search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "up cm"

    • கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தியதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
    • தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

    சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினத்தையொட்டி மாநில சுகாதார அமைச்சர்களின் 2 நாள் மாநாடு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் உரையாற்றிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது:

    கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தியதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கொரோனாவிற்கு எதிரான இந்திய தடுப்பூசி உலகிற்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட்டது. தரமான தடுப்பூசிகளை இந்தியா தயாரித்துள்ளது. அதன் செயல்திறன் உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை விரைந்து சீரமைக்க கொரோனா தொற்று நோயை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டது. 


    2014 ஆம் ஆண்டில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. விரைவில் நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கும் தருவாயில் உள்ளன. மத்திய அரசின் மருத்துவ சேவைத்திட்டம், ஊட்டச்சத்து திட்டம் மற்றும் தடுப்பூசித் திட்டம் போன்ற முதன்மைத் திட்டங்கள் சுகாதாரத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா, சிக்கிம் சுகாதாரத்துறை அமைச்சர் எம் கே ஷர்மா, உத்தரகாண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் மற்றும் சிக்கிம் சுகாதாரத்துறை அமைச்சர் சபன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை பணமில்லா மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது.
    • கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படுகிறது.

    உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 22 லட்சம் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் உட்பட 75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பணமில்லா மருத்துவ வசதி வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

    தீன் தயாள் உபாத்யாயா அரசு ஊழியர்களுக்கான பணமில்லா மருத்துவத் திட்டத்தின் கீழ், அரசு நடத்தும் நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள தகுதியானவர்கள் எந்தவித நிதி வரம்பும் இல்லாமல் பணமில்லா மருத்துவ வசதிகளைப் பெறுவார்கள்.

    மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை பணமில்லா மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது.

    இத்திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தீன் தயாள் உபாத்யாயா அரசு ஊழியர்களுக்கான பணமில்லா மருத்துவத் திட்டத்தின் கீழ், தகுதியான பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாநில சுகாதார அட்டை வழங்கப்படும்.

    மாநில சுகாதார அட்டையை தாங்களாகவே பதிவிறக்கம் செய்து, அரசு அல்லது எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா மருத்துவச் சிகிச்சையின் பலனைப் பெறும் வகையில் செயல் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

    'பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.

    மாநிலத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பங்களுக்கு முக்யமந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

    மேலும், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படுகிறது.

    தனது முந்தைய ஆட்சிக் காலத்திலேயே, மாநில அரசு ஊழியர்களுக்கு ரொக்கமில்லா மருத்துவ வசதிகளை வழங்குவதற்கான செயல் திட்டத்தைத் தயாரிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு தனது அரசு அறிவுறுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு.
    • அசம்பாவிதங்களை தடுக்க ஹெலிகாப்டரை உடனியாக வாரணாசியில் தரை இறக்கம்.

    உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வாரணாசிக்கு சென்றிருந்தார். அங்கு, காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ததோடு, ஆய்வுக் கூட்டமும் நடத்தினார்.

    பின்னர், வாரணாசியில் இருந்து லக்னோவிற்கு யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது, ஹெலிகாப்டர் வானில் பறந்தபோது எதிர்பாராதவிதமாக பறவை ஒன்று மோதியது. இதில் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அசம்பாவிதங்களை தடுக்க ஹெலிகாப்டரை உடனியாக வாரணாசியில் தரை இறக்கப்பட்டது. இதனை அம்மாவட்ட ஆட்சியர் கவுஷல்ராஜ் சர்மா தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து உரையாடினார்.
    • செய்தித்தாள்களை படிப்பதன் மூலம், வரவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு நீங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பீர்கள்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து உரையாடினார்.

    அப்போது பேசிய அவர், மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் என்பதால் மாணவர்கள் நூலகங்களுக்கு சென்று செய்தித்தாள்களை தவறாமல் படிக்க வேண்டும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    மாணவர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மாணவர்கள் பிரதமர் மோடிக்கு அவர் தொடங்கியுள்ள திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து அஞ்சல் அட்டைகளை அனுப்ப வேண்டும்.

    செய்தித்தாள்களை படிப்பதன் மூலம், வரவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு நீங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பீர்கள். மாநில அரசின் அப்யுதயா திட்டம் மாணவர்கள் அவர்கள் எழுதத் திட்டமிட்டுள்ள பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குச் சித்தப்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேபாள நாட்டின் ஜனக்புரியில் நடைபெற்ற சீதா கல்யாண உற்சவத்தில் உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு ராமர்-சீதாதேவியை வழிபட்டார். #NepalSitadeviTemple #YogiAdityanath
    காத்மண்டு:

    நேபாள நாட்டின் ஜனகபுரியில் அமைந்துள்ளது சீதாதேவி கோவில். இது ராமரின் மனைவியான சீதாதேவியின் பிறந்த ஊராக கருதப்படுகிறது. இங்கு அமைந்துள்ள சீதாதேவி கோவிலுக்கு பலரும் வந்து சென்று வழிபடுவது வழக்கம்.

    விவாஹ பஞ்சமியை முன்னிட்டு இந்த கோவிலில் சீதா கல்யாணம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



    இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். சீதா கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத் ராமர் - சீதாதேவியை வழிபட்டார். #NepalSitadeviTemple #YogiAdityanath
    உணவுப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு சரியான ஒத்துழைப்பு இல்லாததால் வெளியேறப் போவதாக பதாஞ்சலி நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், உ.பி அரசு அசுர வேகத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. #Patanjali
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் யமுனை விரைவுச்சலை பகுதியில்  6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உணவுப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க பதஞ்சலி நிறுவனம்  திட்டமிட்டிருந்தது. இதற்கு யமுனை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனையடுத்து, உ.பி.யில் உணவுப்பூங்கா அமைப்பதை கைவிடுவதாகவும், இந்த தொழிற்சாலையை மற்றொரு மாநிலத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருவதாக பதாஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால கிருஷ்ணா நேற்று தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், பதாஞ்சலி நிறுவனத்தின் உணவுப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு தேவையான ஒப்புதல்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். “பதாஞ்சலி நிறுவனம் மாநிலத்தை விட்டு வெளியே போக விடமாட்டோம். இதற்கு தேவையான எல்லா நடவடிக்கையும் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என அம்மாநில தொழில்துறை மந்திரி சதிஷ் மஹானா தெரிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேச அரசின் இந்த விரைவான முடிவால், தனது முந்தைய முடிவை பதாஞ்சலி நிறுவனம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க நீண்ட காலம் எடுத்து கொள்ளும் அரசுகள் இருக்கும் நிலையில், பதாஞ்சலி நிறுவனத்தின் திட்டத்திற்கு ஒரே நாளில் உ.பி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×