என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜெகதளாவில் தூய்மை மக்கள் இயக்கம் முதலாம் ஆண்டு விழா
- பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.
- பொதுமக்கள், ஊழியர்கள் பிளாஸ்டிக்கை ஒழிக்க உறுதிமொழி ஏற்றனர்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு ஜெகதளா பேரூராட்சியில் தீவிர தூய்மை பணி திட்டத்தில் குடியிருப்பு பகுதி, சிறு குடியிருப்பு பகுதி, தொழிற்சாலை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மருத்துவக் கழிவுகள் கட்டிடக்கழிவுகள் போன்றவற்றை பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பொதுமக்களுடன் இணைந்து தூய்மை செய்தனர்.
மேலும் தூய்மை மக்கள் இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி அருவங்காடு பஸ் நிலையத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், துணை தலைவர் ஜெய்சங்கர், மற்றும் செயல் அலுவலர் சதாசிவம், 7-வது வார்டு உறுப்பினர் யசோதா, 9-வது மரியராஜன், 12-வது வார்டு உறுப்பினர் மோசஸ், 4-வது வார்டு உறுப்பினர் ஆஞ்சலின், 14-வது வார்டு உறுப்பினர் ராஜலட்சுமி, மற்றும் அலுவலக அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஆகியோர் என் நகரத்தை நாங்கள் தூய்மையாக வைத்துக் கொள்வோம் என உறுதிமொழி ஏற்றனர். மீண்டும் மஞ்சப்பை, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்போம் போன்ற உறுதி மொழி எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்