search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "order"

    • புதுக்கோட்டை பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
    • மழைக்காலங்க ளில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூ டிய மாவட்ட அவசரக் கட்டுபாட்டு அறை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள பேரிடர்மேலாண்மை அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர்மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர்மாவட்ட கலெக்டர் கூறும்போது:-இந்த ஆய்வின்போது, மழை அளவின் பதிவேடு களையும், மழையினால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்புகள், கட்டட இடிமானங்கள் உள்ளிட்ட வைகளின் விவரங்களையும் கேட்டறியப்பட்டது.மேலும் இதுபோன்ற பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தீவிர மழைக்காலங்களில் பொது மக்களை பேரிடர்க ளிலிருந்து காப்பாற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இந்நிலையில் பேரிடர்மே லாண்மை அலுவலகத்தின் அலைபேசிக்கு உதவி கோரி வரும் அழைப்புகளை உரிய முறையில் பரிசீலனை செய்து, விரைவாக நட வடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது.இடிந்துவிழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக எவ்வித இடையூறும் ஏற்ப டாத வகையில் அப்புறப்ப டுத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக 10 - பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார்நிலையில் உள்ளன.மேலும், மழைக்காலங்க ளில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூ டிய மாவட்ட அவசரக் கட்டுபாட்டு அறை எண் - 1077, 04322-222207 ஆகிய கட்டணமில்லா தொலை பேசி எண்களைதொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க லாம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது, தனிவட்டாட்சி சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர்உடனிருந்தனர்.

    • பட்டா வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது.
    • இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    மதுரை

    மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளை யில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருப்பதாவது:-

    மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம் போக்கு இடத்தில் பல வரு டங்களாக வசித்து வருவதா கவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுப்பணி துறை யினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந் தது. அப்போது அரசு தரப் பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்த ரவில், நீர் நிலையை ஆக்கி ரமித்து செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறு வது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடி யாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் அரசு ஆவணங்க ளின்படி, புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பொதுப்பணித்து றையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை யும் சட்ட விதிகளுக்கு உட் பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • தி கிட் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • இதைஎழுதி, இயக்கி, நடித்ததோடு, சார்லி சாப்ளினே இசையமைத்துள்ளார்.

    திருப்பூர்:

    நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் குழந்தைப்பருவ அனுபவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட, தி கிட் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அரசு, உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்பனைத்திறனை மேம்படுத்தவும், கலை ஆர்வத்தை தூண்டி, தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையிலும், மாதந்தோறும் ஒரு சிறார் திரைப்படம் திரையிடப்படுகிறது.

    திரைப்படம் முடிந்த பிறகு மாணவர்களை குழுவாக அமர வைத்து, திரைப்படத்தின் மையக்கரு, பிடித்த கதாபாத்திரம் எது, குறிப்பிட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்தல், படத்தின் முடிவை மாற்றி அமைத்தல் குறித்து விவாதிக்க வைக்க வேண்டும். திரைப்படம் குறித்து மாணவர்கள் கலந்துரையாடியதை அறிக்கையாக தொகுத்து, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது.

    1921ல் வெளியான இத்திரைப்படம், நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் குழந்தைப்பருவ அனுபவங்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட மவுன திரைப்படம்.இதைஎழுதி, இயக்கி, நடித்ததோடு, சார்லி சாப்ளினே இசையமைத்துள்ளார். ஐக்கிய மாகாணங்களின் தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாக்கப்பட்டு வரும் இத்திரைப்படம் குழந்தைகளின் கற்பனைத்திறனை மேலும் விரிவாக்கும். 

    • உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
    • அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜாஸ்மின். இவரது வீட்டில் கியாஸ் சிலிண்டர் காலியானது.

    இதனையடுத்து ஜாஸ்மின் ஆன்லைன் மூலம் பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகலில் தயிர்சாதம், சாம்பார் சாதம், பேபி கார்ன் ஆகியவற்றை ஆர்டர் செய்தார்.

    பின்னர் உணவு வந்து சேர்ந்தது. அவருக்கு வந்த உணவை அவரும் அவரது குழந்தையும் சாப்பிட தொடங்கினர். திடீரென உணவில் டீ தூள் போன்று பொட்டலம் ஒன்று ஸ்பூனில் தட்டுப்பட்டது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாஸ்மின் அதனை எடுத்துப் பார்த்தார். அப்போது அது கூல் லீப் எனப்படும் புகையிலை என்பது தெரியவந்தது.

    இதனை பார்த்து ஜாஸ்மின் அதிர்ச்சியடைந்தார். உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடடினயாக அவர் 108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருந்தது.

    உணவில் புகையிலை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு 10 முறைக்கும் மேல் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.

    ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இது போன்று அலட்சியமாக உணவு விநியோகம் செய்யும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த தகவல் வெளியானதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தராஜன் தலைமையிலான அதிகாரிகள் புகையிலை கலந்த உணவை கொடுத்த உணவகத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது கடையில் சுகாதாரமற்ற முறையில் பணியாற்றிய ஊழியர்களிடம் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணியுமாறும், கடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினர்.

    மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வினியோகிக்கப்பட்ட உணவில் புகையிலை எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரித்தனர்.

    மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுதவிர கடையின் உரிமையாளருக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் கூறும்போது, சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டோம். உணவில் புகையிலை எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக நோட்டீசும் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் நிர்வாகத்தின் விளக்கத்திற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    • திரைப்படம் வழியே, விலங்குகள், தாவரங்கள், சூழலை பாதுகாப்பதன் அவசியம், பங்களிப்பு முறை குறித்து, குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
    • திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், கதாபாத்திரங்கள் குறித்து விவாதித்து அறிக்கை வடிவில் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருப்பூர்: 

    கானுயிர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான, தி ஜங்கிள் கேங் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிடுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும், கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் சர்வதேச, தேசிய விருதுகள் பெற்ற சிறந்த சிறார் திரைப்படங்கள், மாதந்தோறும் திரையிடப்படுகின்றன. இம்மாதத்திற்கான திரைப்படமாக 2012ல் தமிழில் வெளியான, தி ஜங்கிள் கேங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, பதிவிறக்குவதற்கான லிங்க் பள்ளி எமிஸ் இணையதளத்தில் அனுப்பப்பட்டுள்ளது.

    இப்படத்தில் அனிமேஷன் கதாபாத்திரங்களான கருப்பு மான், வாத்து, தேவாங்கு ஆகியவை தங்கள் பயணத்தை வடகிழக்கு இந்தியாவில் இருந்து துவங்கி, மத்திய பகுதி வழியாக தென்னிந்தியாவை வந்தடைகின்றன.கதையில் காண்டாமிருகம், புலி, யானை, கரடி போன்ற விலங்குகளின் தகவல்கள் குழந்தைகளுக்கு புரியும் வகையில் சொல்லப்பட்டுள்ளன.

    திரைப்படம் வழியே, விலங்குகள், தாவரங்கள், சூழலை பாதுகாப்பதன் அவசியம், பங்களிப்பு முறை குறித்து, குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.பல்வேறு விருதுகளை குவித்த இப்படத்தை பள்ளிகளில் திரையிடுவதோடு மாணவர்களை குழுக்களாக பிரித்து, திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், கதாபாத்திரங்கள் குறித்து விவாதித்து அறிக்கை வடிவில் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அக்டோபர் மாதத்தில் காலாண்டு தேர்வு, விடுமுறை அறிவிக்கப்பட்டு குறைந்த நாட்களே பள்ளி இயங்கியதால், நவம்பர் முதல் வாரத்திற்குள் இப்படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காட்டுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கழிவுநீரை மனிதர்களை வைத்து அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சாக்கடை இறப்புகள் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டுகள் கண்காணிப்பதில் தடை இல்லை.

    புதுடெல்லி:

    கழிவுநீரை மனிதர்கள் அகற்றுவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடந்தது. இன்று வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்து தீர்ப்பு வழங்கினர்.

    சாக்கடைகளில் கழிவுநீரை அகற்றும் போது தொழிலாளி உயிரிழந்தால் அவரது குடும்பங்களுக்கு குறைந்தது ரூ.30 லட்சம் நிவாரணம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்க வேண்டும்.

    கழிவுநீர் அகற்றும் போது தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்து நிரந்தரமாக உடல் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடாக குறைந்தது ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். தொழி லாளிக்கு மற்ற குறைபாடுகள் ஏற்பட்டால் ரூ.10 லட்சம் வரை வழங்க வேண்டும்.

    இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு அமைப்புகள் ஒருங்கிணைக்க வேண்டும். கழிவுநீரை மனிதர்களை வைத்து அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடை இறப்புகள் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டுகள் கண்காணிப்பதில் தடை இல்லை.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் சாக்கடை மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் போது 347 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • துணை தலைவரின் இரண்டாமிடம் கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்தார்.
    • ஒருமித்த கருத்து நிலவாததால் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெற வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    காரைக்குடி

    கடந்த கிராமப்புற உள் ளாட்சி தேர்தலில் சிவ கங்கை மாவட்டம் சங்கராபு ரம் ஊராட்சியில் தேவி மாங்குடி மற்றும் பிரியதர் ஷினி அய்யப்பன் ஆகியோர் வெற்றி பெற்றதாக சான்றி தழ் வழஙகப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தேவி மாங்குடி தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, உயர்நீதி மன்றம் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம தீர்ப்பின்படி தேவிமாங்குடி ஊராட்சி மன்ற தலைவராக பொறுப் பேற்றார்.

    இதனிடையே பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்த பாண்டியராஜன் உள் பட சில உறுப்பினர்கள் ஒரு தரப்பாகவும், தேவிமாங் குடி உள்பட சில உறுப்பி னர்கள் ஒரு தரப்பாகவும் செயல்பட்டு வந்தனர். இவர்களிடையே ஒருமித்த கருத்து நிலவாததால் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெற வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட முடி யாத நிலை இருந்து வந்ததும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே துணை தலைவரின் இரண்டாமிடம் கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்தார். அதனை எதிர்த்து துணைத் தலைவர் பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கு நிலுவை யில் இருந்து வருகிறது.

    கையெழுத்திடும் அதிகாரத்தை நிறுத்தி வைத்த உத்தரவு காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மழைக் காலம் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அத்தியா வசிய பணிகளை மேற் கொள்ளவும், ஊழியர்க ளுக்கு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொள்ள ஏது வாக தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 203-ன் படி மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளரின் அவசரகால அதிகாரங்களின்படி அடிப் படை நிர்வாகம் செயல்பட ஏதுவாக சிற்றுராட்சிகளின் மீது விதிக்கப்பட்ட கடமைக ளில் முதல் நிலை கையொப் பமிட ஊராட்சிமன்ற தலை வருக்கு பதிலாக வட்டார வளர்ச்சி அலுவல ருக்கும் (கிராம ஊராட்சி), இரண்டா மிடம் கையொப்ப மிட ஊராட்சிமன்ற துணை தலைவருக்கு பதிலாக சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தற்காலிக மாக அனுமதி அளித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தர விட்டுள்ளார்.

    • ஏரிகளின் மதகுகளை விரைந்து சீரமைக்க பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்
    • பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழுமத்தூர் ஏரியினை கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கிழுமத்தூர், ஓகளுர், கை.பெரம்பலூர் ஆகிய 3 ஏரிகளுக்காக நபார்டு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3 கோடி மதிப்பீட்டில் மதகுகள் புதுப்பித்து சீரமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும், என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஆய்க்குடி ஏரியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் உட்புறம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் மதகுகள் புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும், என்று சம்பந்தப்பட்ட உத்தரவிட்டார். ஆய்வின் போது நீர்வளத்துறை மருதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் தினகரன், குன்னம் தாசில்தார் அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • தமிழ்நாடு தூய்மைபணியாளர் நலவாரிய உறுப்பினர் மோகன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 714 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர் நல வாரியத்தின் கீழ் 1 நபருக்கு தூய்மை பணியின் போது ஒரு கை பாதிப்படைந்த நிலையில் நலவாரியத்தின்கீழ் நிவாரண நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் 8 தூய்மைபணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஆணைகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்டஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட மேளாலர் (தாட்கோ) ரஞ்சித்குமார், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் சங்க உபதலைவர் கனிமொழி பத்மநாபன், தமிழ்நாடு தூய்மைபணியாளர் நலவாரிய உறுப்பினர் மோகன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று, 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுகிறது.
    • சொந்த போனில், ஆசிரியர்களே இணையதள கட்டணம் செலுத்தி ஆன்லைன் தேர்வு நடத்தி வருகிறோம்.

    திருப்பூர்:

    கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்ட கற்றல் இடைவெளி போக்க எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது.வரும் 2025 வரை, இந்த சிலபஸ் அடிப்படையில் தான் பாடம் கையாளப்படும். 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை, அரும்பு, மொட்டு, மலர் என 3 வகையினராக பிரித்து பாடம் நடத்தப்படுகிறது.

    வினாத்தாள் பிரத்யேகமாக வடிவமைத்து, மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப அவர்களின் கற்றல் நிலை பரிசோதிக்கப்படுகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று, 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுகிறது.

    ஒவ்வொரு மாணவருக்கும் வெவ்வேறு வகை வினாத்தாள் திரையில் தோன்றும். இதை ஆசிரியர்கள் உதவியோடு விடையை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். இத்தேர்வு ஆசிரியர்களின் மொபைல் போன் மூலமாக நடத்தப்படுகிறது. அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் வாராந்திர தேர்வு வெள்ளிக்கிழமை துவங்கி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை தொடருகிறது.சர்வர் குளறுபடி, நெட்வொர்க் சிக்கல் இல்லாமல் இருந்தால் மட்டுமே, இருநாட்களில் அனைத்து மாணவர்களும் ஆன்லைனில் தேர்வை முடிக்க முடியும்.மீதமுள்ள நாட்களில் வகுப்பு கையாள்வதோடு, அதிக வகுப்பு செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக, ஆசிரியர்கள் தரப்பில் தொடர் புகார்கள் எழுந்தன.

    இதைத்தொடர்ந்து, மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் இரண்டாம் பருவத்தில் இருந்து இருவாரத்திற்கு ஒருமுறை ஆன்லைன் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், வாரத்தில் அதிகபட்சம் 3 நாட்கள் வரை, ஆன்லைன் தேர்வு நடத்திவிட்டு மீதமுள்ள நாட்களில் மட்டுமே பாடம் கையாள வேண்டியிருக்கிறது. ஒரே நாளில் ஆன்லைன் தேர்வு நடத்துமளவுக்கு கம்ப்யூட்டர்களோ, டேப்லெட் போன்ற எந்த உபகரணங்களும், தொடக்கப்பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.சொந்த போனில், ஆசிரியர்களே இணையதள கட்டணம் செலுத்தி ஆன்லைன் தேர்வு நடத்தி வருகிறோம்.

    இதுகுறித்து தொடர்ச்சியாக ஆசிரியர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் தற்போது இருவாரத்திற்கு ஒருமுறை ஆன்லைன் தேர்வு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றனர்.

    • கடன் தொகை கட்டி முடிந்தவருக்கு, மீண்டும் பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி
    • அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள இரவாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 50). கடந்த 2020-ம் ஆண்டு இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் வங்கி கிளையை அணுகி ரூ.53 ஆயிரத்திற்கு வாகன கடன் வாங்கினார். வங்கி கூறியப்படி இதை வட்டியுடன் மாதம் ரூ.2,800 வீதம் 24 தவணைகளாக அவர் திரும்ப செலுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த 2022-ம் வருடம் ஆகஸ்ட் 20-ந்தேதி, ரத்தினசாமிக்கு வங்கி தரப்பில் அனுப்பட்ட அறிவிப்பில் மொத்தம் 31 தவணைகள் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள தொகை 19 ஆயிரத்து 838 ரூபாயை, உடனடியாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அதே வருடம் அக்டோபர் மாதம் 10-ந்தேதி அன்று வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட மற்றொரு அறிவிப்பில் ரூ.20 ஆயிரத்து 708 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.அனைத்து தவணைகளையும் செலுத்தி விட்ட நிலையில் இவ்வாறு அறிவிப்புகள் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரத்தினசாமி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த மே மாதம் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்து வந்த ஆணையத் தலைவர் தமிழச்செல்வி மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் கொண்ட அமர்வு புதன்கிழமை தீர்ப்பளித்தது.அதில் தனியார் வங்கி, ரத்தினசாமிக்கு 30 நாள்களுக்குள் தடையில்லாச் சான்று வழங்க வேண்டும் என்றும், சட்டவிரோத வர்த்தக நடைமுறையைக் கடைப்பிடித்தற்கு நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரமும், வழக்குச்செலவாக ரூ.5 ஆயிரமும் ரத்தினசாமிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • குற்ற சம்பவங்கள் நடக்கும் முக்கியமான வீதி பகுதி மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.
    • காவலர்களை கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பொன்னேரி:

    ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர். இவர் மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் பஜார் வீதி, அத்திப்பட்டு, அத்திப்பட்டு புது நகர் பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள புறக்காவல் நிலையத்தை பார்வையிட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அதிக குற்ற சம்பவங்கள் நடக்கும் இடங்களை கமிஷனர் சங்கர் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குற்ற சம்பவங்கள் நடக்கும் முக்கியமான வீதி பகுதி மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பழுதான கேமராக்களை அகற்றி புதிய கேமராக்கள் பொருத்த வேண்டும். போக்கு வரத்திற்கு இடையூறாக சாலையில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். காவலர்களை கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழவேற்காடு மீஞ்சூர் நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் மாடுகள் காணப்படுவதால் அதிகமாக விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதால் முதலாவதாக மாட்டின் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு பின்னர் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் ராஜராபர்ட், போக்குவரத்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி, உதவி ஆணையர் மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் சோபிதாஸ்,மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் முத்துக்குமார் உடன் இருந்தனர்.

    ×