search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க   1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் ெதாடக்கம்
    X

    நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் ெதாடக்கம்

    • சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நடைபெற்றது
    • மீண்டும் மஞ்சப்பை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு

    ஊட்டி:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நடைபெற்றது.

    பேரணியை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி சேரிங்கிராஸ் வழியாக தாவரவியல் பூங்கா வரை சென்றது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.அவர்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அம்ரித் மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடும் நாளில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் ஒரே பூமி என்ற கருபொருளை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மீண்டும் மஞ்சப்பை குறித்து மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டது. நீலகிரியில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிபிலா மேரி, உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×