search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் உதவியுடன் சாலை"

    • சாலை மிகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்
    • சாலை மிகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் நகராட்சியில் உள்ள வாழவயல் குடோன் பகுதியில் இருந்து ஆஷிக் அய்யா வீடு வரை செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாக போடப்படாமல் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் அவசர கால தேவைகளுக்காக ஆஸ்பத்திரிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். நெல்லியாலம் நகராட்சியில் தொடர்ந்து சாலையை சீரமைக்க மனு அளித்தும் இதுவரை சாலையை சீரமை க்காமல் காலம் தாழ்த்தி வருவதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் கிராம மக்கள் முடிவு எடுத்து குண்டும் குழியுமாக உள்ள 100 மீட்டர் சாலையை ஒவ்வொரு வீடாக பணம் வசூல் செய்து கான்கிரீட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது பள்ளிகள் தொடங்க உள்ளது. மேலும் பருவமழை தொடங்க உள்ளதால் சாலை மிகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவே கிராமத்தினரே சொந்த பணத்தை வைத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நெல்லியாளம் நகராட்சியிடம் சாலை போடுவதற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. அதனால் தங்கள் சொந்த பணத்தை வைத்து சாலையை புதிதாக அமைத்துள்ளோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    ×