என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nepal"
- காத்மாண்டு பகுதியில் காலராவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவுக்கு உணவு பிரியர்கள் எதிர்ப்பு.
காத்மாண்டு:
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் நொருக்கு தீனி வகைகளில் பானிபூரி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மாலை வேலைகளில் ஏராளமானோர் பானி பூரி கடைகளுக்கு படையெடுப்பது அதிகரித்து வரும் நிலையில், நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டு பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான பானிபூரி விற்பனை கடைகள் உள்ளன. இங்கு அச்சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் லலித்பூர் பகுதியில் காலாரா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 19ந் தேதி ஒருவருக்கு காலார பாதிப்பு நோய் ஏற்பட்ட நிலையில், தற்போது 12க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் எட்டு பேர் குணமடைந்த வீடு திரும்பினர். மேலும் நான்கு பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாக்பஜாரில் இருவர் காலராவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஒருவாரம் பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் முடிவு செய்தனர். எனினும் இதற்கு உணவு பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு முற்றிலும் பொருத்தமற்றது என்றும், இது சிறு வணிகம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனறும், அதற்கு பதில் சுகாதாரமான தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக நேபாளம் முழுவதும் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் காரணமாக 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வரையில் 911 பேர் சுகாதார சீர்கேட்டால் இறந்துள்ளனர்.
இந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் குழுவினர் ஏறி வருகின்றனர். இந்தநிலையில் சிகரத்தில் ஏறிய இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் பிணமாக கிடந்தனர்.
அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு மலை முகாமில் வைத்தனர். பின்னர் காத்மாண்டுவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு 2 பேரின் உடல்களும் ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கப்பட்டது. கடும் குளிர் ஏற்பட்டதாலும், உடலில் வெப்பம் குறைந்ததாலும் 2 பேரும் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
உலகின் 3-வது மிக உயர்ந்த சிகரம் என்ற பெருமையை கொண்டது நேபாள நாட்டில் உள்ள கஞ்சன்ஜங்கா. 8 ஆயிரத்து 586 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் ஏறி வருகின்றனர்.
அந்தவகையில் 4 இந்தியர்கள், ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் என 5 பேர் கொண்ட குழு கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறியது. கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டனர். எனினும் அவர்களில் பிப்லாப் பால்தியா (வயது 48) சிகரத்தை தொட்டார். மற்றவர்கள் பாதி வழியிலேயே நின்று விட்டனர்.
பின்னர் அனைவரும் கீழே இறங்கி வரும் போது அதில் பிப்லாப் பால்தியா, குண்டால் கரார் (46) ஆகியோர் உடல்நலம் பாதிப்பால் இறந்தனர். மற்ற 3 பேரும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் முகாமுக்கு திரும்பினர்.
இதனிடையே மற்றொரு குழுவில் இருந்த சிலி நாட்டை சேர்ந்தவர் கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறிய போது மாயமானார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
உலகின் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபாளத்தில் அமைந்துள்ளது. உலகில் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்சுங்கா மலை, கிழக்கு சிக்கிமுடனான எல்லையில் அமைந்துள்ளது.
இதையடுத்து மாயா குருங், சர்மிளா தபா, மிலன் தமங் ஆகிய 3 மலையேறும் வீரர்களும் நேற்று முதன்முறையாக சிகரத்தின் உச்சியினை அடைந்து சாதனை படைத்துள்ளனர். இந்த சிகரத்தின் உச்சியில் மனிதர்களின் கால் தடம் பதிந்துள்ளது இதுவே முதன்முறையாகும் என ஜுகால் கிராமப்பகுதி அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் காத்மண்ட்டிலிருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் சிந்துபல்ஜோக் மாவட்டத்தில் உள்ள இந்த மலை, மலையேறும் வீரர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Gyalzenpeak #ReachedByThree
காத்மாண்டு:
நேபாளத்தில் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடிப்பில் அதன் அருகே இருந்த கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் வீட்டு கதவுகள் அதிர்ந்தன. #Bombblast
நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள கிருஷ்ணா சென் இச்குக் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பஸ்சில் கல்விச் சுற்றுலா சென்று இருந்தனர்.
பல இடங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மலைப் பாதையில் ராம்ரி கிராமம் அருகே வந்தபோது பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் ரோட்டோரம் இருந்த 1,640 அடி பள்ளத்தாக்கில் தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 23 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மாணவர்களும்- கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் அடங்குவர்.
இவர்கள் தவிர படுகாயமடைந்த சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
நேபாளத்தில் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நடைபெறுகிறது. கடந்த வாரம் மலைப் பாதையில் பஸ் உருண்டதில் 16 பேர் பலியாகினர். அங்குள்ள மோசமான ரோடுகளால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன. #NepalBusAccident
நேபாள நாட்டில் இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அங்கு இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்.
கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார். புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
அதன்பின் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது நேபாளத்தில் புழக்கத்தில் இருந்து வந்தன.
இந்த நிலையில் இந்திய 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேபாள தகவல் மற்றும் தொடர்பு துறை மந்திரி கோகுல்பிரசாத் பஸ்கோடா கூறியதாவது:-
நேபாளத்தில் இந்திய அரசின் 200, 500, 2000, ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்படுகிறது.
அதை மக்கள் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டாம்.
200, 500, 2000 இந்திய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த நேபாளத்தில் சட்டப்பூர்வம் ஆக்கவில்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில் இந்திய 100 ரூபாய் நோட்டுக்களை மட்டும் மக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
வருகிற 2020-ம் ஆண்டு “விசிட்நேபாள்” என்ற பெயரில் நேபாள திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு இந்த ரூபாய் நோட்டு தடை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நேபாள நாட்டில் கோடிக்கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தேங்கின. அதை இதுவரை இந்திய அரசு நேபாள ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த நேபாள அரசு இந்திய புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய எல்லை பகுதி மாநிலங்களில் நேபாள மக்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இந்திய ரூபாய் நோட்டுகளையே பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேபாளத்தில் இந்திய புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து இருப்பதால் இந்தியா- நேபாளம் இடையே வர்த்தகம் செய்யும் வியாபாரிகளும், அதை பயன்படுத்தும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. #IndianRupee #nepal
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்