search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒளிரும் பூங்கா திறப்பு"

    • இந்தியாவின் பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் ஊட்டி குறிப்பிடத்தக்கது.
    • 3 பெரிய எல்.இ.டி மரங்கள் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன.

    ஊட்டி, மே.22-

    இந்தியாவின் பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் ஊட்டி குறிப்பிடத்தக்கது. இங்கு கோடைக்காலத்தில் தட்பவெப்பநிலை மிகவும் இதமாக இருக்கும். அதுவும் தவிர ஊட்டியில் உள்ள பச்சைப்பசேல் இயற்கை காட்சிகள், காட்சிமுனையம், பிரையண்ட் பூங்கா மற்றும் படகு சவாரி ஆகியவை கண்களுடன் கருத்தையும் கவர்ந்து இழுக்கும். எனவே கோடைக்காலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஊட்டியில் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தண்டர் வேர்ல்டு- குளோ கார்டன் எனும் ஒளிரும் பூங்கா ஊட்டியில் வடக்கு ஏரி சாலையில் அமைந்துள்ளது.

    இதனை இந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் வின்சென்ட் அடைக்கலராஜ் திறந்து வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே முதல்முறையாக குளோ கார்டன் என்னும் ஒளிரும் பூங்கா 50க்கும் மேற்பட்ட ஜொலிக்கும் மலர்கள் மற்றும் 3 பெரிய எல்.இ.டி மரங்கள் ஆகியவை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன.

    மலர்களின் வண்ணமயமான வடிவங்களை காண்பிக்கும் வகையில் எல்இடி மரத்தில் 4கே ரெசல்யூஷன் கொண்ட பிரம்மாண்ட திரை ஒன்றும் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பூங்காவுக்கு வருகை தரும் அனைவரது பார்வைக்கும் இது விருந்தாக அமையும். 1.50 ஏக்கர் பரப்பளவில் 50க்கும் மேற்பட்ட ஒளிரும் மலர் செடி வகைகள் இங்கு உள்ளன. மேலும் 10 மீட்டர் உயரமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட 3 பெரிய எல்இடி ஒளிரும் மரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கணினி தொழில்நுட்பத்தில் 54 வண்ணங்களின் கலவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்கவர் மலர் வடிவங்களை திரையிடும் திறனுடன் இந்த எல்இடி ஒளிரும் மரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

    இந்த குளோகார்டன் பூங்காவின் நுழைவு வாயில் 1000 அடி அளவிலான எல்இடி மேட்ரிக்ஸ் புரோபைல் முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்கவரும் வடிவங்களை காண்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனது. இதனை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர்.

    ×