என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீலகிரியில்"
- கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.
- விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, வெளிமாநில மற்றும் பிற மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் கல்லட்டியில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி;
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.
அபாயகரமான மற்றும் செங்குத்தாக சாலை செல்கிறது. இதனால் வாகனங்களை முதல் மற்றும் இரண்டாவது கியரில் மட்டும் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மலைப்பாதையில் வாகனங்கள் இயக்கி அனுபவம் இல்லாதவர்கள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது. விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்வதால் கல்லட்டி மலைப்பாதையில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.
இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, வெளிமாநில மற்றும் பிற மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் கல்லட்டியில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. குவிலென்ஸ் பொருத்தும் பணி நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் இருபுறமும் சென்று வர அனுமதி உள்ளது.
இந்தநிலையில் நேற்று கல்லட்டி மலைப்பாதையில் கார் ஒன்று பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால், கார் சேதமடைந்தது.
விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்லட்டி மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் குவிலென்ஸ் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதன் மூலம் கீழ் இருந்து மேல் நோக்கி வரும் வாகனங்களை, முன்கூட்டியே பார்த்து சிறிது தொலைவில் வாகனங்களை நிறுத்தி வழிகொடுக்க முடியும். மேலும் வளைவில் வாகனங்கள் திரும்பும்போது விபத்து ஏற்படாமல் இருக்கும். 36 கொண்டை ஊசி வளைவுகளில் புதிதாக குவிலென்ஸ் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கொண்டை ஊசி வளைவுகளில் பொருத்தப்பட்ட குவிலென்சுகள் சேதமடைந்தது. அதனால் தற்போது புதிதாக குவிலென்ஸ் பொருத்தப்பட்டு வருகிறது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்