search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேயிலை கண்காட்சி"

    • தேயிலை கண்காட்சியை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்க வேண்டும்
    • தேயிலையை சுடுதண்ணீரில் போட்டு அதன் சுவையை ருசித்து பார்த்தனர்.

    குன்னூர், மே.22-

    குன்னூர் தென்னிந்திய தேயிலை வாரியம், தமிழக சுற்றுலாத்துறை, தமிழகத் தோட்டக்கலைத் துறை, இன்கோசர்வ் சார்பில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 நாட்கள் தேயிலை கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த தேயிலை கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். தேயிலை கண்காட்சியில் பொதுமக்கள் எது உண்மையான சரியான தேயிலை அந்த தேயிலையின் தரம், ருசி அதனுடைய வண்ணம் தரம் எப்படி உள்ளது.

    தேயிலையை எந்த நிறத்தில் வந்தால் அது கலப்பட தேயிலை என்று அறியும் வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்முறையும் காண்பிக்கப்பட்டது. இந்த செயல்முறையை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து தேயிலை தரத்தையும் அதன் சுவையையும் ருசித்துப் பார்த்து தெரிந்து கொண்டனர்.

    இதில் முக்கிய அம்சம் சிறுமிகளுக்கு தேயிலையை சுடுதண்ணீரில் போட்டு அதன் சுவையை ருசித்து பார்த்து என்ன மாதிரி சுவை உள்ளது என்பது சரியாக சொன்னால் சொல்லிய சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தேயிலை கலப்படம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளதாக சுற்றுலா பயணிகள் பாராட்டினர். மேலும் இந்த தேயிலை கண்காட்சியை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குன்னூர் சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி நேற்று தொடங்கியது.
    • கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

    ஊட்டி:

    குன்னூர் சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளின் சார்பிலும் பல்வேறு சிறந்த திட்டங்களை தீட்டி தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வரும் நோக்கில் செயல்படுத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இந்த ஆண்டு அதனை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேயிலை விற்பவர்கள், வாங்குபவர்களுக்கு நல்ல தேயிலை மற்றும் கலப்பட தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேயிலை கண்காட்சி நடத்தப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் தரமான தேயிலை உற்பத்தியை குறு, சிறு விவசாயிகள் மேற்கொள்ள தேயிலை வாரியம் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 2 தொழிற்சாலைகளில் ஆா்தோடக்ஸ் வகை தேயிலையை உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரமான தேயிலை உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதாரம் மேம்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் செழிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து தேயிலை கண்காட்சியை முன்னிட்டு குன்னூர் டைகர் ஹில் பகுதியில் நீலகிரி மாவட்ட நிர்வாகம். தமிழக சுற்றுலாத்துறை. இந்திய தேயிலை வாரியம் மற்றும் இன் கோசர்வ் சார்பில் பொது மக்களிடம் தேயிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மனித சங்கிலி தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் 1500 சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தொடா்ந்து, தமிழக அரசு தேயிலை தோட்டக் கழக (டேன் டீ) வளாகத்தில் தேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறையினருடன் நடைபெற்ற மனித சங்கலி விழிப்புணா்வு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டாா்.

    இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித், தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் முத்து குமாா், மலைப் பகுதி சிறப்பு திட்ட அதிகாரி ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரிய தா்ஷனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • இந்திய தேயிலை வாரியத்தின் 70-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
    • தேயிலை கண்காட்சி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    ஊட்டி,

    குன்னூர் இந்திய தேயிலை வாரியத்தின் 70-வது ஆண்டு விழா குன்னூர் தென்னிந்திய தேயிலை வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்தது. . விழாவில் தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேயிலை வாரியத்தின் முன்னாள் துணைச் செயலாளர் ரங்கையா கலந்து கொண்டார்.

    முன்னதாக குத்து விளக்கு ஏற்றி தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் முத்துக்குமார் பேசும்போது கூறியதாவது:-

    அனைத்து சிறு, குறு விவசாயிகளும். தோட்ட அதிபர்களும். தேயிலை தொழிற்சாலை உரிமையா ளர்களும்.

    வியாபாரிகளும். ஏலம் எடுப்பவர்களும் அனைவரும் ஒன்றிணைந்து தேயிலை வாரியத்துடன் இணைந்து செயல்பட்டால் தேயிலையை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல முடியும். நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒரு மாதங்களில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களில் மலர் கண்காட்சி. காய்கறி கண்காட்சி. பழக்கண்காட்சி போன்றவை நடக்கிறது.

    அது போல தேயிலை கண்காட்சியும் நடத்த முடிவு செய்துள்ளோம். அதைப்பற்றி மாவட்ட கலெக்டரிடம் பேசி நல்ல முடிவு எடுத்து குன்னூரில் உள்ள காட்டேரி பூங்கா கோத்தகிரி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் எங்கு வைப்பது என்று முடிவு செய்து விரைவில் தேயிலை கண்காட்சி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தேயிலை வாரிய உறுப்பினர்கள் தனஜெயம். ராஜேஷ் மற்றும் ஏராளமான சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் தேயிலை தயாரிப்பவ ர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ×