search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nilgiri"

    • சுற்றுச்சூழல் பாதிப்பால் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    • பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டிக் கிடக்கிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்திருப்ப தால் சுற்றுச்சூழல் பாதிக்க ப்படுவதாக சமூக ஆர்வ லர்கள் கவலை அடைந்து ள்ளனர். இதுகுறித்து எக்ஸ்னோரா அமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவா் கண்ணன் மாவட்ட நிா்வா கம் மற்றும் உள்ளாட்சி நிா்வாக ங்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய பல போராட்டங்கள், பல விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நீலகிரி எக்ஸ்னோரா அமைப்பு இதற்காக களத்தில் இறங்கி பிளாஸ்டிக் ஒழிப்பில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டது.

    ஆனால், அண்மை க்காலமாக மீண்டும் மாவட்டத்தில் பிளா ஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.ெரயில் தண்டவா ளங்கள், குப்பை கிடங்குகள், நீா் நிலைகள் போன்றவற்றில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டிக் கிடப்பதைப் பாா்க்கும்போது நீலகிரியின் சுற்றுச்சூழல் பெருமளவு பாதித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க பொது மக்கள் தாங்களாக முன் வரவேண்டும். கடை களில் பொருள்கள் வாங்கு ம்போது துணிப்பையை பயன்படுத்த வேண்டும்.அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளா்கள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் பிளா ஸ்டிக் சாா்ந்த பொருள்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும். இதனை அனைத்து அரசு துறை அலுவல கங்களும் கண்கா ணித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிா்வாகம், நகரா ட்சி, பேரூராட்சி நிா்வாக ங்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது.
    • குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

     ஊட்டி,

    நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

    இது குறித்து அவா் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையும் வகையில் வட்டார அளவில் சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது. இயற்கை வேளாண்மைக்காக தோட்டக்கலைத் துறை மூலம் நடப்பு ஆண்டில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் வழி காட்டு நெறிமுறை களின்படி மாதந்தோறும் அங்கக வேளாண்மைக்கான கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோட்டக்கலைத் துறையி ன்கீழ் அரசு ரோஜா பூங்கா அருகில் அமைந்துள்ள குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    தனியாா் விற்பனை நிலையங்களில் உரத்தின் விலை கடந்த ஓராண்டில் அதிக அளவில் உயா்ந்து ள்ளதாக தகவல் வந்த நிலையில், அங்கு ஆய்வு செய்யுமாறு சம்பந்த ப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை யையொட்டி அபாயக ரமான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளை களை வெட்டுவதற்காக வருவாய்த் துறை அலுவ லா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையின் மூலம் 2023-24 ஆம் ஆண்டில் தேசிய தோட்ட க்கலை இயக்கம் திட்டத்தி ன்கீழ் நிழல்வலை குடில் 50 சதவீதம் மானியத்தில் அமைக்கவும், 2023-2024 ஆம் ஆண்டில் 20 யூனிட் தேனீ வளா்ப்பு க்கும் இலக்கு நிா்ணயிக்கப்ப ட்டுள்ளது.

    எனவே, தேவைப்படும் விவசாயிகள் விண்ண ப்பித்து பயன்பெறலாம். கடந்த ஆண்டு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 274 தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் ஆயிரம் தேயிலை அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் உழவா் உற்பத்தியாளா் சந்தைக்கு சி.சி.டி.வி. காமிரா மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.
    • அத்தனை கோரிக்கைகளும், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் தும்பூர் போஜன், தர்மன், ராஜு மற்றும் விவசாயிகள், தமிழக பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர். அப்போது அவர்கள் தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யக் கோரியும், நீண்டகாலமாக தீர்க்கப்படாத தேயிலை விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் விரிவாக எடுத்துக் கூறினர்.அவர்களின் அத்தனை கோரிக்கைகளும், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், தேயிலை சாகுபடி செய்யும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் அனைவருக்கும், பாதுகாப்பையும், ஆதரவையும், பா.ஜனதா தொடர்ந்து வழங்கும் என்றும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்தார். இந்தச் சந்திப்பின்போது பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் நீலகிரி மாவட்டத் தலைவர் மோகன் ராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 10 நிமிட தாமதத்திற்கு பிறகு ஊட்டி புறப்பட்டு சென்றது.
    • 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக மலை ெரயில் சேவை திகழ்ந்து வருகிறது. இது அடா்ந்த வனப் பகுதி வழியாக குறைந்த வேகத்தில் செல்லும். எனவே மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

    இந்த நிலையில் அந்த ரெயில் நேற்று காலை குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டது. அப்போது டிரைவர் கணேசன் ரெயிலை இயக்கினார். குன்னூரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில் வெலிங்டன் மேம்பாலப் பகுதி அருகே வந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன. இதனை தற்செயலாக பார்த்த டிரைவர் கணேசன் அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் உடனடியாக பிரேக் போட்டு மலை ெரயிலை நிறுத்தினாா். அதன்பிறகு அவா் ரயிலில் இருந்து இறங்கி சென்று தண்டவாளத்தின் குறுக்கே நின்ற காட்டு எருமைகளை காட்டு ப்பகுதிக்குள் விரட்டி னாா். அதன்பிறகு குன்னூ ரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில், சுமார் 10 நிமிடம் தாமதமாக ஊட்டி க்கு புறப்பட்டு சென்றது.

    • தடுப்பு சுவர் கட்டும் பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்
    • ரூ.1.39 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ரூ.1.39 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அங்கு நடக்கும் கட்டுமான பணிகளை பார்வை யிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, மின்சாரம், கழிப்ப றை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. அங்கு நடக்கும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடர்ந்து கண்காணித்து, அதனை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு-தென்மேற்கு பருவ மழை காலங்களில் அதிக மழை பெய்வதால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சாலைகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு, இத்தலார் ஆகிய ஊராட்சியில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டது. அப்போது தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வை யிட்டு, கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கினர். அப்போது அந்த பகு தியில் வசிக்கும் பொதுமக்கள், கனமழை யால் ஏற்படும் சேதத்தை தடுக்கவும் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்கவும் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விவரங்களை சேகரித்து, தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்அடிப்படையில் அரசிடம் உரிய அனுமதி பெற்று ஊரக வளர்ச்சி முகமை சார்பில், நஞ்சநாடு அம்மனட்டி கிராமத்தில் ரூ.1.39 கோடி மதிப்பில் 3 பணிகளும், இத்தலார் ஊராட்சியில் ரூ.1.21 கோடி மதிப்பில் 5 பணிகளும் என மொத்தம் ரூ.2.60 கோடி மதிப்பில் 8 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மழை காலம் தொடங்குவதற்கு முன்ன தாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் அறிவுறு த்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாம கேஸ்வரி, செய ற்பொறியா ளர் செல்வகு மரன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், வட்டாட்சியர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஸ்ரீதரன், நந்தக்குமார், நஞ்சநாடு ஊராட்சித்தலைவர் சசிகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உருளைக்கிழங்கு கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
    • 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,450-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

    கோத்தகிரி

    கோத்தகிரி பகுதியில் உருளைக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொள்முதல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்கின்றனர்.

    இந்தநிலையில் கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, கூக்கல், கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, ஈளாடா, புதுத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பரப்பளவில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மேலும் தங்களது நிலத்தில் விளைந்த உருளைக்கிழங்குகளை தீவிரமாக அறுவடை செய்து வருகின்றனர். ஆனால் மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- காய்கறி மண்டிகளில் கடந்த சில மாதங்களாக உருளைக்கிழங்கு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதை நம்பி பெரும்பாலான விவசாயிகள் உயர்தர விதைகளான கிரிராஜா, குப்பிரி ஜோதி, ஜலந்தர் மற்றும் பண்ணை கிழங்கு விதைகளை சாகுபடி செய்து வந்தோம். தற்போது கோத்தகிரி காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரை, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,450-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது விலை வீழ்ச்சி ஏற்பட்டு கிலோவுக்கு ரூ.32 மட்டுமே கிடைக்கிறது. மேலும் நல்ல விதை கிழங்குகள் கிடைக்காததாலும், பூச்சி தாக்குதல் ஏற்பட்டு சாகுபடி குறைந்ததாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.32.20 லட்சம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
    • மனுநீதி நாள் முகாமில், தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபா ன்மையினர் நலத்துறையின் சார்பில், இதுவரை 529 பயனாளிகளுக்கு கிராமப்புற பெண் கல்வி ஊக்க த்தொ கையாக ரூ.3.26 லட்சமும், 540 பயனாளி களுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.32.20 லட்சம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர 431 பயனாளி களுக்கு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலும், 129 பயனாளிகளுக்கு கிறுஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ரூ.22 லட்சம் மதிப்பிலும், 4,898 பயனாளி களுக்கு ரூ.152.28 லட்சம் மதிப்பில், கல்வி உதவி த்தொ கை வழங்கப்பட்டுள்ளது.

    2021-2022-ம் கல்வியாண்டில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் 1,294 மாணவி யர்களுக்கு சார்ந்த 1,082 மாணவர்களுக்கு மற்றும் என மொத்தம் ரூ.121 லட்சம் மதிப்பில் 2,376 மிதிவண்டி களும், மிக பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் இனத்தைச் சார்ந்த ஏழை, எளிய 68 மகளிருக்கு ரூ.3.76 லட்சம் மதிப்பில், தையல் எந்திரம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    தையல் எந்திரம் பெற்று பயனடைந்த பயனாளி மேக்லின் சத்யபிரியா கூறியதாவது:-

    நான் எனது கணவருடன் குன்னூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நான் குன்னுார் உப்பாசி எம்.பி.ஏ பாலிடெக்னிக்கில் தையல் பயிற்சி பெற்றேன். எனது ஊரில் நடந்த முகாமில் தையல் எந்திரம் வேண்டி விண்ணப்பித்தேன்.

    அதனைதொடர்ந்து, எனக்கு பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் சார்பில், அதிகரட்டி பேரூராட்சி காட்டேரி கிராமத்தில், நடந்த மனுநீதி நாள் முகாமில், தையல் எந்திரம் வழங்கப்பட்டது. இதன் மூலம் தையல் தொழில் செய்து வருகிறேன். இதில் வரும் வருமானம் எனக்கும், எனது குடும்பத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னைப் போன்றவர்கள் சுய தொழில் செய்து வாழ்க்கையில், முன்னேற உதவிய முதல்-அமைச்ச ருக்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தையல் இயந்திரம் பெற்ற ஹரிப்ரியா கூறுகையில், நான் கோத்தகிரியில், உள்ள காஸ்ட்லி எஸ்டேட்டில் வசிக்கிறேன். எனது கணவர் சிவா லாரி டிரைவராக உள்ளார். எங்கள் குடும்பம் எளிமையான குடும்பம். முதல்-அமைச்சரின் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்படுத்தப்படுவதை உறவினர்கள் மூலம் தெரிந்து கொண்ட நான், அதற்காக விண்ணப்பம் செய்திருந்தேன். இதனை பரிசீலனை செய்த அதிகாரிகள், எனக்கு விலையில்லா தையல் எந்திரத்தினை வழங்கினர். இதன் மூலம் நான் துணியாலான பைகளை தைத்து, வாழ்வாதாரத்தில் முன்னேறி வருகிறேன். எங்களின் இந்த முன்னேற்றத்திற்கு உதவிய முதல்-அமைச்சருக்கு நன்றி என்றார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசு, பிற்படு த்தப்பட்ட, மிகப்பிற்படு த்தப்பட்ட/ சீரமரபினர் மற்றும் சிறுபா ன்மையின சமூகத்தினர் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, வாழ்வாதராம் பொருளா தாரம் முன்னேற்றம் அடைந்த நீலகிரி மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    • தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரிகள் திறந்துவைக்கப்பட்டது.
    • ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 600 படுக்கை வசதிகள் உள்ளன

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது. அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை அங்கி வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய தாவது:-

    தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரிகள் திறந்துவைக்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பெருமைக்குரியதாகும். இந்தியாவில் 36 மாநிலங்கள் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரி திறந்து வைக்கப்பட்டது ஒரு வரலாற்று சிறப்பு என்றே கூறலாம்.இன்றைய தினம் இத்தலார் பகுதியில் 2 புதிய மருத்துவக்கல்லூரி கட்டமைப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வளரினம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் உயர் சிகிச்சைக்காக வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதின் அடிப்படையில் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூ ரியில் 150 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டும் சேர்ந்து மொத்தம் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இதில் கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு 99 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மடிக்க ணினி மற்றும் பாடப்புத்த கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் 13 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சிறிய மாவட்டமான இந்த நீலகிரி மாவட்டத்தில் உள்ள 600 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை வருகிற ஜூலை மாதம் திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மா.சுப்பி ரமணியன் மாணவ- மாணவிக ளுக்கான தனி உடற்பயிற்சி கூடத்தினையும் திறந்து வைத்து பார் வையிட்டார்.

    • உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
    • 2 பாக்கெட்டுகள், சாக்லேட் பார்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பேக்க ரிகளில் தயாரிக்க ப்படும் கேக்குகள், காரம் மற்றும் இனிப்பு வகைகளில் அதிகப்ப டியான வண்ண ங்கள் கலக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறையின மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் மற்றும் குன்னூர் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருள் தயாரித்த ஒரு பேக்கரியில் இருந்த 2 பாக்கெட்டுகள், சாக்லேட் பார்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பேக்கரி கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்க ரியில் தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகள் மற்றும் கேக்குகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே வண்ணங்கள் சேர்க்கப்பட வேண்டும். மாறாக அதிகப்படியான அளவு வண்ணங்கள் சேர்க்க ப்படும் பேக்கரி களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் அனைத்து உணவு வணிகர்களும் தங்களின் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவுப்பொருட்களை சுகாதாரமாக தயாரிக்க வேண்டும். பூச்சிகளை பிடித்து அழிக்கும் எந்திரங்களை தங்கள் வளாகங்களில் பொருத்தியிருக்க வேண்டும். பேப்பர்களில் எண்ணை பலகாரங்களை அடுக்கி வைக்கவோ, பஜ்ஜி போண்டா போன்ற உணவுப்பொருட்களை பேப்பரில் வைத்து பரிமாறவோ கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.
    • விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, வெளிமாநில மற்றும் பிற மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் கல்லட்டியில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

    அபாயகரமான மற்றும் செங்குத்தாக சாலை செல்கிறது. இதனால் வாகனங்களை முதல் மற்றும் இரண்டாவது கியரில் மட்டும் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மலைப்பாதையில் வாகனங்கள் இயக்கி அனுபவம் இல்லாதவர்கள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது. விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்வதால் கல்லட்டி மலைப்பாதையில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.

    இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, வெளிமாநில மற்றும் பிற மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் கல்லட்டியில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. குவிலென்ஸ் பொருத்தும் பணி நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் இருபுறமும் சென்று வர அனுமதி உள்ளது.

    இந்தநிலையில் நேற்று கல்லட்டி மலைப்பாதையில் கார் ஒன்று பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால், கார் சேதமடைந்தது.

    விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்லட்டி மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் குவிலென்ஸ் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    இதன் மூலம் கீழ் இருந்து மேல் நோக்கி வரும் வாகனங்களை, முன்கூட்டியே பார்த்து சிறிது தொலைவில் வாகனங்களை நிறுத்தி வழிகொடுக்க முடியும். மேலும் வளைவில் வாகனங்கள் திரும்பும்போது விபத்து ஏற்படாமல் இருக்கும். 36 கொண்டை ஊசி வளைவுகளில் புதிதாக குவிலென்ஸ் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கொண்டை ஊசி வளைவுகளில் பொருத்தப்பட்ட குவிலென்சுகள் சேதமடைந்தது. அதனால் தற்போது புதிதாக குவிலென்ஸ் பொருத்தப்பட்டு வருகிறது என்றார்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்த நசுருதீன், திண்டுக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள அலுவலகத்தில் தாமோதரன் முதன்மை கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் செங்கல்பட்டு மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று நீலகிரிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிக்கு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    முதன்மை கல்வி அதிகாரி தாமோதரன் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும். இதேபோல் பழங்குடியின குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக கோடை விழா நடத்தப்படுகிறது.
    நீலகிரி:

    இந்த ஆண்டு கடந்த 7-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. தொடர்ந்து கண்காட்சிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்கண்காட்சி கடந்த 28-ந் தேதி தொடங்கியது. 

    கண்காட்சியை குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின் தொடங்கி வைத்தார். பிற மாவட்டங்களில் விளையும் பழங்களை கொண்டு அரங்குகள் அமைக்கப்பட்டது. குறிப்பாக 1 டன் திராட்சை பழங்களை கொண்டு 12 அடி நீளம், 9 அடி உயரத்தில் கழுகு உருவம் உருவாக்கப்பட்டு இருந்தது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. 

    பழங்களால் ஆன பல்வேறு உருவங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுலா பயணிகள் தோட்டக்கலைத்துறை மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    இந்த நிலையில், நீலகிரியில் கோலாகலமாக நடைபெற்று வந்த கோடை விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதியாக பழக்கண்காட்சியுடன் கோடை விழா நிறைவு பெற்றது. 

    கடந்த 2 நாட்களில் சுமார் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குன்னூர் பழக்கண்காட்சியை பார்த்து ரசித்தனர்.

    ×