான் உச்சபட்ச கோபமடைவேன். ஒவ்வொரு முறை அவுட்டாகும்போதும் எனக்கு கோபம் வரும். ஆஸ்திரேலியாவில் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை எதிர்கொள்வது மிகக்கடினமாக இருக்கும்.

    என்று புஜாரா கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ், சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணிக்காக 47 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 214 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • இந்தியாவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அத்தொடரில் நிச்சயமாக இடது கை ஸ்பின்னர் ஆஸ்டன் அகர் இருப்பார்.
    • கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருப்பது இந்தியாவுக்கு நல்ல சவாலை கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை 2 - 0 (3) என்ற கணக்கில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சொல்லப்போனால் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெறும் வாய்ப்பை ஆஸ்திரேலியா 90% உறுதி செய்துள்ளது.

    இந்நிலையில் தென்னாபிரிக்காவை தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் உள்ள ஆஸ்திரேலியா இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முயற்சிக்கவுள்ளது.

    சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா 2012-க்குப்பின் கடந்த 10 வருடங்களாக எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை.

    இந்நிலையில் கடந்த வருடம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் விளையாடிய அனுபவம் தற்போதுள்ள ஃபார்ம் ஆகியவற்றை பயன்படுத்தி இம்முறை நிச்சயமாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

    இது பற்றி அத்தொடரில் வென்ற பின் அவர் பேசியது பின்வருமாறு:-

    நாம் எப்போதும் இருக்கப் போவதைப் போலவே எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்த கோடைகாலம் நமக்கு அற்புதமாகவே அமைந்தது. மேலும் இந்த வெற்றியால் நாங்கள் சூழ்நிலைக்கு உட்படுத்திக் கொள்ளும் திறமையை பெற்றுள்ளோம் என்று உணர்கிறேன்.

    அத்துடன் கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருப்பது உண்மையிலேயே இந்தியாவுக்கு நல்ல சவாலை கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அங்கு நாங்கள் ஒண்ணும் கண்ணை மூடிக்கொண்டு போகப் போவதில்லை. குறிப்பாக அடுத்த 12 மாதங்களில் எப்படி விளையாட பார்க்கிறோம் என்பதை பிரதிபலிக்க அடுத்த சில வாரங்களில் தேவையான முடிவுகளையும் புத்துணர்ச்சிகளையும் எடுக்க உள்ளோம்.

    மேலும் இந்தியாவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அத்தொடரில் நிச்சயமாக இடது கை ஸ்பின்னர் ஆஸ்டன் அகர் இருப்பார். அவரை மேற்கொண்டும் சோதித்து பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் இத்தொடரில் 800 ரன்கள் அடித்த போதும் அவர் சிறப்பாக பந்து வீசினார்.

    அவரைப் போன்றவருக்கு அது எளிதல்ல என்றாலும் அவர் தன்னுடைய வேலையில் சிறப்பாக செயல்பட்டார். மேலும் அங்கு (இந்தியாவில்) மைதானங்கள் சற்று வெடிப்பாகவும் மற்றும் அதிகமாக சுழலும் என்று நம்புகிறேன். அதே சமயம் இந்தியாவில் எப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்காத பிட்ச்களும் இருக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆஸ்திரேலியாவின் ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக உள்ளார் கம்மின்ஸ்
    • அடுத்த 12 மாதங்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். இவர் டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டனாக உள்ளார். தற்போது பிஞ்ச் ஓய்வு கேட்டுள்ளதால் வரவிருக்கும் தொடர்களில் ஒயிட் பால் அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

    டி20 உலகக் கோப்பை முடிந்துள்ள நிலையில், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் கவனம் செலுத்த முன்னணி அணிகள் தொடங்கிவிட்டன.

    இதற்கிடையில் அடுத்த வருடம் ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன் இன்றுடன் 10 அணிகளும், தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும், ரிலீஸ் செய்யும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்.

    இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பேட் கம்மின்ஸ், 2023 ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ''அடுத்த வருட ஐ.பி.எல். தொடரை தவற விடுகிறேன் என்ற கடினமான முடிவை அறிவிக்கிறேன். அடுத்த வருடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வர இருக்கிறது. ஆஷஸ் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட இருப்பதால் அதற்கு போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், ''கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எனது சுமை குறித்து புரிந்து கொண்டதற்கு நன்றி. திறமையான வீரர்கள், ஸ்டாஃப்களை கொண்ட அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்று நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    1. ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக வருகிற 17-ந்தேதி முதல் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    2. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    3. பிப்ரவரி- மார்ச்சில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில விளையாடுகிறது.

    4. மார்ச்சில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    5. ஜூன்-ஜூலையில் இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது.

    6. அதன்பின் தென்ஆப்பிரிக்கா சென்று ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    7. அதன்பின் இந்தியாவில் மூன்று ஒருநாள், ஐந்து டி20 களில் விளையாடுகிறது.

    8. அதனைத் தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    • கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
    • சக ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டார்க், ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், நாதன் லயன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    29 வயதான அவர் பிரிட்டிஷ் நாட்டில் பிறந்த 31 வயதான பெக்கி பாஸ்டன் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2020-ல் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    நியூ சவுத் வேல்ஸில் உள்ள பைரான் பே எனும் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் திருமண விழா நடைபெற்றுள்ளது. இதில் கம்மின்ஸ் உடன் கிரிக்கெட் விளையாடி வரும் சக ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டார்க், ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், நாதன் லயன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    கம்மின்ஸ், தனது திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் மீண்டும் ஜம்பா இணைந்துள்ளார்.
    • ஆஷ்டன் அகர், சீன் அபோட் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    ஆஸ்திரேலியா அணி ஆகஸ்டு மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அதை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கு எதிரான ஆஸ்திரேலியா ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டது.

    இதில் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெறவில்லை. அவரது மனைவிக்கு குழந்தை பிறந்த காரணத்தால் அந்த தொடரில் இருந்து விலகினார்.

    இந்நிலையில் நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் மீண்டும் ஜம்பா இணைந்துள்ளார். அதே நேரத்தில் ஆஷ்டன் அகர், சீன் அபோட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்ற மிட்செல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்கிலிஸ், ரிச்சர்ட்சன் மற்றும் மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் இந்த அணியில் இடம் பெறவில்லை.

    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஸ்மித்தை ஆஸ்திரேலிய தேர்வு குழு நியமித்துள்ளது.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சக பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியில் தகவல் அனுப்பிய புகாரில் அவர் பதவி விலகினார். 

    ஆசஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் டிம் பெய்ன் பதவி விலகியதால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 28 வயதான கம்மின்ஸ் ஏற்கனவே துணை கேப்டனாக பணிபுரிந்து உள்ளார். முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், டென்னிஸ் லில்லி, ஸ்டீவ்வாக் ஆகியோர் அவரை வெகுவாக பாராட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. துணை கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். 

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. முதல் போட்டி வருகிற 8-ந் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

    மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. ஜனவரி 18-ந் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சக பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியில் தகவல் அனுப்பிய புகாரில் அவர் பதவி விலகி உள்ளார்.

    4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுக்காக டிம் பெய்ன் கேப்டன் பதவியை தற்போது இழந்துள்ளார். அவர் குறித்த தகவல்கள் வெளியானதால் இது இந்த முடிவை எடுத்துள்ளார்.

    ஆசஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் டிம் பெய்ன் பதவி விலகி உள்ளதால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. முதல் போட்டி வருகிற 8-ந் தேதி பிரிஸ்பனில் தொடங்குகிறது.

    மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. ஜனவரி 18-ந் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், டென்னிஸ் லில்லி, ஸ்டீவ்வாக் ஆகியோர் அவரை வெகுவாக பாராட்டி இருந்தனர்.

    இதனால் டிம் பெய்ன் இடத்தில் கம்மின்ஸ் கேப்டன் ஆகிறார். 28 வயதான அவர் ஏற்கனவே துணை கேப்டனாக பணிபுரிந்து உள்ளார். இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலிய தேர்வுகுழு புதிய கேப்டனை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    மெல்போர்ன் டெஸ்டில் 6 ரன்களுக்குள் புஜாரா, விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா ஆட்டமிழந்து 72 வருடகால மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது. 292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து 3-வது வீரராக களம் இறங்கிய புஜாரா (0), 4-வது வீரராக களம் இறங்கிய விராட் கோலி (0), 5-வது வீரராக களம் இறங்கிய (1) ரகானே, 6-வது வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா (5) ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ரோகித் சர்மாவைத் தவிர மற்ற மூன்று பேரையும் கம்மின் 6 பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வீழ்த்தினால். இதில் விராட் கோலி, ரகானேவை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.



    கடந்த 25 வருடங்களாக இப்படி 3 முதல் 6-ம் நிலை வரை களம் இறங்கும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது கிடையாது. நான்கு பேரும் சேர்ந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் குறைவாக பெற்ற ரன்கள் என்று கடந்த 72 ஆண்டு காலமாக இருக்கும் மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர்.

    இதற்கு முன் 1946-ல் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் (3 முதல் 6 வரை) 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர். அதன்பின் தற்போதுதான் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.



    1969-ல் ஐதராபாத்தில் நியூசிலாந்திற்கு எதிராக 9 ரன்களும், 1983-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 9 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்துள்ளனர்.
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விராட் கோலி, புஜாரா, ரகானேவை சாய்த்தார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது.

    292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஜோடியான ஹனுமா விஹாரி - மயாங்க் அகர்வால் 12-வது ஓவர்கள் தாக்குப்பிடித்தனர்.

    கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த புஜாரா கம்மின்ஸ் வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ரன்ஏதும் எடுக்காமல் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் ரகானே 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்தியாவின் நட்சத்திர வீரர்களான புஜாரா, விராட் கோலி, ரகானே ஆகியோரை ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வெறும் 6 பந்தில் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் 28 ரன்கள் வரை விக்கெட் ஏதும் இழக்காத இந்தியா 32 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து வந்த ரோகித் சர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் 292 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
    மைதானத்தில் மோதல் போக்கை கடை பிடிக்க மாட்டேன் என்று விராட்கோலி கூறியதற்கு ஆஸ்திரேலிய வீரர் கும்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். #AUSvIND #Cummins #ViratKohli
    மெல்போர்ன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 20 ஓவர் தொடர் நாளை மறுநாள் (21-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்த தொடரில் இந்தியா- ஆஸ்திரேலிய வீரர்கள் இடையே ஆடுகளத்தில் உசுப்பேற்றி வாக்குவாதம் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    கோலியிடம் மோதல்போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருந்தால் சாதிக்கலாம் என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபெலிசிஸ் அறிவுரை வழங்கி இருந்தார்.

    விராட்கோலி இது தொடர்பாக கூறும்போது, மோதல் போக்கை தான் முதலில் கடைபிடிக்க போவதில்லை என்று கூறி இருந்தார்.

    இதற்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் கும்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். மைதானத்தில் அமைதியாக இருந்தால்தான் ஆச்சரியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    மோதல் போக்கை கடை பிடிக்க மாட்டேன் என்று விராட்கோலி தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறு இருந்தால்தான் ஆச்சரியம். அவர் சிறந்த போட்டியாளராக திகழ்கிறார். நாங்கள் போட்டி மனப்பான்மையோடு ஆடுவோம்.

    கோலியை வித்தியாசமாக கருத மாட்டோம். இதற்கு முன்பு நேரிட்டதுபோல் எதுவுமே நடக்காது. எங்கள் டெஸ்ட் அணி ஒன்று கூடியதும், எப்படி விளையாடுவது, தனி நபர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதற்காகவே இருக்கும்.

    இவ்வாறு கும்மின்ஸ் கூறியுள்ளார். #Cummins #ViratKohli
    ×