search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ooty"

    • சாலை மிகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்
    • சாலை மிகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் நகராட்சியில் உள்ள வாழவயல் குடோன் பகுதியில் இருந்து ஆஷிக் அய்யா வீடு வரை செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாக போடப்படாமல் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் அவசர கால தேவைகளுக்காக ஆஸ்பத்திரிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். நெல்லியாலம் நகராட்சியில் தொடர்ந்து சாலையை சீரமைக்க மனு அளித்தும் இதுவரை சாலையை சீரமை க்காமல் காலம் தாழ்த்தி வருவதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் கிராம மக்கள் முடிவு எடுத்து குண்டும் குழியுமாக உள்ள 100 மீட்டர் சாலையை ஒவ்வொரு வீடாக பணம் வசூல் செய்து கான்கிரீட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது பள்ளிகள் தொடங்க உள்ளது. மேலும் பருவமழை தொடங்க உள்ளதால் சாலை மிகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவே கிராமத்தினரே சொந்த பணத்தை வைத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நெல்லியாளம் நகராட்சியிடம் சாலை போடுவதற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. அதனால் தங்கள் சொந்த பணத்தை வைத்து சாலையை புதிதாக அமைத்துள்ளோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.
    • பொதுமக்கள், ஊழியர்கள் பிளாஸ்டிக்கை ஒழிக்க உறுதிமொழி ஏற்றனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு ஜெகதளா பேரூராட்சியில் தீவிர தூய்மை பணி திட்டத்தில் குடியிருப்பு பகுதி, சிறு குடியிருப்பு பகுதி, தொழிற்சாலை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மருத்துவக் கழிவுகள் கட்டிடக்கழிவுகள் போன்றவற்றை பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பொதுமக்களுடன் இணைந்து தூய்மை செய்தனர்.

    மேலும் தூய்மை மக்கள் இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி அருவங்காடு பஸ் நிலையத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், துணை தலைவர் ஜெய்சங்கர், மற்றும் செயல் அலுவலர் சதாசிவம், 7-வது வார்டு உறுப்பினர் யசோதா, 9-வது மரியராஜன், 12-வது வார்டு உறுப்பினர் மோசஸ், 4-வது வார்டு உறுப்பினர் ஆஞ்சலின், 14-வது வார்டு உறுப்பினர் ராஜலட்சுமி, மற்றும் அலுவலக அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஆகியோர் என் நகரத்தை நாங்கள் தூய்மையாக வைத்துக் கொள்வோம் என உறுதிமொழி ஏற்றனர். மீண்டும் மஞ்சப்பை, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்போம் போன்ற உறுதி மொழி எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர்.
    • சுற்றுலாபயணிகள் வருகை மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.

    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.

    அதன்படி, இந்த ஆண்டு மே 6-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா ஆரம்பமானது. தொடர்ந்து, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் 125-வது மலர்க் கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.

    மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர். ரோஜா கண்காட்சியை 50 ஆயிரம் பேரும், பழக் கண்காட்சியை சுமார் 25 ஆயிரம் பேரும் கண்டு ரசித்துள்ளனர்.

    தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும் போது, இந்தாண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் 8 லட்சத்து 61 ஆயிரத்து 214 சுற்றுலாபயணிகள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.

    ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 752 பேரும், மே மாத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 283 பேரும், மலர் கண்காட்சியின் போது 1 லட்சத்து 30 ஆயிரத்து 179 சுற்றுலாபயணிகளும் வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1 லட்சத்து 27 ஆயிரத்து 161 சுற்றுலாபயணிகள் அதிகம் வருகை தந்துள்ளனர் என்றனர்.

    இந்நிலையில், சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்டாட்சியர் துரைராஜ் தலைமை வகித்தார். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

    • தேயிலை கண்காட்சியை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்க வேண்டும்
    • தேயிலையை சுடுதண்ணீரில் போட்டு அதன் சுவையை ருசித்து பார்த்தனர்.

    குன்னூர், மே.22-

    குன்னூர் தென்னிந்திய தேயிலை வாரியம், தமிழக சுற்றுலாத்துறை, தமிழகத் தோட்டக்கலைத் துறை, இன்கோசர்வ் சார்பில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 நாட்கள் தேயிலை கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த தேயிலை கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். தேயிலை கண்காட்சியில் பொதுமக்கள் எது உண்மையான சரியான தேயிலை அந்த தேயிலையின் தரம், ருசி அதனுடைய வண்ணம் தரம் எப்படி உள்ளது.

    தேயிலையை எந்த நிறத்தில் வந்தால் அது கலப்பட தேயிலை என்று அறியும் வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்முறையும் காண்பிக்கப்பட்டது. இந்த செயல்முறையை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து தேயிலை தரத்தையும் அதன் சுவையையும் ருசித்துப் பார்த்து தெரிந்து கொண்டனர்.

    இதில் முக்கிய அம்சம் சிறுமிகளுக்கு தேயிலையை சுடுதண்ணீரில் போட்டு அதன் சுவையை ருசித்து பார்த்து என்ன மாதிரி சுவை உள்ளது என்பது சரியாக சொன்னால் சொல்லிய சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தேயிலை கலப்படம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளதாக சுற்றுலா பயணிகள் பாராட்டினர். மேலும் இந்த தேயிலை கண்காட்சியை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்தியாவின் பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் ஊட்டி குறிப்பிடத்தக்கது.
    • 3 பெரிய எல்.இ.டி மரங்கள் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன.

    ஊட்டி, மே.22-

    இந்தியாவின் பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் ஊட்டி குறிப்பிடத்தக்கது. இங்கு கோடைக்காலத்தில் தட்பவெப்பநிலை மிகவும் இதமாக இருக்கும். அதுவும் தவிர ஊட்டியில் உள்ள பச்சைப்பசேல் இயற்கை காட்சிகள், காட்சிமுனையம், பிரையண்ட் பூங்கா மற்றும் படகு சவாரி ஆகியவை கண்களுடன் கருத்தையும் கவர்ந்து இழுக்கும். எனவே கோடைக்காலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஊட்டியில் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தண்டர் வேர்ல்டு- குளோ கார்டன் எனும் ஒளிரும் பூங்கா ஊட்டியில் வடக்கு ஏரி சாலையில் அமைந்துள்ளது.

    இதனை இந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் வின்சென்ட் அடைக்கலராஜ் திறந்து வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே முதல்முறையாக குளோ கார்டன் என்னும் ஒளிரும் பூங்கா 50க்கும் மேற்பட்ட ஜொலிக்கும் மலர்கள் மற்றும் 3 பெரிய எல்.இ.டி மரங்கள் ஆகியவை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன.

    மலர்களின் வண்ணமயமான வடிவங்களை காண்பிக்கும் வகையில் எல்இடி மரத்தில் 4கே ரெசல்யூஷன் கொண்ட பிரம்மாண்ட திரை ஒன்றும் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பூங்காவுக்கு வருகை தரும் அனைவரது பார்வைக்கும் இது விருந்தாக அமையும். 1.50 ஏக்கர் பரப்பளவில் 50க்கும் மேற்பட்ட ஒளிரும் மலர் செடி வகைகள் இங்கு உள்ளன. மேலும் 10 மீட்டர் உயரமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட 3 பெரிய எல்இடி ஒளிரும் மரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கணினி தொழில்நுட்பத்தில் 54 வண்ணங்களின் கலவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்கவர் மலர் வடிவங்களை திரையிடும் திறனுடன் இந்த எல்இடி ஒளிரும் மரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

    இந்த குளோகார்டன் பூங்காவின் நுழைவு வாயில் 1000 அடி அளவிலான எல்இடி மேட்ரிக்ஸ் புரோபைல் முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்கவரும் வடிவங்களை காண்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனது. இதனை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர்.

    • ஊட்டியில் உள்ள பெரு ம்பாலான விடுதிகளில் தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.
    • விலை உயர்வால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ஊட்டி

    சமவெளி பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைப்பதாலும், ஊட்டியில் தற்போது கோடை விழா தொடங்கப் பட்டுள்ளதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.

    இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் தங்கி பல்வேறு இடங்களை பாா்வையிட்டு வருகின்றனா்.இந்நிலையில், ஊட்டியில் உள்ள பெரு ம்பாலான விடுதிகளில் தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

    சாதாரண விடுதிகளில் ஒருநாள் அறை கட்டணம் ரூ. 1,800-இல் இருந்து ரூ. 2,700 ஆகவும், சிறப்பு வசதிகளுடன் கூடிய அறை கட்டணம் ரூ.2,300இல் இருந்து ரூ.3,000 ஆகவும், காட்டேஜ்களின் கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து சற்றுலா பயணிகள் கூறுகையில், ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ள நிலையில், வார விடுமுறை நாட்களில் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வும், கடந்த 2 ஆண்டுகளாக இல்லாத அளவில் தற்போது கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

    இதனால் அவதி யடைந்து வருகிறோம். இதுதவிர உணவு பொருட்க ளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே விடுதி கட்டணங்களை முறைபடுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்ததால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், யானைகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ஊட்டி;

    நீலகிரி பந்தலூர், பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2 பாலவாடி குடியிருப்பு பகுதிகளில் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். நேற்று அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்தது.

    இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், யானைகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது ஒரு யானை மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சைகொல்லி செல்லும் சாலையில் சென்றது. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த சேரம்பாடி உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    கால்நடை மருத்துவர் காலி இடங்களை உடனடியாக நிரப்ப கோரியும் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் மற்றும் காக்கா தோப்பு பகுதியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். கால்நடை மருத்துவர் காலி இடங்களை உடனடியாக நிரப்ப கோரியும் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஊட்டியில் கால்நடை மருத்துவமனை உள்ளது. ஆனால் இங்கு பல மாதங்களாகவே பணியில் கால்நடை மருத்துவர்கள் கிடையாது. மேலும் ஆஸ்பத்திரியில் உரிய மருந்துகளும் இருப்பு வைப்பதில்லை. இதனால் கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து ெசன்று விட்டு திரும்பும் சூழ்நிலை உள்ளது. மேலும் இதனால் கால்நடைகளை இழக்கும் சூழலும் உள்ளது. இதை உடனடியாக போக்கவும் பாலுக்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பல ஊா்களில் இருந்தும் வந்த பக்தா்கள் மலை அடிவாரத்தில் கூடி கிரிவலம் சென்று மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றம் பூஜைகள் செய்தனா்.

    ஊட்டி:

    கூடலூரை அடுத்துள்ள நம்பாலகோட்டை சிவன்மலையில் பவுர்ணமி தினத்தையொட்டி கிரிவலம் மற்றும் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

    விழாவையொட்டி பல ஊா்களில் இருந்தும் வந்த பக்தா்கள் மலை அடிவாரத்தில் கூடி கிரிவலம் சென்று மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றம் பூஜைகள் செய்தனா்.

    தொடா்ந்து உலக அமைதிக்காக கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளா்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவா் கேசவன், செயலாளா் நடராஜன், நிா்வாகி பாண்டு குருசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

    • இந்த கிராமங்களில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வருவதை தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வன எல்லையோரம் உள்ள போஸ்பாறா, சீனக்கொல்லி முதல் தொரப்பள்ளி வரையில் உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் இந்த கிராமங்களில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வருவதை தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

    இதையடுத்து வன எல்லையோர கிராம பகுதியில் உள்ள அகழிகளை ஆழப்படுத்தியதுடன் யானைகள் நுழையும் குறிப்பிட்ட இடங்களில் மரக்கட்டைகளை வைத்து தீ மூட்டி யானைகள் நுழைவதை தடுக்கும் பணியை வனத் துறையினா் துவங்கி உள்ளனா். ஊருக்கு மிக அருகாமையில் கும்கி யானைகளையும் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தி வைத்துள்ளனா்.

    • ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக அவர்களை காப்பாற்றுவதற்கு ரத்தம் தேவைப்படுகிறது

    ஊட்டி;

    ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் உலக ரத்த கொடையாளர் தினம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ- மாணவிகள் 176 பேர் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியானது ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் தொடங்கி காபி ஹவுஸ், மாரியம்மன் கோவில் வழியாக ஊட்டி சேட் மருத்துவமனையில் சென்றடைந்தது.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர், 3 முறை மற்றும் அதற்கு மேலாக ரத்த தானம் செய்த 23 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கம் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    பின்னர் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிக முறை ரத்த தானம் செய்த நபர்களை பாராட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    குறிப்பாக விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக அவர்களை காப்பாற்றுவதற்கு ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் என்பது ஒரு உன்னதமான செயல் ஆகும். ரத்த தானம் செய்வது குறித்து உங்களது பகுதியில் உள்ள நண்பர்களிடம் எடுத்துக்கூறி அவர்களும் ரத்த தானம் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். இதேபோன்று தொடர்ந்து அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் மனோ கரி, உறைவிட மருத்துவர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 102 மனுக்களை பெற்று கொண்டார்.
    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை உரிய காரணம் இல்லாமல் நிராகரிக்க கூடாது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 102 மனுக்களை பெற்று கொண்டார்.

    தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

    மேலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனிகவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், உரிய காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்க கூடாது. பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷ்னி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×