search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவக்கல்லூரி"

    • திருமுல்லைவாசல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண வர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    எம்.எல்.ஏ.க்கள் எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), நிவேதா.எம்.முருகன் (பூம்புகார்), கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யனாதன் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசுகையில், தமிழக முதல்வர் பள்ளி கல்வித்துறைக்கு 40 ஆயிரத்து 299 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022 -23 கல்வி ஆண்டில் 52 அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கல்விப்பயிலும் மொத்தம் 6536 மாணவ மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 14 லட்சத்து 81 ஆயிரத்து 100 மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.

    தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென பூம்புகார், சீர்காழி சட்டபேரவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் விரைவில் மயிலாடுதுறை மாவட்ட த்திற்கு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதே போல் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் துறைமுகம் அமைக்க வேண்டும் என சட்டபேரவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் கலந்து கொண்டனர்.

    தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • மாவட்டத்தில் 437 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
    • 28 பேருக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு மற்றும் பி.டி.எஸ்.பல் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 437 பேர் நீட் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 217 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விரும்புவோருக்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி 73 மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

    கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 28 பேருக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு மற்றும் பி.டி.எஸ்.பல் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.

    • மருத்துவக்கல்லூரிக்கு சகோதரரின் உடலை தானமாக பெண் வழங்கினார்.
    • பேராசிரியர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் பெரியார் வீதியில் வசித்து வரும் லட்சுமணன் என்பவரின் மனைவி சுசீலா தேவி. இவரின் தம்பி பிருதிவிராஜ் (வயது67). இவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இறந்து விட்டார். அவரது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்க சுசீலா தேவி முடிவு செய்தார்.

    இதுகுறித்த தகவலை நேதாஜி ஆம்புலன்ஸ் மற்றும் நேதாஜி அறக்கட்டளை நிர்வாகி ஹரி கிருஷ்ணனிடம் தெரிவித்து ள்ளார். அவரின் ஏற்பாட்டில் மரணம் அடைந்த பிருதிவி ராஜ் உடல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சுசீலா தேவி தானமாக வழங்கினார். அவரின் இந்த சேவையை மருத்துவ கல்லூரி இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

    • அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து, மனைவி ஜெயாவிடம் தகராறு செய்வது வழக்கம்.
    • ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள சுங்கான்கடை பனவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சாலமன் (வயது 56). மது பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து, மனைவி ஜெயாவிடம் தகராறு செய்வது வழக்கம்.

    நேற்று இரவும் சாலமன் மது அருந்தி வந்து வீட்டில் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது 15 வயது மகன், கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து சரமாரியாக தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த சாலமன், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து அவரது மனைவி ஜெயா அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% சிறப்பு உள் ஒதுக்கீடும் நடைமுறையில் உள்ளது.
    • பாஜக அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநிலங்களிடமிருந்து பறிக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இனி இந்திய ஒன்றிய அரசே எடுத்து நடத்தும் என்பது மாநில தன்னாட்சி மீது விழுந்துள்ள மற்றுமொரு பேரிடியாகும். மாநில அரசின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து ஒன்றியத்தில் அதிகாரத்தைக் குவிக்கும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

    இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (Directorate General of Health Services- DGHS) இதுவரை ஒன்றிய அரசின் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மாநில அரசுகள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றிய அரசுக்கான ஒதுக்கீடு (15 விழுக்காடு) ஆகியவற்றில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தது. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் நடப்பாண்டு முதல் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையையும் மருத்துவச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மூலம் இனி இந்திய ஒன்றிய அரசே நடத்தும் என்பது அப்பட்டமான மாநில உரிமை பறிப்பு ஆகும்.

    இந்திய ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சியமைத்தது முதல் ஒற்றையாட்சியை நோக்கி நாட்டினை இட்டுச்செல்லும் வகையில் ஒன்றியத்தில் அதிகாரத்தைக் குவித்து, கூட்டாட்சி தத்துவத்தைக் குழிதோண்டி புதைத்து, ஒரே வரி, ஒரே கல்விக்கொள்கை, ஒரே குடும்ப அட்டை என்று அனைத்தையும் ஒற்றை மயமாக்கி வருகிறது. அதன் அடுத்தப்படியாக, தற்போது மருத்துவ மாணவர்களின் கலந்தாய்வைக்கூட விட்டுவைக்காது தன்வயப்படுத்த நினைப்பது தேசிய இனங்களின் இறையாண்மை மீது நடத்தப்படுகின்ற கொடுந்தாக்குதல் ஆகும்.

    இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் தாயகங்களான மாநிலங்களில் பல்வேறு கல்விக்கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையான இட ஒதுக்கீட்டு முறைகளும் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்பற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% சிறப்பு உள் ஒதுக்கீடும் நடைமுறையில் உள்ளது. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையை இனி இந்திய ஒன்றிய அரசே நடத்தும்போது, நீட் தேர்வு போல இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை முறை என்று கூறி இவற்றையெல்லாம் ரத்து செய்யும் பேராபத்து ஏற்படக்கூடும்.

    அதுமட்டுமின்றி, மருத்துவக்கல்லூரிகள் அதிகமுள்ள தமிழ்நாட்டில் நீட் தேர்வில் வென்ற பிற மாநில மாணவர்கள் போலி இடச்சான்றிதழ் கொடுத்து சேரும் முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்திய ஒன்றிய அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையை முழுமையாகக் கையகப்படுத்தும்பொழுது இத்தகைய முறைகேடுகள் மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி மாநில எல்லைகளைக் கடந்து, வடமாநில மாணவர்களை அதிக அளவில் தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளில் சேர்த்து தமிழ் மாணவர்களின் வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கவும் இம்முடிவு வழிவகுக்கும். 'நீட்' தேர்வு மூலம் தமிழ்நாட்டுக் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்தது போதாதென்று, தற்போது நீட் தேர்வில் வென்ற தமிழ் பிள்ளைகளின் மருத்துவ இடங்களையும் பறிக்கும் விதமாகவே தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையையும் இனி இந்திய ஒன்றிய அரசே நடத்த முடிவெடுத்துள்ளது. இது மருத்துவக் கல்வியில் மாநிலங்களுக்கு மிச்ச மீதமுள்ள அதிகாரத்தையும் அபகரிக்கும் எதேச்சதிகாரபோக்காகும்.

    அறுபது ஆண்டு காலமாக மாநில தன்னாட்சி குறித்து மேடைக்கு மேடை பேசிவரும் திமுக, தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்து, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமை காக்கப்படும் என்று சொன்ன திமுக, இரண்டு ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் தற்போது இந்திய ஒன்றிய அரசால் திட்டமிட்டு பறிக்கப்படும் மருத்துவ மாணவர் சேர்க்கை உரிமையையாவது பறிபோகாமல் பாதுகாக்க அரசியல் மற்றும் சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

    ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநிலங்களிடமிருந்து பறிக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    • உடல் எடை கண்டறிதல், சா்க்கரை அளவு கண்டறிதல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன.
    • தேவையான ஆலோசனைகளும், மேல்சிகிச்சைக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கழக நிா்வாகம், துளசி பாா்மசி இந்தியா நிறுவனம் சாா்பில் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமை மேலாண் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தொடக்கி வைத்தாா்.

    இதில் கண் பரிசோதனை, செவித்திறன் தொடா்பான குறைபாடுகளைக் கண்டறிதல், ரத்த அழுத்த பரிசோதனை, உடல் எடை கண்டறிதல், சா்க்கரை அளவு கண்டறிதல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும், தேவையான ஆலோசனைகளும், மேல் சிகிச்சைக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

    சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய உயரிய சிகிச்சை வழங்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    முகாமில் ஓட்டுநா், நடத்துநா்கள், தொழில் நுட்பப் பணியாளா்கள், அலுவலக பணியாளா்கள், அலுவலா்கள் உள்பட 250 போ் கலந்து கொண்டனா். முகாமில் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா்கள் ஜே. ஜெபராஜ் நவமணி, கே. முகம்மது நாசா், முதுநிலை துணை மேலாளா் கே.டி.கோவிந்தராஜன், துணை மேலாளா் எஸ்.ராஜா, உதவி மேலாளர்கள் செந்தில்குமார், ரமேஷ், நாகமுத்து, ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரிகள் திறந்துவைக்கப்பட்டது.
    • ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 600 படுக்கை வசதிகள் உள்ளன

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது. அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை அங்கி வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய தாவது:-

    தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரிகள் திறந்துவைக்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பெருமைக்குரியதாகும். இந்தியாவில் 36 மாநிலங்கள் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரி திறந்து வைக்கப்பட்டது ஒரு வரலாற்று சிறப்பு என்றே கூறலாம்.இன்றைய தினம் இத்தலார் பகுதியில் 2 புதிய மருத்துவக்கல்லூரி கட்டமைப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வளரினம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் உயர் சிகிச்சைக்காக வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதின் அடிப்படையில் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூ ரியில் 150 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டும் சேர்ந்து மொத்தம் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இதில் கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு 99 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மடிக்க ணினி மற்றும் பாடப்புத்த கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் 13 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சிறிய மாவட்டமான இந்த நீலகிரி மாவட்டத்தில் உள்ள 600 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை வருகிற ஜூலை மாதம் திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மா.சுப்பி ரமணியன் மாணவ- மாணவிக ளுக்கான தனி உடற்பயிற்சி கூடத்தினையும் திறந்து வைத்து பார் வையிட்டார்.

    • அக்டோபர் 17-ந்தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
    • நெல்லை மருத்துவக்கல்லூரி அவசர சிகிச்சைப் பிரிவு சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நெல்லை:

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ந்தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான கட்டத்தில் ஓர் உயிரை பாதுகாத்து உடல் காயத்தால் உண்டாகும் மரணத்தை தவிர்க்க கையாள வேண்டிய வழிமுறைகளை கடைபிடித்து நடைமுறைப்படுத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

    உறுதிமொழி

    இதனையொட்டி, நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு சார்பாக உலக விபத்து காய தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கல்லூரி முதல்வர் டாக்டர். ரவிச்சந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்ரமணியம், உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் ஷியாம் சுந்தர், ஆகியோர் முன்னிலை வகித்த னர். பேரணியில் செவிலியர் பயிற்சி மாணவிகள் பாரா மெடிக்கல் மாணவ- மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரி முதல்வர் தலைமையில் விபத்து காய தடுப்பு மற்றும் மேலாண்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    பேரணியில் பங்கேற்ற வர்கள் விபத்து தடுப்பு விழிப்புணர்வு முழக்கங்களை முழங்கியும், விபத்து தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்தார்கள். பேரணியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவு இணை பேராசிரியர் டாக்டர். ஐரின் அருணா எட்வின் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார்.

    • இவர் இறப்பிற்கு பிறகும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார்.
    • மேற்கண்ட தகவலை பி.எஸ்.டி. மற்றும் உறுப்பினர்கள், தஞ்சாவூர் ஏ.எம்.சி. லயன்ஸ் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    லயன்ஸ் இயக்கத்திற்கு என்று வாழ்ந்து தான் இறந்தும் பிறர் வாழ கண்களை மட்டுமல்ல, மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக தனது உடலையும் தானமாக கொடுத்த நல்லாசிரியர் லயன் துரைராசன் உடல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. அதற்கான சான்றிதழும் அவர்களின் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டது.இவர் இறப்பிற்கு பிறகும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார்.

    இத்தனை கடினமான துயர நேரத்திலும், அவரின் மனைவியும், பிள்ளைகளும் துரைராசனின் கடைசி ஆசைகளை" (கண் தானம், உடல் தானம்) முழுவதும் நிறைவேற்றிட உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேற்கண்ட தகவலை பி.எஸ்.டி. மற்றும் உறுப்பினர்கள், தஞ்சாவூர் ஏ.எம்.சி. லயன்ஸ் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    சிறுமியை கடத்தி திருமணம்; மருத்துவக்கல்லூரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி, கடத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 30).

    இவர் அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று குகை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மயில்சாமியை கைது செய்தார். சிறுமியை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ×