search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastic Use"

    • சுற்றுச்சூழல் பாதிப்பால் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    • பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டிக் கிடக்கிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்திருப்ப தால் சுற்றுச்சூழல் பாதிக்க ப்படுவதாக சமூக ஆர்வ லர்கள் கவலை அடைந்து ள்ளனர். இதுகுறித்து எக்ஸ்னோரா அமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவா் கண்ணன் மாவட்ட நிா்வா கம் மற்றும் உள்ளாட்சி நிா்வாக ங்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய பல போராட்டங்கள், பல விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நீலகிரி எக்ஸ்னோரா அமைப்பு இதற்காக களத்தில் இறங்கி பிளாஸ்டிக் ஒழிப்பில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டது.

    ஆனால், அண்மை க்காலமாக மீண்டும் மாவட்டத்தில் பிளா ஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.ெரயில் தண்டவா ளங்கள், குப்பை கிடங்குகள், நீா் நிலைகள் போன்றவற்றில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டிக் கிடப்பதைப் பாா்க்கும்போது நீலகிரியின் சுற்றுச்சூழல் பெருமளவு பாதித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க பொது மக்கள் தாங்களாக முன் வரவேண்டும். கடை களில் பொருள்கள் வாங்கு ம்போது துணிப்பையை பயன்படுத்த வேண்டும்.அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளா்கள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் பிளா ஸ்டிக் சாா்ந்த பொருள்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும். இதனை அனைத்து அரசு துறை அலுவல கங்களும் கண்கா ணித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிா்வாகம், நகரா ட்சி, பேரூராட்சி நிா்வாக ங்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடலூர் உழவர் சந்தையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் சணல் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. #PlasticBan
     கடலூர்:

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடலூர் உழவர் சந்தையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேளாண் வணிக துணை இயக்குனர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவி வேளாண்மை அலுவலர்கள் சீனிவாசன் பாரதி, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மண்வளம் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து வருங்காலங்களில் துணி பைகள், சணல் பைகள் ஆகியவற்றை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மற்றும் மண்வளத்தை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கூறப்பட்டது.

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக சணல் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உழவர் சந்தை ஊழியர்கள் கலந்து கொண்டனர். #PlasticBan
    ×