search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேயிலை உற்பத்தி"

    • பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • மத்திய-மாநில அரசுகள் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. அங்கு விளையும் பசுந்தேயிலை சிறப்பு வாய்ந்தது. எனவே இதற்கு நாடு முழுவதும் நல்ல கிராக்கி உள்ளது.

    நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு போதிய கொள்முதல் விலை தரப்படுவது இல்லை. எனவே நீலகிரியில் வசிக்கும் தேயிலை விவசாயிகள் சங்கத்தினர் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் ஊட்டி இளம் படுகர் சங்க கட்டிடத்தில் சிறுகுறு தேயிலை விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நாக்குபெட்டா படுகர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் பாபு, தொதநாடு நல சங்க செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் போஜன், புறங்காடு சீமை தலைவர் தியாகராஜன், மேற்கு நாடு நலச்சங்க தலைவர் தாத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டத்தின் முடிவில் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கோரி மத்திய-மாநில அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினோம். அடுத்தபடியாக நீலகிரியில் 65 ஆயிரம் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்தோம். மாவட்ட நிர்வாகம் தடுத்துவிட்டது. பின்னர் எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி, சிறியூர், மசினகுடி கோவில்களுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் அம்மன்களிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.

    நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

    எனவே மாவட்டம் முழுவதும் பொறங்காடு, குந்தா, மேற்குநாடு, தொதநாடு ஆகிய 4 சீமைகளை சேர்ந்த 400 கிராம விவசாயிகளை திரட்டி வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து உள்ளோம்.

    நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும்வரை எங்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குன்னூர் சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி நேற்று தொடங்கியது.
    • கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

    ஊட்டி:

    குன்னூர் சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளின் சார்பிலும் பல்வேறு சிறந்த திட்டங்களை தீட்டி தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வரும் நோக்கில் செயல்படுத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இந்த ஆண்டு அதனை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேயிலை விற்பவர்கள், வாங்குபவர்களுக்கு நல்ல தேயிலை மற்றும் கலப்பட தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேயிலை கண்காட்சி நடத்தப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் தரமான தேயிலை உற்பத்தியை குறு, சிறு விவசாயிகள் மேற்கொள்ள தேயிலை வாரியம் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 2 தொழிற்சாலைகளில் ஆா்தோடக்ஸ் வகை தேயிலையை உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரமான தேயிலை உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதாரம் மேம்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் செழிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து தேயிலை கண்காட்சியை முன்னிட்டு குன்னூர் டைகர் ஹில் பகுதியில் நீலகிரி மாவட்ட நிர்வாகம். தமிழக சுற்றுலாத்துறை. இந்திய தேயிலை வாரியம் மற்றும் இன் கோசர்வ் சார்பில் பொது மக்களிடம் தேயிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மனித சங்கிலி தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் 1500 சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தொடா்ந்து, தமிழக அரசு தேயிலை தோட்டக் கழக (டேன் டீ) வளாகத்தில் தேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறையினருடன் நடைபெற்ற மனித சங்கலி விழிப்புணா்வு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டாா்.

    இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித், தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் முத்து குமாா், மலைப் பகுதி சிறப்பு திட்ட அதிகாரி ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரிய தா்ஷனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×