search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவு
    X

    ஆபத்தான பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவு

    • புதுக்கோட்டை பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
    • மழைக்காலங்க ளில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூ டிய மாவட்ட அவசரக் கட்டுபாட்டு அறை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள பேரிடர்மேலாண்மை அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர்மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர்மாவட்ட கலெக்டர் கூறும்போது:-இந்த ஆய்வின்போது, மழை அளவின் பதிவேடு களையும், மழையினால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்புகள், கட்டட இடிமானங்கள் உள்ளிட்ட வைகளின் விவரங்களையும் கேட்டறியப்பட்டது.மேலும் இதுபோன்ற பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தீவிர மழைக்காலங்களில் பொது மக்களை பேரிடர்க ளிலிருந்து காப்பாற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இந்நிலையில் பேரிடர்மே லாண்மை அலுவலகத்தின் அலைபேசிக்கு உதவி கோரி வரும் அழைப்புகளை உரிய முறையில் பரிசீலனை செய்து, விரைவாக நட வடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது.இடிந்துவிழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக எவ்வித இடையூறும் ஏற்ப டாத வகையில் அப்புறப்ப டுத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக 10 - பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார்நிலையில் உள்ளன.மேலும், மழைக்காலங்க ளில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூ டிய மாவட்ட அவசரக் கட்டுபாட்டு அறை எண் - 1077, 04322-222207 ஆகிய கட்டணமில்லா தொலை பேசி எண்களைதொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க லாம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது, தனிவட்டாட்சி சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர்உடனிருந்தனர்.

    Next Story
    ×