search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியை கடத்தி திருமணம்; மருத்துவக்கல்லூரி ஊழியர் கைது
    X

    சிறுமியை கடத்தி திருமணம்; மருத்துவக்கல்லூரி ஊழியர் கைது

    சிறுமியை கடத்தி திருமணம்; மருத்துவக்கல்லூரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி, கடத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 30).

    இவர் அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று குகை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மயில்சாமியை கைது செய்தார். சிறுமியை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×