search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murdered"

    பழனி அருகே ஒரே நாளில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    பழனி:

    பழனி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் சுல்தான். இவருக்கு 3 மனைவிகள். 3-வது மனைவியின் மகன்கள் தாஜூதீன் (வயது45), கமருதீன் (40), ஜாகீர்உசேன் (38). தாஜூதீன் ஆயக்குடியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    மற்ற 2 பேரும் வேலைக்கு செல்லாமல் பூர்வீக சொத்தை அனுபவித்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. முதல் மனைவியின் மகன் ஜாபர் அலி. இவர் கமருதீன் மற்றும் ஜாகீர்உசேனிடம் சொத்தை பிரித்து தரக்கோரி சமரசம் பேசி உள்ளார்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த 2 பேரும் நேற்று இரவு உன்னால்தான் இந்த பிரச்சினை என்று தாஜூதீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாஜூதீனை சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தாஜூதீன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜாகீர்உசேன், கமருதீன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    பழனி அடிவாரம் அருகே உள்ள மருத்துவ நகரை சேர்ந்தவர் சங்கர் (30). இவர் அமரப்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று இரவு திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது காரில் வந்த 3 மர்ம நபர்கள் சங்கரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டி.எஸ்.பி. விவேகானந்தன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை பழிக்கு பழியாக நடந்தது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாலசமுத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சிறைக்கு சென்ற சங்கர் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளார்.

    இதனை அறிந்த மர்ம கும்பல் அவரை பழிக்கு பழியாக வெட்டி கொன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒரே நாளில் 2 கொலைகள் நடந்துள்ளது பழனி பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை அருகே மாயமான சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சிறுமி நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் இருந்த அவர் விளையாடுவதற்காக வெளியே சென்றார்.

    ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் சிறுமி திரும்பி வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை இவர்களது வீட்டின் அருகே உள்ள சந்தில் சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் 40-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும். சிறுமியின் சாவுக்கு நீதி வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    பாளை அருகே கல்லூரி மாணவர் கொலையில் சந்தேகப்படும்படியாக உள்ள 19 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    பாளையங்கோட்டை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்தவர் உஜயகுமார். இவர் முக்கூடலில் உள்ள இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜா (வயது19). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவர் ராஜா, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    முன்னீர்பள்ளம் சிவன் கோவில் அருகே வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு, கால்வாய் கரை வழியாக தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜா ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ராஜாவின் உறவினர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து ராஜாவின் உடலை சுற்றி அமர்ந்து கதறி துடித்தனர். சம்பவ இடத்துக்கு முன்னீர்பள்ளம் போலீசார் விரைந்து வந்து கொலையான ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர்.

    ஆனால் பொதுமக்கள் ராஜாவின் உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். அவரது உடலை ஏற்ற வந்த ஆம்புலன்ஸ் வேனையும் முற்றுகையிட்டு சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் முன்னீர்பள்ளம் மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், சேரன்மகாதேவி உதவி சூப்பிரண்டு ஆசிஸ் ராவத் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கற்களை எடுத்து வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டத்தை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் கழித்து கொலை செய்யப்பட்ட மாணவர் ராஜா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை செய்ய நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பொதுமக்களும் மறியல் போராட்டத்தை கைவிட்டதால், போக்குவரத்து சீரானது.

    கொலையாளிகளை கைது செய்ய முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது கொலைக்கான காரணம் குறித்து ‘திடுக்’ தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ராஜாவின் உறவினர் இயற்கை மரணம் அடைந்தார். அவரது உடலை இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லும்போது, ராஜாவும் அவரது நண்பர்களும் பூக்களை வீதியில் வீசி சென்றனர்.

    அப்போது மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் பூ விழுந்துள்ளது. அந்த பூக்களை வேண்டும் என்றே வீசியதாக 2 தரப்பினரும் வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ராஜாவுக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டது.

    உடனடியாக இருதரப்பு பெரியவர்களும் பேசி சமரசம் செய்து வைத்தனர். இந்த பிரச்சினை காரணமாக ராஜாவை, மற்றொரு தரப்பினர் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், கொலையில் ஈடுபட்டது யார்? யார்? என்று அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகப்படும்படியாக உள்ள 19 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் கொலையில் ஈடுபட்டது யார்? யார்? என்றும், அவர்கள் எங்கு தலைமறைவாக உள்ளனர் என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராஜாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், அந்த பகுதி பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அவர்களுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட ராஜாவின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த பிரச்சினை காரணமாக முன்னீர்பள்ளம் பகுதியில் இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



    புதுவை அருகே வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்னகோட்டக்குப்பத்தில் தனியார் கெஸ்ட் அவுஸ் உள்ளது. பல ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ள கெஸ்ட்அவுசில் நீச்சல்குளம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    அதற்காக வட மாநிலத்தை சேர்ந்த பலர் தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். அதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த விபின்சர்க்கார் (வயது 47) இவருடைய சித்தப்பா மகன் கெரன் பிஸ்வாஸ் (37) இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

    இதில் கெரன் பிஸ்வாஸ்க்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கோபம் அடைந்த விபின்சர்க்கார் நாம் வேறு மாநிலத்தில் இருந்து வந்து வேலை செய்கிறோம். தினமும் மது குடிக்காமல் பணத்தை சேர்த்து வைத்து வீட்டுக்கு அனுப்புமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கெரன் பிஸ்வாஸ் விபின்சர்க்காரை சரமாரியாக தாக்கினார்.

    இதனால் ஆத்திரமடைந்த விபின்சர்க்கார் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து கெரன் பிஸ்வாஸ் முகம் மற்றும் பல இடங்களில் கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கெரன் பிஸ்வாஸ் துடிதுடித்து இறந்து போனார்.

    இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபின்சர்க்காரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே தனியார் மில்லில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    ஒடிசா மாநிலம் பாலிமோரி மாவட்டம் செம்பூரைச் சேர்ந்தவர் அனிஸ்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சோனி (வயது 19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் திண்டுக்கல் அருகே மினுக்கம்பட்டியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

    மில் நிர்வாகம் சார்பில் ஒதுக்கப்பட்டிருந்த விடுதியில் அவர்கள் தங்கி இருந்தனர். இன்று காலை சோனி தனது அறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் இளம்பெண் எவ்வாறு இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழனி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    போரூரில் பஸ் கண்டக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    போரூர், சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது45). ஐயப்பந்தாங்கல் பணிமனையில் மாநகர பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று முன்தினம் நண்பருடன் வெளியே சென்ற மதிவாணன் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை போரூர் ஆற்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதிவாணன் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போரூர் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மதிவாணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது நேற்று முன் தினம் முன்பு மதிவாணன் நண்பர் ஒருவருடன் போரூர் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்றதும், அங்கு ஏற்பட்ட தகராறில் அவர் கொடூரமாக தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது.

    மதிவாணனுடன் சென்ற நண்பர் யார் என்று தெரியவில்லை. அவர் மதிவாணனை கொலை செய்து தப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

    இதற்கிடையே அப்பகுயில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொலையாளி உருவம் பதிவாகி உள்ளது. அதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தக்கறை படித்த சட்டையை கழற்றி விட்டு புதிய சட்டையை மாற்றிக் கொண்டு செல்கிறார்.

    மேலும் மதிவாணனின் செல்போனையும் கொலையாளி எடுத்துச்சென்று உள்ளார். இதனை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    முன்விரோதம் காரணமாக மதிவாணன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை காரணமா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.

    கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது.
    கோவை:

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 56). கொலை வழக்கு ஒன்றில் கைதான இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை ராமசாமிக்கு மாரடைப்பு ஏற்பட் டதாக கூறி அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் இயற்கை மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ராமசாமியின் உடல் பிரேத பரிசோதனையின் போது பின்தலை உள்பட சில இடங்களில் காயம் இருந்தது தெரிய வந்தது. இதையறிந்த போலீசார் சிறைக்கு சென்று ராமசாமியுடன் தங்கி இருந்த சக கைதிகளான ரமேஷ்(30), சுப்பிரமணி(32) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிறையில் சக கைதி ரமேஷ் என்பவருக்கும் ராமசாமிக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது தெரிய வந்தது. ரமேஷ் மீது ஏற்கனவே சிறை ஊழியரை தாக்கியதாக புகார் உள்ளது. எனவே முன்விரோதம் காரணமாக ராமசாமியை ரமேஷ் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, கைதி மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அறிக்கை கிடைத்ததும் அதை வைத்து மாஜிஸ்திரேட்டு விசாரணை அறிக்கை தருவார். அந்த அறிக்கையில் அடிப்படையில் தான் இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்படுமா? என்பதை கூற முடியும் என்றனர்.
    திருவிடைமருதூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #TeacherMurdered
    திருவிடைமருதூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (வயது 24). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று உமா மகேஸ்வரபுரம் காவிரி ஆற்றின் படித்துறையில் வசந்தபிரியா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ஆசிரியை வசந்தபிரியாவுக்கும், வலங்கைமானை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த மாதம் 28-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வசந்தபிரியா நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார்.

    மாலையில் பள்ளி முடிந்ததும் பள்ளியில் இருந்து புறப்பட்ட அவர் வீட்டுக்கு செல்லவில்லை. சம்பந்தமே இல்லாமல் காவிரி ஆற்றின் படித்துறையில் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

    அங்கு யாருடன் அவர் வந்தார்? அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. கொலை நடந்த இடத்தில் 2 செல்போன்கள், பேனா கத்தி ஆகியவை கிடந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்கள். #TeacherMurdered

    குடும்பம் நடத்த இடையூறாக இருந்ததாக நினைத்து பெற்ற குழந்தையை தாயே கணவருடன் சேர்ந்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியை சேர்ந்தவர் திவாகரன்(வயது 26). சரக்கு வேன் டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சுபாஷினியும்(19) காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக கூறி சுபாஷினியுடன் திவாகரன் நெருங்கி பழகியுள்ளார்.

    இதனால் சுபாஷினி கர்ப்பம் அடையவே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திவாகரனை வலியுறுத்தி உள்ளார். திருமணம் செய்ய மறுக்கவே பிரச்சினை வெடித்தது.

    இது குறித்து சுபாஷினி இருக்கன்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திவாகரனை சிறையில் அடைத்தனர்.

    கர்ப்பமாக இருந்த சுபாஷினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே சிறையில் இருந்த திவாகரன் ஜாமீனில் வெளியே வந்தார். மீண்டும் சுபாஷினியுடன் நெருங்கி பழகினார். தான் செய்த தவறை திருத்தி கொள்வதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து நடந்த 5 நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இருக்கன்குடி போலீசில் நிலையத்தில் போலீசார் திருமணம் செய்து வைத்தனர்.

    திருமணம் முடிந்த பின்னர் திவாகரன் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என சுபாஷினியுடன் அடிக்கடி தகராறு செய்தார். இந்த நிலையில் நேற்று காலை குழந்தையின் கண், மூக்கில் மிளகாய் பொடி தூவப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து கிடந்தது.

    தகவல் அறிந்த இருக்கன்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது திவாகரன் தலைமறைவாகி இருந்தார். எனவே அவர் தான் குழந்தையை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. போலீசார் விரைந்து செயல்பட்டு திவாகரனை பிடித்தனர்.

    இதை தொடர்ந்து திவாகரன், சுபாஷினி இருவரையும் போலீசில் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் சுபாஷினியே குழந்தையே கொலை செய்தது தெரியவந்தது. என் கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தை தனக்கு பிறக்கவில்லை. என கூறி பிரச்சினை செய்து வந்தார்.

    குடும்பம் நடத்த குழந்தை தானே பிரச்சினை என கருதி குழந்தையை கொலை செய்தேன். இதற்கு உடந்தையாக கணவரும் இருந்ததாக சுபாஷினி வாக்குமூலத்தில் கூறி உள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் கணவன்-மனைவியை கைது செய்தனர். பச்சிளம் குழந்தையை பெற்றோரே கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    திருப்பத்தூர் அருகே அங்கன்வாடி பெண் ஊழியரை அவரது கள்ளக்காதலன் கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாபட்டு ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி சுதா (வயது 32). அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளராக உள்ளார். 7 வயதில் 1 மகள் உள்ளார்.

    கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பசுபதி இறந்துவிட்டார். இதனையடுத்து சுதா அவரது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று அங்குள்ள பாம்பாறு ஆற்றில் உள்ள ஒரு பள்ளத்தில் சுதா தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இதனால் அவரது உடல் முழுவதும் ரத்தம் காணப்பட்டது. இதனை கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் குரிசிலாபட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த டெய்லர் சதீஷ் (32) என்பவருக்கும் கள்ளதொடர்பு இருந்தது தெரியவந்தது.

    போலீசார் சதீசை பிடித்து கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். இதில் சுதாவை சதீஷ் கொலை செய்தது தெரியவந்தது.

    கணவனை இழந்து தனிமையில் இருந்த சுதாவுக்கும் சதீசுக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. சதீஷ் சுதாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு சுதாவின் வீட்டுக்கு சதீஷ் வந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்து ஆண் ஒருவர் வேகமாக வெளியேறி சென்றார்.

    அவர் யார் என்பது குறித்து சதீஷ் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    சுதாவின் நடத்தையில் சதீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நேற்று இரவு சுதாவை அவரது மோட்டார் சைக்கிளில் பாம்பாற்றுக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுதாவின் தலையில் கல்லை போட்டு சதீஷ் கொலை செய்துள்ளார்.

    அவரது உடலை ஆற்றில் உள்ள பள்ளத்தில் தூக்கிபோட்டு விட்டு சேலையால் உடலை மூடிய சதீஷ் அங்கிருந்து புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள கிணற்றுக்குள் தள்ளிவிட்டுவிட்டு சதீஷ் வீட்டுக்கு சென்று எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார்.

    இந்த தகவல்களை சேகரித்த போலீசார் சதீசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    புதுடெல்லியில் தனது மாற்றுத் திறனாளியான 40 வயது மகளும், அவரது 60 வயது தாயும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். #Delhi
    புதுடெல்லி:

    புதுடெல்லியில் உள்ள மியான்வாளி என்ற பகுதியில் 60 வயது மூதாட்டி தனது மாற்றுத் திறனாளியான 40 வயது மகளுடன் வசித்து வந்தார். இன்று காலை அவர்களது வீட்டில் வேலை பார்ப்பவர் வழக்கம்போல் வேலைக்கு வந்து கதவை தட்டும்போது கதவு திறக்கப்படவில்லை. உடனே பின்பக்க கதவு வழியாக சென்ற அவர், தாயும், மகளும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இதையடுத்து உடனடியாக டெல்லி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு கைகளும், வாயும் துணியால் கட்டப்பட்ட நிலையில் தாய் ஷாஷி டல்வார் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மாற்றுத் திறனாளியான அவரது மகளோ கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.



    இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில், ஷாஷி டல்வாரின் கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்ததாகவும், 2 மகன்கள் மும்பை மற்றும் கனடாவில் இருப்பதாகவும், இவர்கள் மட்டுமே தனிமையில் வசித்து வந்ததாகவும் கூறுயுள்ளனர்.

    மேலும், சம்பவ இடத்தில் தீவிரமாக சோதனையிட்ட அதிகாரிகள், நட்பு ரீதியாக உள்ளே நுழைந்த யாரோதான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் எனவும், அப்பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொலையாளியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    தனிமையில் வசித்து வந்த இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் இரவோடு இரவாக கொல்லப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
    உத்தரபிரதேசத்தில் பிதுனாவில் உள்ள கோவில் வளாகத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்த சாமியார்களை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh #PriestMurder
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் பிதுனா என்னும் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு கோவில் வளாகத்திற்குள் நேற்று புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்த 3 சாமியார்களை சரமாரியாக கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த சாமியார்கள் லஜ்ஜா ராம் (வயது 65), ஹல்கே ராம் (53) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். ராம்ஷரண் (56) என்ற மற்றொரு சாமியார் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் காட்டுத்தீ போல் மாநிலம் முழுவதும் பரவியது. இந்த நிலையில் பிதுனா நகரில் ஒரு கும்பல் பயங்கர வன்முறையில் ஈடுபட்டது. குறிப்பிட்ட சில கடைகளை அந்த கும்பல் தீவைத்து கொளுத்தியது. மேலும் கற்களை வீசி தாக்குதலும் நடத்தியது. இதனால், அவர்களை விரட்டியடிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அங்கு கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    கொல்லப்பட்ட சாமியார்கள் இருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவருக்கு ரூ.1 லட்சமும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். #UttarPradesh #PriestMurder  #tamilnews

    ×