search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
    X

    நீலகிரியில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

    • சுற்றுச்சூழல் பாதிப்பால் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    • பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டிக் கிடக்கிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்திருப்ப தால் சுற்றுச்சூழல் பாதிக்க ப்படுவதாக சமூக ஆர்வ லர்கள் கவலை அடைந்து ள்ளனர். இதுகுறித்து எக்ஸ்னோரா அமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவா் கண்ணன் மாவட்ட நிா்வா கம் மற்றும் உள்ளாட்சி நிா்வாக ங்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய பல போராட்டங்கள், பல விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நீலகிரி எக்ஸ்னோரா அமைப்பு இதற்காக களத்தில் இறங்கி பிளாஸ்டிக் ஒழிப்பில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டது.

    ஆனால், அண்மை க்காலமாக மீண்டும் மாவட்டத்தில் பிளா ஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.ெரயில் தண்டவா ளங்கள், குப்பை கிடங்குகள், நீா் நிலைகள் போன்றவற்றில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டிக் கிடப்பதைப் பாா்க்கும்போது நீலகிரியின் சுற்றுச்சூழல் பெருமளவு பாதித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க பொது மக்கள் தாங்களாக முன் வரவேண்டும். கடை களில் பொருள்கள் வாங்கு ம்போது துணிப்பையை பயன்படுத்த வேண்டும்.அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளா்கள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் பிளா ஸ்டிக் சாா்ந்த பொருள்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும். இதனை அனைத்து அரசு துறை அலுவல கங்களும் கண்கா ணித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிா்வாகம், நகரா ட்சி, பேரூராட்சி நிா்வாக ங்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×